<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள்" -- தோழர் பெ. மணியரசன் கண்டனம்

Saturday, September 30, 2017


=============================================
திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர்
ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள்
=============================================
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=============================================

அண்மையில் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களை சிங்கள இனவெறிக் கும்பலொன்று வழிமறித்து, அவமரியாதையாக நடந்து கொண்டதுடன் அவரைத் தாக்கவும் முற்பட்டது.

அந்த வன்செயலைக் கண்டிக்கும் வகையில் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் நேற்று (29.09.2017) சென்னையில் இலங்கைத் தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மே 17 இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் அதே அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான தோழர் பிரவீண்குமார் அவர்களும் ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்ததுக் கொண்டிருந்த போது, காவல் துறையினர் அங்கு சென்று அவ்விருவரையும் வலுக்கட்டாயமாகத் தள்ளியும் இழுத்தும், சட்டையைப் பிடித்து இழுத்தும் காவல் வண்டியில் ஏற்றும் காட்சி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது.

“எங்கள் மீது வழக்கு இருக்கிறதா? நாங்கள் செய்த குற்றம் என்ன? எங்களை ஏன் வலுக்கட்டாயமாக இழுக்கிறீர்கள்” என்று திருமுருகன் கேட்டதற்கு “மேலிடத்து உத்தரவு” என்று மட்டுமே காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தோழர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை ஒரு மண்டபத்திலும் தோழர்கள் திருமுருகன், பிரவீண்குமார் ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் தனித்தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள்.

அண்ணன் வைகோ, பேராசிரியர் ஜவஹிருல்லா போன்றவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசியப்பின் திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் விடுவித்துள்ளார்கள்.

எந்த வழக்கும் இல்லாத நிலையில் எந்தச் சட்ட மீறலும் இல்லாத திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் காவல் துறையினர் இழுத்துச் சென்று அடைத்து வைத்த நிகழ்வு ஓர் ஆள்கடத்தல் செயலாகும்.

மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த போதே காவல் துறையினர் திருமுருகனிடம். “நீங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது; கலந்து கொண்டால் கைது செய்வோம்” என்று எச்சரித்துள்ளார்கள். அதனால் அந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிப்போய் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். காவல் துறையினரின் இச்செயல் சட்டத்திற்கு புறம்பான வன்முறை மற்றும் அடிப்படை மனித உரிமைப் பறிப்பாகும். 

காவல்துறையினரின் இச்செயலைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எப்பொழுதுமே காவல்துறையில் இதுபோன்ற சட்டப்புறம்பான வன்முறைகளில் எங்கிருந்தோ ஏவியவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை, கட்டளையை அரங்கேற்றும் களச் செயல்பாட்டில் உள்ள காவல்துறையினர் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். நமக்கும் வேறு வழியில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறுதான் கோரவேண்டும்.

தோழர்கள் திருமுருகன் காந்தி, பிரவீண்குமார் ஆகியோர் மீது வன்முறை ஏவி சட்டவிரோதமாக அடைத்து மனித உரிமைப் பறிப்பை நிகழ்த்திட ஏவியவர்கள்? அமைசவரவையைச் சேர்ந்தவர்களா அல்லது “மேல்” அதிகாரிகளா?

கட்டுக் கோப்பில்லாமல், பயனாளிக்குழுக்களின் தற்காலிகக் கூடாரம் போல் காட்சி தரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி, தனது தில்லி மேலிடத்தை மகிழ்விக்க தமிழ்நாட்டு மக்களின் இன – மொழி உரிமைப் போராளிகளின் உரிமைகளைப் பறிப்பதிலும் அவர்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவதிலும் தெரிவு செய்து நெருக்கடி நிலையை (Selective Emergency) பயன்படுத்துகிறது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கருதுகிறது. இப்போக்கை திருத்திக் கொள்ளவில்லையென்றால், சனநாயக வழியில் தமிழ் மக்கள் எடப்பாடி ஆட்சியைத் தண்டிப்பார்கள்!

Labels:

“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா? பகைவரா? -- தோழர் பெ. மணியரசன்

Monday, September 25, 2017


==================================
“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு
சமஸ் நண்பரா? பகைவரா?
==================================
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==================================

“ஒரு தலித் குழந்தை மட்டும் அல்ல, ஒரு முஸ்லிம், ஒரு கிறித்தவக் குழந்தை தன்னை (தமிழ்நாடு) முதல்வராகக் கனவு காணும் சாத்தியம் இன்றைக்குத் தமிழ்நாட்டுச் சூழலில் இருக்கிறதா? அப்படியென்றால் நாம் பேசும் தமிழ் அடையாள அரசியல் எந்த மதத்தின் எந்தப் பெரும்பான்மைச் சாதிகளைப் பிரதிபலிக்கிறது? …. ஒரு தலித், ஒரு முஸ்லிம், ஒரு கிறித்தவர் இங்கு முதல்வராகும் சூழல், யதார்த்தத்தில் இல்லையென்றால் தமிழன் என்ற சொல்லுக்கான பெறுமதி என்ன? சமத்துவம் வேண்டாமா?”

இவ்வாறு எழுத்தாளர் சமஸ், தி இந்து – தமிழ் நாளிதழில் (25.09.2017) கேட்டுள்ளார். அக்கட்டுரைக்கு “சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா” என்றும் தலைப்பிட்டுள்ளார். 

தமிழ்த்தேசிய அரசியல், தமிழின அரசியல் என்று சொன்னால் அதற்குரிய மரியாதையை அளித்ததாகிவிடும் என்று கருதி எச்சரிக்கையாக “தமிழ் அடையாள அரசியல்” என்று இந்தியத்தேசிய மேலாதிக்கப் பார்வையிலிருந்து சிதைவான பெயர் சூட்டுகிறார் சமஸ்!

இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து தமிழர்களுக்கு “இந்தியன்” என்று “தேசிய இன” அடையாளம் (Nationality) சூட்டப்பட்டது. அவ்வாறு பெயர் சூட்டிய இந்தியத்தேசியவாதிகளின் ஆட்சியின் கீழ் 1947ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் இருந்து வருகிறார்கள். 

