<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, December 25, 2018


புதிதாக வரவுள்ள தனியார் தொழில் 
நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 
90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு 
நிபந்தனை விதிக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


நேற்று (24.12.2018) கூடிய தமிழ்நாடு அமைச்சரவை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் 16 தனியார் தொழிலகங்கள் தமிழ்நாட்டில் நிறுவிட அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 34 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இப்பதினாறு தொழிலகங்களில் தென் கொரியா தொழிலகங்கள் இரண்டின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

இத்தொழிலகங்களுக்கான அனுமதியை வழங்கும்போது, அவை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களா என்பதையும், அந்நிறுவனத்தின் கடந்த கால வரலாற்றையும் பார்த்து, அதற்கேற்ப தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும். ஆபத்தான தொழில் நுட்பம் எனில், அத்தொழிலகங்களுக்கு தொடக்கத்திலேயே அனுமதி மறுக்க வேண்டும்.

இப்போது வரவுள்ள புதிய தொழிலகங்கள், தமிழ்நாட்டின் மண்ணின் மக்களின் தொழில் – வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் இருக்குமா என்பதும் ஐயமாக உள்ளது.

பன்னாட்டு மற்றும் வெளி மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது போல் தெரிகிறது. அப்படியென்றால், தொழில் துறை வளர்ச்சியில் தமிழ்த் தொழில் முனைவோர் மேலும் மேலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடிய சூழல் உருவாகும்!

இதுவொருபுறம் இருக்க, 34,000 பேருக்கான வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை தரப்படுமா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் உரிய தகுதி பெற்று 90 இலட்சம் பேருக்கு மேல் வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு தனியார் வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும், மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்தியும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்த ஆவணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் வழங்கியுள்ளோம். கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைக்கு சட்ட ஏற்பாடு இருப்பதுபோல், தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரி வருகிறது.

அண்மையில், மத்தியப்பிரதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசு முதலமைச்சர் கமல்நாத், மத்தியப்பிரதேச மக்களுக்கு 70 விழுக்காடு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்குத் தான் தொழில் துறையில் ஊக்கங்களும், சலுகைகளும் அளிக்கப்படும் என அறிவித்தார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இவ்வளவு முன்னெடுத்துக்காட்டுகள் இருந்தும்கூட, தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்ட ஏற்பாடு செய்யாதிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, புதிதாக உருவாக்கப்படும் 34,000 வேலைகளில் 90% வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் அரசு அனுமதியும், சலுகைகளும் தர வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும்! -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


===================================
புதிதாக வரவுள்ள தனியார் தொழில்
நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு
90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு
நிபந்தனை விதிக்க வேண்டும்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
===================================

நேற்று (24.12.2018) கூடிய தமிழ்நாடு அமைச்சரவை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் 16 தனியார் தொழிலகங்கள் தமிழ்நாட்டில் நிறுவிட அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 34 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இப்பதினாறு தொழிலகங்களில் தென் கொரியா தொழிலகங்கள் இரண்டின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

இத்தொழிலகங்களுக்கான அனுமதியை வழங்கும்போது, அவை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களா என்பதையும், அந்நிறுவனத்தின் கடந்த கால வரலாற்றையும் பார்த்து, அதற்கேற்ப தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும். ஆபத்தான தொழில் நுட்பம் எனில், அத்தொழிலகங்களுக்கு தொடக்கத்திலேயே அனுமதி மறுக்க வேண்டும்.

இப்போது வரவுள்ள புதிய தொழிலகங்கள், தமிழ்நாட்டின் மண்ணின் மக்களின் தொழில் – வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் இருக்குமா என்பதும் ஐயமாக உள்ளது.

பன்னாட்டு மற்றும் வெளி மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது போல் தெரிகிறது. அப்படியென்றால், தொழில் துறை வளர்ச்சியில் தமிழ்த் தொழில் முனைவோர் மேலும் மேலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடிய சூழல் உருவாகும்!

இதுவொருபுறம் இருக்க, 34,000 பேருக்கான வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை தரப்படுமா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் உரிய தகுதி பெற்று 90 இலட்சம் பேருக்கு மேல் வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு தனியார் வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும், மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்தியும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்த ஆவணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் வழங்கியுள்ளோம். கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைக்கு சட்ட ஏற்பாடு இருப்பதுபோல், தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரி வருகிறது.

