<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முதல்வர் மு.க. ஸ்டாலின் மடலில் ஒன்றியமும் தேசமும் - பெ. மணியரசன்

Wednesday, June 9, 2021



முதல்வர் மு.க. ஸ்டாலின் 
மடலில் ஒன்றியமும் தேசமும்

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பெருந்தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், சிறு – குறு – நடுத்தரத் தொழில் முனைவோரும், சிறு கடனாளர்களும் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு வாங்கிய ஐந்து கோடி ரூபாய் வரை பாக்கியுள்ள கடன் தவணைகளில் நடப்பு நிதியாண்டில் (2021 – 2022) முதல் இரு காலாண்டுகளில் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்தாமல் தள்ளி வைக்க இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். 

இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசுக்கு அனுப்புமாறு கேட்டு, ஆந்திரப்பிரதேசம், பீகார், சத்தீசுகட், டெல்லி, ஜார்கண்ட், கேரளம், மகாராட்டிரம், ஒடிசா, பஞ்சாப், இராசஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் மடல் எழுதியுள்ளார். 

இம்மடலில் மு.க. ஸ்டாலின் இந்திய அரசு, ஒன்றிய அரசு என்ற சரியான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். நடுவண் அரசு (மத்திய அரசு) என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை!

ஆனால், இச்செய்தியை 09.06.2021 அன்று வெளியிட்ட ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகள் மத்திய அரசு என்ற சொல்லையே பெரும்பாலும் பயன்படுத்தின. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி ஒன்றிய அரசு என்றோ, அல்லது இந்திய அரசு என்றோ பயன்படுத்துவது சட்டப்படியான வடிவமாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, ஒற்றையாட்சிக்குரிய “மத்திய அரசு” என்ற சொல்லைப் பயன்படுத்தியது  சரியன்று.  

காட்சி ஊடகங்களும், ஏடுகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்திய ஒன்றிய அரசு, இந்திய அரசு என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது இதழியல் அறமாகாது! 

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கட்கு ஓரு வேண்டுகோள்

நீங்கள் 12 முதலமைச்சர்களுக்கு எழுதிய மடலில் ஒன்றிய அரசு – இந்திய அரசு என்று பயன்படுத்திய சிறப்பிற்குப் பாராட்டுகள். அதேவேளை, அதே மடலில் “அனைத்திந்திய முடக்கம்” (All India Lockdown) என்று சொல்ல வந்த இடத்தில் “தேசம் தழுவிய முடக்கம்” (Nationwide Lockdown) என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நீண்டகாலப் பழக்கத்தின் காரணமாக இக்குறைபாடு வந்திருக்கலாம். 

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் (Nation) என்று குறிப்பிடவில்லை. இதுபோன்ற “தேசந்தழுவிய” (Nationwide) என்ற சொற்களைப் பயன்படுத்தாமலும் தவிர்க்க வேண்டுமாய்க் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து, தங்களின் இம்மடலை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்புத் துறையினர் ஆங்கிலத்தில் தங்கள் கடிதத்தை அப்படியே போட்டுள்ளனர். ஆனால் தமிழில், கடித விவரங்களைச் சுருக்கமாக அவர்கள் நடையில் எழுதி வெளியிட்டுள்ளனர். தமிழிலும் அசல் மடலை அப்படியே வெளியிடுவதே, தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்ட அரசின் கட்டாயக் கடமை என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்