1940களிலிருந்து “திராவிடன்” என்று தமிழர்களுக்கு இன அடையாளம் சூட்டினார்கள். அவ்வாறு பெயர் சூட்டிய திராவிடவாதிகளின் ஆட்சியின் கீழ் 1967லிருந்து தமிழர்கள் இன்று வரை இருந்து வருகிறார்கள். 

இந்தியன், திராவிடன் என்ற அடையாளங்களால் “தமிழன்” தனது இயற்கையான சொந்த இனப்பெயரை இழந்து வர்ண சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கிறான். இவ்வாறு பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் இயற்கையான உளவியல் உறவுக் கோட்பாடு தமிழ் அடையாளமே! 

வர்ணசாதி, மதம் ஆகியவற்றால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களைப் பார்த்து, “பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உங்கள் முன்னோர்கள் தமிழர்கள்; நீங்கள் தமிழர்கள். உங்களுக்குள் பிறப்பால் – மதத்தால் உயர்வு தாழ்வில்லை” என்று கூறி, ஓரின உணர்வைத் தட்டி எடிப்பி வருகிறது தமிழ்த்தேசியம்! 

தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தலித், முஸ்லிம், கிறித்தவர் உட்பட எல்லோரும் வருவதற்கான சனநாயக வாய்ப்பு உருவாக வேண்டும் என்பது தமிழ்த்தேசிய அறங்களில் ஒன்று! 

இப்பொழுதுதான் எழுந்து வரும் தமிழ்த்தேசியத்தை விரும்பாத சமஸ் போன்றவர்கள் – தமிழர்களை ஏற்றத் தாழ்வுள்ள சாதிகளாகவும், மதங்களாகவும் பிரித்து வைத்துக் கோலோச்சிக் கொண்டுள்ள “இந்தியன்”, “திராவிடன்” என்ற இன அரசியல்வாதிகளைப் பார்த்து தலித், முசுலிம், கிறித்தவர் ஆகியோரை முதல்வராக்க முடியுமா என்று கேட்பதில்லை. 

குறைந்தது, பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா என்று பெரியார், அண்ணா ஆகியோரைத் தலைவராகக் கொண்ட திராவிடக் கட்சிகளையும் – காந்தியம் பேசும் இந்தியத்தேசியக் காங்கிரசையும் கேட்பாரா சமஸ்? தமிழின இயக்கத்தாரைப் பார்த்து இக்கேள்விகளைக் கேட்பதேன் நோக்கம் என்ன? 

சமஸ், “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு நண்பரா? பகைவரா?

Labels:

“தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும்” -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Sunday, September 24, 2017


======================================
“தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும்”
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
======================================

“நம்முடைய இளைஞர்களிடம் இன உணர்வு வளர்ந்து வருகிறது; தமிழ்த்தேசியம்தான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் தேர்தலில் பங்கெடுக்காமல், மாநில ஆட்சியைக் கைப்பற்றாமல் எப்படித் தமிழ்த்தேசியத்தை அடைய முடியும் என்று கேட்கிறார்கள். தேர்தலில் பங்கெடுப்பது பற்றி தெளிவான முடிவு தேவை” என்று நம்முடைய பேராசிரியர் ஒருவர் அண்மையில் என்னிடம் கூறினார். 

அந்தப் பேராசிரியர் தமிழ்த்தேசியத்தின் மீது உண்மையான அக்கறை உள்ளவர். தேர்தல் குறித்து நம்முடைய இளைஞர்களிடம் பெரும் நம்பிக்கை இருக்கிறது என்பது உண்மைதான். 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தேர்தலில் பங்கெடுக் காததால் இந்தக் கேள்வியை நம்மிடம் கேட்கிறார்கள். தேர்தலில் பங்கெடுக்கவில்லை என்றதும், நக்சல்பாரி இயக்கத் தோழர்கள்தான் நம் மக்களுக்கு நினைவுக்கு வருவர். ஏனெனில் தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட முறையாக அறிவித்துச் செயல்படுத்தியவர்கள் அவர்கள். காலப்போக்கில் அவர்களிலும் பல பிரிவுகள் உண்டாகித் தேர்தலில் பங்கெடுப்போரும் இப்போது இருக்கிறார்கள்.

நக்சல்பாரி கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கும், நாம் தேர்தலில் பங்கெடுக்காததற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. அவர்கள், சமூக மாற்றத்திற்கு ஆயுதப் புரட்சியே ஒரே வழி என்று கருதுபவர்கள். நாம் ஆயுதப்புரட்சி வழியை ஏற்காதவர்கள். அறப்போராட்டம், மக்கள்திரள் போராட்டம் என்ற வடிவத்தை ஏற்றுக் கொண்டவர்கள். 

நக்சல்பாரி இயக்கத்திலிருந்து தமிழ்த்தேசிய விடுதலைப் போராளியாக, தலைவராக உருவெடுத்தவர் தோழர் தமிழரசன். அவரும் அவருடைய தோழர்களும் - தமிழ்த்தேசியத்திற்காக உயிரீகம் செய்தவர்கள்; அவர்களில் சிறைக் கொடுமைகளையும், காவல் துறையினரின் கடும் வன்முறைகளையும் ஏற்றவர்கள் பலர். அவர்களுடைய ஈகத்தைப் போற்றுகிறோம்; ஆனால் அவர் களுடைய ஆயுதப் புரட்சிப் பாதையை நாம் ஏற்க வில்லை. 

தேர்தலில் பங்கெடுக்காதது ஏன்?
--------------------------------------------------- 
இரண்டு காரணங்கள். முதல் காரணம், இன்றையத் தேர்தல் நடைமுறை என்பது ஊழல்வாதிகளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும்; இலட்சியகளையும் ஊழலர் களாக மாற்றிவிடும். பணம், சாதி இரண்டும் தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதியாக்கப்பட்டு, அதுவே நடைமுறையில் உள்ளது. 

இரண்டாவது காரணம், சட்டப் பேரவைக்கான அதிகாரம் ஏற்கெனவே மிகக்குறைவு. 

இப்பொழுதோ உருப்படியான அதிகாரம் எதுவுமே இல்லை என்ற அளவுக்கு, மாநில உரிமைப் பறிப்புகள் அன்றாடம் அரங்கேறுகின்றன. 