அண்மையில், மத்தியப்பிரதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசு முதலமைச்சர் கமல்நாத், மத்தியப்பிரதேச மக்களுக்கு 70 விழுக்காடு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்குத் தான் தொழில் துறையில் ஊக்கங்களும், சலுகைகளும் அளிக்கப்படும் என அறிவித்தார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இவ்வளவு முன்னெடுத்துக்காட்டுகள் இருந்தும்கூட, தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்ட ஏற்பாடு செய்யாதிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, புதிதாக உருவாக்கப்படும் 34,000 வேலைகளில் 90% வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் அரசு அனுமதியும், சலுகைகளும் தர வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

http://www.kannottam.com/2018/12/90.html

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: ,

மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது! பெ. மணியரசன் எச்சரிக்கை!

Monday, December 24, 2018

மேக்கேதாட்டு அனுமதி குறித்த
நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது!
தமிழ்நாட்டு நாடாளுமன்ற 
உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது!


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
பெ. மணியரசன் எச்சரிக்கை!

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்குரிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும், பதட்டத்தையும் உண்டாக்கியது.
இதற்குக் கண்டனம் தெரிவித்தும், இந்த அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த 18.12.2018 அன்று தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மேக்கே தாட்டு அணை கட்டும் அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்; நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தச் சிக்கலைப் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், அது தொடர்பாகப் பேசுவதற்கு வருமாறும் நாடாளுமன்றத்தில் நடக்கும் போராட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறும் கூறியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மேலும் அவர் மேக்கேதாட்டு அணை பாசனத்திற்கான நீர்த்தேக்கம் அல்ல என்றும், குடிநீருக்காகவும் மின்சார உற்பத்திக்காகவும்தான் என்று கர்நாடகம் கூறியுள்ளது. அதனால்தான் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க அனுமதி அளித்தோம். காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 4.75 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கூடுதலாகக் கர்நாடகத்துக்குக் கொடுக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நான்கு மாநிலங்களின் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் இந்திய அரசு அணை கட்ட அனுமதி அளிக்கும். எனவே, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கர்நாடகம் மேக்கேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதியை திரும்பப் பெறாமலேயே நிதின் கட்கரி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். அத்துடன், கர்நாடகம் அணை கட்டுவது பாசன நீரைத் தேக்குவதற்கு அல்ல, குடிநீருக்காகவும் மின்சாரம் தயாரிப்பதற்காகவும்தான் என்று நிதின் கட்கரி கூறுகிறார். கர்நாடக அரசு சூதாகச் சொல்லும் கூற்றை நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியும் அப்படியே கூறுவது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது!
தந்திரமாகத் தமிழ்நாட்டின் கவனத்தைத் திசைத்திருப்பி மேக்கேதாட்டு அணைக் கட்டுமான வேலைகளுக்கு தடங்கல் இல்லாமல் இந்திய அரசு பார்த்துக் கொள்கிறதோ என்ற வலுவான ஐயம் நமக்கு எழுகிறது.
எனவே, நடுவண் அரசு விரித்துள்ள வலையில் தமிழ்நாடு அரசும், அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்குக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறாத வரையில், அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நாடாளுமன்ற முடக்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டியதில்லை என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

மத்தியப்பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கே வேலை! தமிழ்நாட்டு இனத்துரோகிகள் திருந்துவார்களா? -- தோழர் பெ. மணியரசன்

Wednesday, December 19, 2018
==================================
மத்தியப்பிரதேசத்தில்
மண்ணின் மக்களுக்கே வேலை!
தமிழ்நாட்டு இனத்துரோகிகள்
திருந்துவார்களா?

==========================
========
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==========================
========

மத்தியப் பிரதேச காங்கிரசு முதலமைச்சர் கமல்நாத் பதவியேற்ற சில மணி நேரத்தில், “மத்தியப் பிரதேசத்தின் வேலை வாய்ப்புகளை உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்; மண்ணின் மக்கள் வேலை இல்லாமல் அலைகிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, மண்ணின் மக்களுக்கு 70% வேலை கொடுக்கும் தொழிற்சாலைகளுக்குத்தான் ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

.இது ஒன்றும் புதிய அறிவிப்பு அல்ல! மத்தியப் பிரதேசத்தின் “தொழில்துறை கொள்கை”யின் 2010ஆம் ஆண்டு திருத்தங்களின்படி, குறைந்தபட்சம் 50 விழுக்காடு மண்ணின் மக்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குதான் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை 70 விழுக்காடாக உயர்த்தி கமல்நாத் அறிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மண்ணின் மக்களுக்கே வேலை என்று முழக்கமிட்டால், எம்மை இனவெறியர்கள் என்று முத்திரை குத்தும் இந்தியத்தேசியவாதிகளும், இடதுசாரிகளும் சிந்திக்க வேண்டும்.

உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம் மூன்றும் இந்தி மொழி மாநிலங்கள்! இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசு முதலமைச்சர், தன் மாநில மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது பிற இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியப் பிரதேசத்தின் தனியார் துறை வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்ளக் கூடாது என்று கூறி, அதற்கான தீர்வையும் அறிவித்துள்ளார்.