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் சீர்கேடு பெருத்துள்ளது. இந்த சீர்கேட் டைப் பெருக்கச் செய்தவர்கள் யார்? கழகம் தொடங்கிய போது தனிநாடு கேட்டு முழங்கியவர்கள். “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று எக்காளமிட்ட தி.மு.க.வினர்! 

தேர்தல் - அதன்வழி கிடைக்கும் பதவி என்பதை முதன்மை நடைமுறையாக வைத்துக் கொண்டால் எந்த இலட்சியரும் கால ஓட்டத்தில் ஊழலராக மாறி விடுவார். தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, தேர்தல் மூலம் - சட்டப்பேரவை மூலம் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தருவோம் என்றது தி.மு.க.! “மாநில சுயாட்சி” என்றார் கருணாநிதி! 

இப்படியெல்லாமா தி.மு.க. தலைவர்கள் இலட்சிய முழக்கமிட்டார்கள் என்று இன்றையத் தலைமுறையினர் வியக்கும் நிலைதான் உள்ளது. ஊழல் அரசியலும், உட்கட்சி சனநாயகமற்ற தன்னலத் தலைவர் வழிபாடும் செழித்துள்ள தி.மு.க.தான் இன்றையத் தலைமுறையினர்க்குத் தெரியும். 

வாக்காளர்க்குக் கொடுக்கும் பணத்தை உயர்த்தி விடுவது, வட்டார அளவில் சாதிய உணர்வைத் தூண்டி விடுவது, வாரிசு அடிப்படையில் தலைவர் உருவாக்குவது, வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் ஊழல் செய்து பணம் சேர்ப்பது, மாநிலத் தன்னாட்சி அதிகாரம் பேசி மாட்டிக் கொள்ளாமல் தில்லிக்கு மண்டியிட்டு கங்காணி அரசியல் நடத்துவது - இவைதாம் இப்போது தி.மு.க.வின் புதிய ஐம்பெருங்கோட்பாடு! 

இப்படியெல்லாம் சீரழியாமல் இலட்சிய வீரர்களாக தேர்தலில் போட்டியிட முடியாதா? வெற்றி பெற முடியாதா? இளம் தோழர்கள் சிலர் இவ்வாறு கேட்கிறார்கள். அந்தந்த விளையாட்டிற்கும் தனித்தனி விதிகள் இருக்கின்றன! 

இன்றையச் சூழலில் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், தேர்தல் என்பது கோடீசுவர அரசியல் குழுமங்களிடையே நடக்கும் போட்டியாகி விட்டது. வாக்காளர்க்குப் பணம் கொடுப்பது மட்டுமல்ல, பரப்புரை - படாடோபங்கள் - பரிவாரங்கள் முதலியவற்றுக்கான மொத்தச் செலவு வாக்காளர்க்குக் கொடுக்கும் தொகையைவிட அதிகம்! 

பா.ச.க. கட்சி நிர்வாகிகள் அண்மையில் தில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமீத்சா ஆகியோர் தலைமையில் கூடி 2019 மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்குரிய திட்டங்களை விவாதித்து முடிவுகள் எடுத்தனர்! காங்கிரசு ஏற்கெனவே தேர்தல் அணி சேர்க்கை வேலையைத் தொடங்கிவிட்டது. அமெரிக்க பாணி தேர்தல் நடைமுறையை இந்தியாவில் பா.ச.க.வும் காங்கிரசும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. 

அதேபோல்தான் கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நடைமுறைகளைக் கடைபிடித்தன. பா.ம.க.வும் தன்னால் முடிந்த அளவிற்கு அதே பாணியைச் செயல்படுத்தியது. 

ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு மிகச் சாதாரணமாக பத்து இலட்ச ரூபாய் தமிழ்நாட்டில் செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றால் பல மடங்காக இதை ஈட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இச்செலவினைச் செய்கிறார்கள். அவர்களைத் தேர்தலில் வெல்ல வேண்டுமாயின், தமிழ்த்தேசியர்களும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டும். அதிகச் செலவு செய்வதற்குப் பணம் சேர்க்க ஊழல் செய்ய வேண்டும். அல்லது செலவு செய்யும் வலிமை படைத்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். 

அடுத்து, சாதிச் செல்வாக்குள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். இதனால் இலட்சிய உறுதி, போர்க்குணம், ஈகம் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்படும்! 

இத்தேர்தல்களில் இலட்சியர்கள் போட்டியிட்டால் என்னாவார்கள்? 

இலட்சியர்கள் தேர்தலில் போட்டியிடலாம். எப்போது? எதற்காக? இந்த வினாக்களுக்கு சரியான தெளிவான விடை வேண்டும். 

1. மக்களிடையே கணிசமானவர்களிடம் இலட்சிய தாகம் வளர்ந்து, அவர்கள் தங்கள் தேசத்தின் உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் வீதிக்கு வருகிறார்கள்! ஆட்சியாளர்க்கு எதிரான மக்களின் சினம் அவர்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிகிறது என்ற சமூகக் கொதி நிலை இருக்க வேண்டும். 

2. இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், தேசத்தின் உரிமை, மக்களின் வாழ்வுரிமை இரண்டிலும் இடைக்காலத் தீர்வுகள் சிலவற்றைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட வேண்டும். 

இந்த இரண்டும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டால் இலட்சியர்கள் மிகவும் மோசமாக புறக்கணிக்கப்படுவார்கள். மேற்கண்ட இரண்டு நிலையும் மக்களிடம் உருவாக நாம் கருத்துப் பணியும், களப்போராட்டமும் நடத்தியிருக்க வேண்டும்; போராடி இருக்க வேண்டும்; ஈகங்கள் செய்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் கணிசமான மக்களைத் திரட்டி இருக்க வேண்டும். 

இவையன்றி, மேடையில் நாம் பொங்கி எழும் புலிப்பாய்ச்சலோ, அவ்வப்போது நடத்தும் அடையாளப் போராட்டங்களோ சராசரி வெகுமக்களின் கொதி நிலையை உயர்த்திவிடாது; நம் மீது நம்பிக்கையையும் வளர்த்து விடாது! 

இதற்கு முதல் தேவைகள் 1. தமிழ்த்தேசிய அமைப்பிடம், அதன் தலைவர்களிடம் இலட்சியத்தில் களங்க மற்ற தெளிவிருக்க வேண்டும்; அதில் ஊசலாட்டமற்ற பற்றுறுதி இருக்க வேண்டும். 2. உடனடிப் பலனை எதிர்பார்க்காமல் பொறுமையுடன் களப்பணியாற்றும் பக்குவம் இருக்க வேண்டும். 

வெள்ளைக்கார ஆட்சி 1920இல் தேர்தல் வழியாக அமையும் சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றை உருவாக்கியது. அனைவர்க்கும் வாக்குரிமை இல்லை என்றாலும், ஆட்சியாளர்கள் வரையறுத்த தகுதிகளுக்குட்பட்ட வெகு மக்களுக்கு வாக்குரிமை இருந்தது. 

காந்தியடிகள் தலைமையிலான காங்கிரசு, 1920 தேர்தலில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு நடந்த தேர்தல்களிலும் பங்கேற்கவில்லை. 1930-களில் உப்புச் சத்தியாகரகம், தலைவர்கள் கைது, அதை ஒட்டிய தொடர் போராட்டங்கள் என்ற பின்னணியில், 1937 பொதுத் தேர்தலில் காங்கிரசு போட்டியிட்டது. போட்டியிட்ட ஒன்பது மாநிலங்ளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

ஆனால் இரண்டே ஆண்டில் 1939-இல் அத்தனை அமைச்சரவைகளையும் பதவி விலகுமாறு காங்கிரசு கட்டளை இட்டது. தமிழ்நாட்டின் இராசாசி அமைச்சரவை உட்பட அனைத்து அமைச்சரவைகளும் பதவி விலகின. 

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் புரட்சியாக நடந்தது. இருந்தாலும் 2001ஆம் ஆண்டு நடந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் - “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, தேர்தல் களத்தில் இறக்கி விட்டார். விடுதலைப்புலிகள் நிர்வாகிகளோ, அல்லது உறுப்பினர்களோ தேர்தலில் போட்டியிடவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட பழைய நாடாளுமன்ற வாதிகளையே நிறுத்தினார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தும் மக்கள் வலிமையும் இடைக்கால நிர்வாகமும் விடுதலைப் புலிகள் வசம் அப்போது இருந்தது. 

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளுக்கு நேர்மாறான சில எடுத்துக்காட்டுகளையும் கூறவேண்டும். 

1. இன விடுதலை, நாட்டு விடுதலை என்ற இலட்சி யங்களை முழங்கி வந்த தி.மு.க. - இலட்சியத் தெளிவற்ற, இலட்சியத் துல்லியமற்ற, இலட்சிய உறுதியற்ற தலைவர்களையும் பிரமுகர்களையும் கொண்டிருந்தது. தேர்தலில் பங்கெடுத்து காங்கிரசை விட மோசமாகச் சீரழிந்தது. 

2. “தமிழப் பேரரசு” என்ற இலட்சிய முழக்கத்துடன் தமிழ்நாட்டு விடுதலை கோரி நாம் தமிழர் கட்சி நடத்தினார் ஆதித்தனார். திராவிடத் திரிபைக் கடுமை யாக எதிர்த்தார். 1962 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் பல தொகுதிகளில் போட்டி யிட்டனர். ஆதித்தனார் உட்பட அனைவரும் தோற்றனர். 1967 தேர்தலில் கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க.வில் இணைந்து விட்டார் ஆதித்தனார். 

3. மிசோரம் விடுதலைக்காக ஆயுதப் போராளி களை உருவாக்கி இந்தியப் படையை எதிர்த்துப் போரிட்டவர் லால் டெங்கா! இராசீவ் காந்தியுடன் உடன்பாடு போட்டு, ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு, தேர்தல் பாதைக்குத் திரும்பினார். தேர்தலில் தோற்று, மக்கள் புறக்கணிப்பால் மனம் நொந்து இறந்தார் லால் டெங்கா. 

4. ஜம்மு காசுமீர் இறையாண்மைக்குப் போராடிய சேக் அப்துல்லா மக்களின் மாபெருந் தலைவராக விளங்கினார். இந்திரா காந்தியுடன் உடன்பாடு போட்டு, தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அக் கட்சி சீரழிந்தது. சேக் அப்துல்லாவுக்குப் பின், அவர் மகன் பரூக் அப்துல்லா, பரூக்கின் மகன் உமர் அப்துல்லா ஆகியோர் தலைமையில் அக்கட்சி காங்கிர சுடனும் பா.ச.க.வுடனும் கூட்டணி சேர்ந்து, காசுமீர் விடுதலை அமைப்புகளிடம் கருங்காலிப் பட்டம் வாங்கிக் கொண்டது. இப்போது காசுமீர் விடுதலைக் காகப் போராடும் அமைப்புகள், சேக் அப்துல்லா பெயரை இனத்துரோகிகள் பட்டியலில் சேர்த்துள்ளன! ஒரு காலத்தில், “காசுமீர் சிங்கம்” என்று அம்மக்களால் கொண்டாடப்பட்டவர் அவர்! 

5. கனடாவில் கியூபெக் மாநிலம் பிரஞ்சுக் காரர்களின் தாயகம். மற்ற மாநிலங்கள் ஆங்கிலேயர் தாயகம். “கியூபெக் கட்சி” என்ற பெயரில் செயல்பட்ட பிரஞ்சுக்காரர்கள் கட்சி, தனிநாடு கேட்டுப் போராடியது. பின்னர் தேர்தலில் நின்று அம்மாநிலத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அந்தக் கட்சி ஆங்கி லேயர் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கனடாவின் நடுவண் அரசில் பங்கேற்றது. 

அதன் பிறகு கியூபெக் விடுதலைக் கோரிக்கையை கைவிட்டது. புதிதாக கியூபெக் மக்களுக்கான உருப்படி யான உரிமை எதையும் அக்கட்சி பெற்றுத் தரவில்லை. ஆனால் கியூபெக்கில் இப்போதும் விடுதலை இயக்கங்கள் செயல்படுகின்றன - சிறுத்துப் போன நிலையில்! 

தமிழ்த்தேசியத்தை உண்மையான இலட்சியமாகக் கொண்டுள்ள இயக்கம் இந்த நடைமுறை உண்மை களைக் கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் தேர்தல் பங்கெடுப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும். 