பீகார், உத்திரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த பா.ச.க.வினரும், சமாஜ்வாதி கட்சியினரும், கமல் நாத்தின் இந்த முடிவை கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார்கள். இந்தக் கண்டனங்களுக்கு பீகார் மாநில காங்கிரசுக் கட்சியின் செயல் தலைவர் கௌகாப் காத்திரி, அந்தந்த மாநில மக்களுக்கு வேலை கொடுப்பது அந்தந்த மாநில அரசின் முன்னுரிமை என்றும் கமல்நாத் அறிவிப்பில் தவறில்லை என்றும் மறுமொழி கூறியுள்ளார்.

அவர் அதோடு நிற்காமல், பீகார் மாநிலத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டங்களை பீகார் மாநில அரசு செயல்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

குசராத்தில், மண்ணின் மக்களுக்கே வேலை என 1995ஆம் ஆண்டிலிருந்து அரசாணை செயலில் உள்ளது. 2017ஆம் ஆண்டு மே மாதம் (08.05.2017), அந்த ஆணையைக் கடைபிடிக்காத இந்திய அரசின் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக, குசராத் இளைஞர்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், குசராத் மாநில அரசு தானும் சேர்ந்து கொண்டு, மண்ணின் மக்களுக்குத்தான் வேலை அளிக்க வேண்டும் என வாதிட்டு வருகிறது.

தமிழர்களே - இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள்!

தமிழ்நாட்டில் நடுவண் அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்குத்தான் தர வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காட்டு வேலைகளையும், தனியார் துறையில் 90 விழுக்காட்டு வேலைகளையும் தமிழர்களுக்குத்தான் தர வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது.

இங்குள்ள இடதுசாரிகளும், இந்தியத்தேசியவாதிகளும் இந்தக் கோரிக்கையை எதிர்க்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டால், மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தங்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வளங்களையும் அயல் மாநிலத்தவர்க்கு வழங்கிவிட்டு, அகதிகளாக வேலை தேடி அலைய வேண்டிய அவலம்தான் மிஞ்சும்! பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்யும், அந்தக் குழப்ப வாதிகளின் சீர்குலைவுக் கருத்துகளுக்கு செவி கொடுக்காதீர்கள்!

திராவிட ஆட்சிகள் செய்தது என்ன?
--------------------------------------------------------
இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டங்களும், ஆணைகளும் இயற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு அப்படி எந்தவொரு சட்டமும் இல்லை! தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட திராவிட ஆட்சிகள் தமிழர்களை நாதியற்றவர்களாக்கி, தமிழ்நாட்டை அயல் இனத்தாரின் வேட்டைக்காடாக்கியுள்ளதை எண்ணிப் பாருங்கள்! மண்ணின் மக்களுக்கே வேலை என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தை எதிரொலியுங்கள்!

https://www.kannottam.com/2018/12/blog-post_19.html

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் இரவிசங்கர் தியானம் நடத்துவது தமிழ்ச் சைவ நெறிமுறைக்கு எதிரானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தவறானது! பெ. மணியரசன் அறிக்கை!

Sunday, December 9, 2018


தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் 
இரவிசங்கர் தியானம் நடத்துவது
தமிழ்ச் சைவ நெறிமுறைக்கு எதிரானது
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தவறானது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


மதுரை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை ஆணை பிறப்பித்ததால், திரு. இரவிசங்கர் தலைமையிலுள்ள “வாழும் கலை” அமைப்பின் தியானச் சடங்குகளும், பிரச்சாரமும் 2018 திசம்பர் 7 – 8 நாட்களில் தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் நடைபெறவில்லை. அதேவேளை, தஞ்சையில் தனியார் திருமண மண்டபத்தில் அவரின் இருநாள் தியானமும், பிரச்சாரமும் நடந்து முடிந்தன.
தியானம் முடிந்த பின் இரவிசங்கர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிவிப்பு பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. “நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலில் இதே தியானத்தை நடத்துவேன், தியானம் நடந்தால் கோயில் இடிந்து விடுமா” என்று இரவிசங்கர் ஊடகத் துறையினருடம் கேள்வி எழுப்பினார்.
இந்தப் பேச்சு ஓர் ஆன்மிகத் துறவியின் மனப்பக்குவத்தை – அமைதி நாடும் உளவியலை வெளிப்படுத்தவில்லை. ஆன்மிகத்தில் “அபசகுனம்” என்ற பழமொழி உள்ளது. கோயில் இடிந்து விடுமா என்று அலட்சியமாகக் கேட்பது இரவிசங்கரின் உள்ளக்கிடக்கையை வெளிப் படுத்துகிறதா என்ற வினா எழுகிறது. 
இவ்வாறு அவர் மீது ஐயப்படுவதற்கு இடம் கொடுக்கும் வகையில்தான், “வாழுங்கலை” அமைப்பின் தியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு சுவாமிநாதன் 07.12.2018 அன்று செய்தியாளர்களுக்குக் கொடுத்த அறிக்கையின் வாசகங்கள் இருக்கின்றன.

“தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராசராசசோழனின் ஆத்மா சாந்தியடையவில்லை. அது கோயிலுக்குள் சுற்றித் திரிகிறது. குருஜியிடம் (இரவிசங்கர்) உள்ள ஓலைச்சுவடிகள் மூலம் இந்தச் செய்தி தெரிய வந்தது. இராசராசன் ஆத்மா சாந்தியடையவும், பெரிய கோயிலுக்குள் உள்ள வேறு சில குறைகளை நீக்கவும் குருஜி இந்தத் தியானத்தை ஏற்பாடு செய்துள்ளார்” என்று சுவாமிநாதன் கூறியுள்ளார்.
“வாழுங்கலை” பற்றி மக்களுக்கு அறிவுரை வழங்குவது முகாமையான நோக்கமல்ல; ஒரு பேய் போல் கோயிலுக்குள் அலையும் இராசராசன் ஆத்மாவை அடக்குவது அல்லது வெளி யேற்றுவதற்குரிய மந்திரங்களை செபிப்பது என்பதுதான் மைய நோக்கம் என்று அந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கூற்றிலிருந்து தெரிகிறது.
எனவே, இரவிசங்கரின் தியான நோக்கம் பல்வேறு மர்மங்களைக் கொண்டுள்ளது. துறவியின் பரிபக்குவ மனநிலை என்பது, பகைவர்க்கும் அருளும் தன்மையாகும். ஆனால் இரவிசங்கர் பழிவாங்கும் வன்மத்துடன் அதே பெரிய கோயிலில் தியானத்தை நடத்திக் காட்டுவேன் என்று சவால் விடுகிறார். அவர் திட்டமிட்ட தியானம் அதே தஞ்சையில் இன்னொரு இடத்தில் நடந்து முடிந்து விட்டது. அதன்பிறகு இன்னொரு தடவை அதே தஞ்சையில் அந்தத் தியானம் ஏன் தேவைப்படுகிறது?
அடுத்து, தஞ்சைப் பெரிய கோயில் தமிழ்ச் சைவத்திருக்கோயில்! அதன் வழிப்பாட்டு நெறி முறைகள் திருமந்திரம், தேவாரம், திருவாசகம் சார்ந்தவை. இந்து மதம் பல்கடவுள் வழிபாட்டு (HINDU PANTHEON) கோட்பாடுகள் கொண்ட கூட்டமைப்பு வடிவம் கொண்டது. அதேவேளை அந்தந்தக் கோயிலில் அந்தந்தக் கோயிலுக்குரிய ஆகமம், வழிபாட்டு முறை ஆகியவை மட்டும்தான் கடைபிடிக்கப்பட வேண்டும் என “சுப்பிரமணிய சாமி - எதிர் - தமிழ்நாடு அரசு” வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (காண்க : Dr. Subramaniyan Swamy Versus State of TamilNadu and Others, Civil Appeal No. 10620 of 2013).
சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம் தீட்சிதர்களிடமிருந்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற வழக்கில், “அந்தக் கோயில் தனி வகையினம் (Demonination Temple); அது தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருக்க வேண்டும்; அங்கு வழிபாட்டு முறை வேறு; அரசோ மற்றவர்களோ அதில் தலையிடக் கூடாது” என்று தீர்ப்பளித்தது.
தஞ்சைப் பெரிய கோயில் இந்து மதத்தில் தனி வகையினக் கோயில்! அந்த சைவ சிந்தாந்த வகையினத்தைச் சேராத இரவிசங்கரோ, அவரின் வாழும் கலை அமைப்போ அக்கோயிலுக்குள் நுழைந்து தியானமோ பிரச்சாரமோ செய்ய சட்டப்படி அனுமதி இல்லை! அத்துடன், சைவ சித்தாந்த நெறி சார்ந்துகூட அக்கோயிலுக்குள் தனி அமைப்பினர் தியானம் செய்வதும், சமயப் பிரச்சாரம் செய்வதும் மரபு அல்ல! இதுவரை அவ்வாறு நடந்ததில்லை!
எனவே, தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் – சைவ சித்தாந்த வகையினத்தைச் சாராத இரவிசங்கர் தியானம் மற்றும் பிரச்சாரம் செய்ய அனுமதித்த தொல்லியல் துறை அதிகாரிகள் மீதும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்