இலட்சியத் தெளிவு, இலட்சியத் துல்லியம், ஊழல் பண்பற்ற போர்க்குணம், களச் செயல்பாடுகளில் தீவிரப் பங்கெடுப்பு என்று செயல்முறை உள்ள ஓர் உண்மையான தமிழ்த்தேசிய அமைப்பு தேர்தலில் வென்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதாக வைத்துக் கொள்வோம். இன்றைய நிலையில் அந்த ஆட்சி தமிழ்நாட்டில் என்ன மாற்றங்களைச் செய்ய முடியும்?

தி.மு.க. தனிநாடு கேட்ட காலத்தில் தமிழ் நாட்டிற்கிருந்த அதிகாரங்கள் பலவற்றை - இப்போது இந்திய அரசு பிடுங்கிக் கொண்டது. பள்ளிக்கூடக் கல்வி அதிகாரம் கூட இப்போது மாநில அரசிடம் இல்லை. வணிக வரி வசூலிக்கும் அதிகாரத்தை சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) போட்டு பிடுங்கி விட்டது.

நடுவண் அரசு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமானால், தனியார் தொழில் தொடங்க வேண்டுமானால் மாநில அரசின் ஒப்புதல், மாநில சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வேண்டும். இப்போது அவையெல்லாம் தேவை இல்லை என தில்லியில் ஒற்றைச் சாளர முறை கொண்டு வந்துவிட்டார்கள்.

நாம் என்ன உணவை உண்பது என்று தீர்மானிக்கும் சட்ட அதிகாரம் தில்லியில் உள்ளது. தமிழ்நாட்டில், மாட்டிறைச்சி உண்ணும் உரிமைக்கு தில்லி ஏகாதிபத்தியம் தடைபோடுகிறது!

முதல் கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை உரிமையை மாநில அரசிடமிருந்து நீட் தேர்வு மூலம் இந்திய அரசு பறித்து விட்டது. சில ஆண்டுகள் கழித்து மதிப்பெண் அடிப்படையில், வெளி மாநில மாணவர்களைச் சேர்க்கும் சட்ட ஏற்பாடு வந்துவிடும். 

மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் பணிய மர்த்தத்திற்கும், மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியமர்த்தத்திற்கும் அனைத்திந்தியத் தேர்வு முறை வரப் போகிறது. 

இந்திய அரசின் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை சட்டம் இயற்றித் தடுக்க முடியாது; அரசாணை போட்டாலும் தடுக்க முடியாது. நீட் தேர்வு தமிழ்நாட்டைக் கட்டுப் படுத்தாது என்று இரு தடவை ஒருமனமாக தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட முன்வடிவு நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அவர் கையொப்பமிடவில்லை! நடுவண் அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல் குடியரசுத் தலைவர் அதில் கையொப்பமிட முடியாது. 

மாநில அரசுக்கும் நடுவண் அரசுக்கும் பொது வான அதிகாரப் பட்டியலில் உள்ள எந்தப் பொருள் மீதும் நடுவண் அரசின் ஆணைக்கும் சட்டத்திற்கும் புறம்பாக மாநில அரசு ஆணை போட முடியாது; சட்டமியற்ற முடியாது. 

ஏறு தழுவலுக்கு (சல்லிக்கட்டுக்கு) தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை ஏற்று, குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டாரே என்று கேட்கலாம். அதற்கு நடுவண் அரசு பரிந்துரை செய்தது. அப்போது தமிழ்நாட்டு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட முன் வடிவை ஏற்றுத்தானே இந்திய அரசு சட்டமாக்கியது என்றும் கேட்கலாம். 

சென்னைக் கடற்கரையில் பத்து இலட்சம் பேர் பல நாட்களாக - இரவு பகலாக அங்கேயே தங்கி சல்லிக்கட்டு உரிமைக்காக அறப்போராட்டம் நடத்தி னார்கள். அதேபோல் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகர்களிலும் முக்கிய நகரங்களிலும் ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கிலான ஆண்களும் பெண்களும் இளையோரும் பெரியவர்களும் கூடி அறப்போராட்டம் நடத்தினார்கள். 

காவல்துறையை வைத்துக் கலைத்தால் பெரிய அளவில் குருதி வெள்ளம் பெருகும்; உயிர்ப் பலி ஏராளமாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. இங்கேதான் கவனிக்க வேண்டும். அதே அ.இ.அ.தி.மு.க. அரசு நீட் தேர்வுக்கு அனுப்பி வைத்த சட்ட முன்வடிவை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. ஏன்? சல்லிக்கட்டுக்கு நடந்தது போல் மக்கள் வெள்ளத்தின் அறப்போராட்டம் இல்லை! 

மக்கள் வெள்ளமெனத் திரண்டு போராடித்தான் சல்லிக்கட்டு போன்ற மரபுரிமைகளையும், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு மாணவர் சேர்க்கும் உரிமையையும் பெற முடியும் என்றால் தமிழ்நாடு சட்டப்பேரவை எதைச் சாதிக்கும் நமக்கு?

மேற்படி இரண்டு உரிமைகளும் மிகச் சாதாரணமாக நடைமுறையில் மாநில அரசிடம் இருந்த உரிமைகள். 

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பைத் தடுத்திடும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா? இல்லை! 

மின்சாரப் பற்றாக்குறை காலத்தில் நடுவண் அரசின், நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிடும் உரிமை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா? இல்லை! 

தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநிறுத்தும் அதிகாரம், தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உண்டா? இல்லை! 

மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுப்பதைத் தடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா? இல்லை! 

நம் வேளாண்மையில் மரபீனி மாற்று விதைகளைத் திணிக்கிறது இந்திய அரசு. தமிழ்நாடு அரசுக்கு அதைத் தடுத்திடும் அதிகாரம் உண்டா? இல்லை! 

மக்களவை - உரிமைப் பறிப்பு அவை
----------------------------------------------------------
மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் 543 - இதில் இந்தி மாநிலங்கள் பத்தின் மொத்த உறுப்பினர்கள் 225 பேர். தமிழ்நாட்டின் மொத்த உறுப்பினர் 39. புதுவைக்கு ஒருவர். ஆக மொத்தம், 40 பேர். 

தமிழ்நாட்டுக்கு ஆதரவாக வேறு எந்த மாநிலமும் வாக்களிக்காது. 543 -இல் 40 என்பது மிகமிகச் சிறு பான்மை. நம்முடைய மக்கள் தொகை 8 கோடி. பிரித் தானிய, பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையைவிடத் தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகம். ஆனால் நம்முடன் தொடர்பில்லாத அயல் இனங்களுடன் நம்மைச் சேர்த்து வைத்திருப்பதால், செயற்கையாக நாம் சிறுபான்மை ஆக்கப்பட்டிருக்கிறோம். 

ஒரு கோடிக்குக் கீழ் மக்கள் தொகை உள்ள நார்வே, டென்மார்க், இசுரேல் போன்ற எத்தனையோ நாடுகள் தங்கள் நாட்டில் மிகப்பெரும் பெரும் பான்மையுடன் சொந்த ஆட்சி நடத்திக் கொண்டிருக் கின்றன. அவற்றின் நாடாளுமன்றம் அவர்களுக்கான தாக இருக்கிறது. நாம் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டிருக்கிறோம். 

இந்தித் திணிப்பைத் தடுத்திட, கச்சத்தீவை மீட்டிட, தென்கடலில் தமிழர் மீன்பிடி உரிமையைத் தக்க வைக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட, காவிரி மண்டலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி.யை, வெளி யேற்றிட விளைநிலத்தில் கெய்ல் குழாய் பதிப்பதைத் தடுத்திட - இன்னபிற உரிமைகளுக்காகத் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினால் நம்மை மற்றவர்கள் ஆதரிப்பதில்லை.

தமிழீழத்தில் நம் இன மக்களை இலட்சக்கணக்கில் இந்தியாவின் பங்களிப்போடு இலங்கை அரசு இனப் படுகொலை செய்தபோது, போர் நிறுத்தம் கேட்ட நம் உறுப்பினர்களின் குரலை வேறு மாநில உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டுப் புலனாய்வு நம் உறுப்பினர்கள் கேட்டபோது வேறு மாநில உறுப்பினர்கள் ஆதரிக்க வில்லை. 

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற சந்தர்ப்பவாதக் கட்சிகளின் உறுப்பினர்கள் கேட்டதால் உறுதியற்ற அவர்களின் குரலுக்கு மற்ற மாநிலத்தவர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தமிழ்த்தேசியர்கள் கருதலாம். ஊசலாட்டமில்லாமல் உறுதியாகத் தமிழ்த் தேசியம் பேசுவோர் நாடாளுமன்றத்துக்குப் போனால் இன்னும் கூடுதலான வெறுப்புடன்தான் நம்மை மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பார்ப்பார்கள். 

நாடாளுமன்ற மக்களவை என்பதுதான் இருக் கின்ற இந்திய நிறுவனங்களிலேயே மிக மோசமான தமிழின ஒடுக்குமுறை நிறுவனம்! இந்த உண்மையை உள்ளது உள்ளபடி உணரும் ஆற்றல் தமிழ்த்தேசியர் களுக்கு வேண்டும். 

‘சனநாயக முடிவு” என்ற பகட்டு முழக்கத்துடன், பெரும்பான்மையைக் கொண்டு, நம்மைத் தொடர்ந்து வீழ்த்தும் அரங்கம்தான் “மக்களவை”!

இந்திய அரசின் இனப்பாகுபாடு
-------------------------------------------------
எந்த நாட்டு அரசுக்கும் அதற்கான சொந்த இனக் கொள்கை இருக்கும். இந்தியாவின் இனக்கொள்கை ஆரிய இனம் சார்ந்தது. இந்தியாவின் பெயரைப் “பாரதம்” என்று ஏன் அழைக்கிறார்கள்? ஆரியப் புராணத்தில் பரதன் என்ற ஆரியன் ஆண்டான் என்ற கதையை வைத்துதான் “பாரதம்” என்று அழைக்கி றார்கள். அந்த ஆண் மகனைத்தான் அவர்களே பெண்ணாக மாற்றி பாரதத்தாய் என்கிறார்கள். 

மூவாயிரம் ஆண்டுகளாக ஆரிய ஆக்கிரமிப்பையும் ஆரிய இனத்தையும் எதிர்த்து வரும் ஒரே இனம் - இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழர்கள் மட்டுமே! ஆரியர்களின் சமற்கிருத மொழிக் கலப்பில்லாமல் இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கக் கூடிய ஒரே மொழி - தமிழ் மட்டுமே!

ஆரியப் படையைப் போரில் புறமுதுகு காட்டச் செய்தவன் என்பதற்காக அந்த பாண்டிய அரசனை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” என்று போற்றும் இனம் தமிழினம்தான்! தமிழர்களை இழி வாகப் பேசிய ஆரிய மன்னர்களான கனகனையும் விசயனையும் வென்று அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான் சேரன் செங்குட்டுவன் என்று பெருமிதம் கொள்ளும் தமிழ்க் காப்பியம் இளங்கோவடிகள் யாத்துத் தந்த சிலப்பதிகாரம்!

தமிழர்களின் ஆரியப் பிராமண ஆதிக்க எதிர்ப்பு சங்க இலக்கியங்களில் - காப்பிய இலக்கியங்களில் - பக்தி இலக்கியங்களில், திருமூலரின் திருமந்திரத்தில் - சித்தர்கள் பாடல்களில் - வள்ளலாரின் திருவருட்பா வில் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தில் தொடர்ந்து வரும் பின்னணியில்தான் பெரியாரின் ஆரியப் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இயக்கம், சனநாயகக் காலத்தில் உருவாகி வளர்கிறது. அவர் திரிபான திராவிடப் பெயர் சூட்டி - அந்த இயக்கத்தை நடத்தினாலும் தமிழர்கள் தங்களின் வரலாற்றுத் தொடர்ச்சி காரணமாக - அவ்வியக்கத்தின் வழியாக ஆரிய பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்துத் திரண்டார்கள். 

திரிபான வடிவில் பெரியாரும் அண்ணாவும் தனிநாடு கேட்டாலும், தமிழ்நாடு தனியாகும் என்ற நம்பிக்கையில் அவ்வியக்கங்களுக்கு தமிழர்கள் பேராதரவு நல்கினார்கள். ஆனால் அவர்கள் முன்வைத்த திராவிட இனக்கொள்கை அவர்கள் கூறிக் கொண்ட ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வேரும் விடவில்லை; கிளையும் விடவில்லை. 

அண்மையில் இதே தமிழினத்தில் விடுதலைப் புலிகள் தோன்றி, உலகம் வியக்கும் வகையில் - உலக நாடுகள் தலையிடும் வகையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தினார்கள். 

எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழினம்தான் ஆரிய இனத்தின் முதல் எதிரி என்று வடநாட்டு அரசியல் தலைமைகள் கருதுகின்றன. காங்கிரசுத் தலைமையும், பா.ச.க. தலைமையும் தமிழி னத்தைப் பகை இனமாகப் பார்ப்பதில் ஒரே நிலையில் உள்ளன. ஒரு கரு இரட்டையர்கள்! 

இந்தியாவுக்குள் - மற்ற தேசிய இனங்களுடன் சமமாக வைத்து, தமிழ்த்தேசிய இனத்தை தில்லித் தலைமை பீடம் என்றுமே பார்க்காது. தமிழர்களின் உரிமையை எந்த இனம் பறித்தாலும் அந்த இனத்திற்கு இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நிற்கும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி ஆற்று உரிமைகளை அண்டை இனங்கள் சட்ட விரோதமாகப் பறிக்கின்றன. அந்த சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு, அது காங்கிரசுத் தலைமை யில் இருந்தாலும், பா.ச.க. தலைமையில் இருந்தாலும் துணை போகின்றன.

இதே தமிழினப் பகை நோக்குடன்தான் கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தது தில்லி அரசு; தென் கடலில் தமிழ் மீனவர்களின் மீன்பிடி உரிமையைத் தடுத்து, சிங்களப் படையாட்கள் நம் மீனவர்களைக் கொல்வதற்கும், தாக்குவதற்கும் மீனவர்களையும் படகுகளையும் கடத்திச் செல்வதற்கும் இந்திய அரசு பக்கத் துணையாக செயல்படுகிறது. ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த போரில் தமிழர்களின் குருதியில் இந்தியா கை நனைத்தது! 

இந்த உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாமலோ, அல்லது மூடி மறைத்தோ - இந்திய அரசின் தமிழினப் பகை அரசியலை வெளிப்படுத்தாமல் ஒருவர் தமிழ்த் தேசியம் பேசினால், அவர் கருணாநிதியை விட மோச மான இனத்துரோகி ஆவார்! 

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரம் மிகமிகக் குறைவு என்றாலும், அந்தக் குறைந்த அதிகாரத்தைக் கொண்டும் தமிழின உரிமைகளைப் பாதுகாக்கவும் மீட்கவும் இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளா தவர் தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் வழி காட்டத் தகுதியற்றவர்!

என்ன செய்ய வேண்டும்?
----------------------------------------
“நாம் தலையிட்டால் நாளைக்கே சிக்கல் தீர்ந்து விட வேண்டும்” என்பது போல் தன்முனைப்பு அவசரம் இருந்தால், அது சமூக மாற்றப் போராட்டத்தில் எதிர் விளைவைத்தான் உண்டாக்கும்.

எவ்வளவு காலமாகத் தமிழினம் ஏமாற்றப்பட்டிருக்கிறது! எவ்வளவு காலமாகத் தமிழினம் ஏமாந்திருக்கிறது! இதையெல்லாம் ஐந்தாண்டிலோ பத்தாண்டிலோ, ஒரு தேர்தலிலோ, இரண்டு தேர்தலிலோ தீர்த்துவிட முடியுமா? முடியாது! 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தேர்தலைப் பயன்படுத்தியதுபோல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரன் அவர்கள் தேர்தலைப் பயன்படுத்தியதுபோல் தமிழ்த்தேசியத்தில் நாமும் பயன் படுத்தலாம். அதற்கு முதலில் தமிழ்த்தேசியத்தின் இலக்கு என்ன என்பதைக் குழப்பமின்றித் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். இலக்கிற்குரிய கட்டுத் திட்டங்களுடன், கட்டுப்பாடுகளுடன், ஈக உணர்வுடன் இலட்சிய உறுதியுடன் உள்ளவர்களைக் கொண்ட அமைப்பை வளர்க்க வேண்டும். 

அப்படி ஓர் அமைப்பையே கட்டாமல், இவர் முதலமைச்சர் ஆனால் தமிழ்த்தேசியம் கிடைக்கும்; அவர் முதலமைச்சர் ஆனால் தமிழ்த்தேசியம் கிடைக்கும் என்பது, இஞ்சி மரப்பா சாப்பிட்டு இருதய நோயைக் குணப்படுத்தலாம் என்பது போன்ற ஏமாற்று வேலையாகும். 


“அக்கா வந்து கொடுக்க / சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!” என்ற பாவேந்தரின் பாடலை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது தமிழ்த்தேசியப் போராட்டம் வன்முறை தவிர்த்த அறப்போராட்டப் பாதை கொண்டது! ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட வில்லை. அவரை முதலமைச்சர் பதவி ஏற்க இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி வற்புறுத்தினார். மறுத்து விட்டார் பிரபாகரன்! 

காந்தியடிகளிடம் இருந்த, பிரபாகரன் அவர்களிடம் இருந்த இலட்சிய உறுதியை, இலட்சியத் துறவிகளாக வாழ்ந்த மனப்பக்குவத்தை பல நூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழின இளைஞர்கள் பெற வேண்டும். 

தேர்தலைப் பற்றி இப்போது சிந்திக்க வேண்டாம். மேலிருந்து கீழ்வரை ஒப்படைப்புள்ளம் கொண்ட வர்களின் உறுதியான தமிழ்த்தேசிய அமைப்பை வளர்ப்போம்! 

அந்த இயக்கப்போக்கில் தேர்தலைப் பயன்படுத்தும் வரலாற்றுத் தேவை எழுந்தால் அப்போது அதுபற்றி முடிவெடுக்கலாம்!

(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 செப்டம்பர் 1-15 இதழில் வெளியானது).

Labels:

"காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட - உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு..!" -- பெ. மணியரசன் கண்டன அறிக்கை

Wednesday, September 20, 2017


===========================================
காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத்
தீர்ப்பு வழங்கிட - உச்சநீதிமன்றத்தைத்
தூண்டுகிறது மோடி அரசு..!
===========================================
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கண்டன அறிக்கை
===========================================

“தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் தண்ணீர் திறந்துவிடமுடியாது; ஆண்டுக்கு ஒரு தடவை திறந்துவிட ஆணையிட வேண்டும்; அந்த நீரின் அளவையும் குறைக்க வேண்டும்!” – கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலிநாரிமன் 19.09.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் கூறியவை இவை!

அதே நாளில் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு ஆதரவாக நரேந்திரமோடி அரசின் வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் கூறியவை இதோ:

“காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குழப்பங்கள் பல இருக்கின்றன. அதில் எங்களுக்கு 12 சந்தேகங்கள் இருக்கின்றன. அந்தத் தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால்தான் அது செயலுக்கு வரும். நாடாளுமன்றம் அந்த இறுதித் தீர்ப்பில் திருத்தங்கள், சேர்க்கைகள், நீக்கங்கள் செய்து கொள்ள அதிகாரமிருக்கிறது.” நாடாளும் பா.ச.க. அரசின் கருத்து இது!

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் – 1956 இன் படி ஆற்று நீர்த் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குரிய அதிகாரம் பெற்றுவிடுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து மாற்றங்கள் செய்வார்களா?

நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளின் தீர்ப்பாயத் தீர்ப்புகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டனவா? இல்லை! அவற்றிலெல்லாம் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அத்தீர்ப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.

கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடுநிலையோடு செயல்பட வேண்டிய நரேந்திரமோடி அரசு இனப்பாகுபாடு பார்த்து தமிழ்நாட்டிற்கான நீதியைப் பறிக்கிறது. தமிழர் நெஞ்சாங்குலையில் குத்துகிறது. ஒரு “கட்டப் பஞ்சாயத்துத்” தீர்ப்பு வழங்கி தமிழ்நாட்டின் காவிரி உரிமையை வெட்டி சிதைக்க வேண்டும் என்று மோடி அரசு உச்சநீதி மன்றத்தைத் தூண்டுகிறது.

காவிரிப் பாசன மாவட்டங்களை வானம் பார்த்த புஞ்சை மாவட்டங்களாக மாற்றினால்தான் உழவர்கள் தங்கள் நிலங்களை விற்பார்கள். ஓ.என்.ஜி.சி, மற்றும் தனியார் நிறுவனங்கள், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன், பெட்ரோல், எரிவளி, நிலக்கரி முதலியவற்றை எடுத்துக் கொள்ளையடிக்க வாய்ப்பு உருவாகும் என்று மோடி அரசு கணக்குப் போடுகிறது.

காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மோடி அரசின் ஆதரவோடு ஜக்கிவாசுதேவ் களமிறங்கியுள்ளார். காவிரிக் கரை நெடுக மரம் நட்டால் மழை வரும், தண்ணீர் வரும் என்றும் – ஆறுகளை இணைத்தால் தண்ணீர் வரும் என்றும் அவர் கானல் நீர் பரப்புரை செய்து வருகிறார்.

ஆறு ஆண்டுகளாக குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஒரு போகச் சம்பா சாகுபடியும், தண்ணீரின்றி காய்ந்து சருகாகிப் போனது. நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் உழவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சம்பாப் பயிர் காய்ந்து கருகியதைப் பார்த்து 250 க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

காவிரி நீர் நமக்கு 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர்; 20 மாவட்டங்களுக்கு குடிநீர்! இயற்கை நமக்கு வழங்கிய இன உரிமை காவிரி!

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அது மட்டும் போதாது தமிழ்நாடு அரசு நடுவண் அரசுக்கு உரியவாறு அழுத்தம் கொடுத்து நடுநிலைக்கு திருப்ப வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் காவிரியில் நமக்குள்ள சட்டப்படியான உரிமையை பெற அறவழிப் போராட்டங்களை மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களாக நடத்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

"தினகரன் குழுவின் பதினெட்டு உறுப்பினர் நீக்கம் : கட்சிக் கட்டுப்பாடா? மந்தைக் கட்டுப்பாடா?" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, September 19, 2017


=============================================
தினகரன் குழுவின் பதினெட்டு உறுப்பினர் நீக்கம் :
கட்சிக் கட்டுப்பாடா? மந்தைக் கட்டுப்பாடா?
=============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
=============================================

அ.இ.அ.தி.மு.க.வின் தினகரன் பிரிவைச் சேர்ந்த 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியைப் பறித்து, “தகுதிநீக்கம்” செய்துள்ளார் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அவர்கள். இந்த 18 உறுப்பினர்களும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொண்டதாகவும், முதலமைச்சர் தன் அமைச்சரவைக்குப் பெரும்பான்மை இருப்பதை மெய்பிக்க சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் ஆளுநரைச் சந்தித்து தனித்தனியே மனு கொடுத்தனர். 

இதையே “கட்சித் தாவல் நடவடிக்கை” என்று பேரவைத் தலைவர் தனபால் முடிவு செய்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறுகிறார். பேரவைத் தலைவரின் இச்செயல் சட்டப்படியானதும் அல்ல, நீதிப்படியானதும் அல்ல, தன்னலம் சார்ந்ததாகும்! 

தனது குழுவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி பதவி இழக்கக் கூடாது என்பதற்காக சட்ட விரோதமாக தனபால் செயல்பட்டிருக்கிறார். இதுவரை பெரும்பாலோரின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று வந்த பேரவைத் தலைவர் தனபால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு சாதாரண தன்னலவாதி என்று பெயரெடுத்திருக்கிறார். அவரது இந்தச் செயல், சட்டம் மற்றும் சனநாயகம் ஆகியவற்றுக்கு எதிரானது! பதினெட்டு உறுப்பினர்களின் பதவியைப் பறித்த பேரவைத் தலைவர் தனபால் அவர்களின் செயல்பாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

கட்சித் தாவல் தடைச் சட்டத்தில், எது கட்சித் தாவல் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர், தனது கட்சியிலிருந்து விலகிவிட்டாலோ அல்லது தனது கட்சி ஏவுநர் (கொறடா) விதித்த கட்டளையை மீறி தன் கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ – அவர் உறுப்பினர் பதவியை இழப்பார் என்றுதான் கூறப்பட்டுள்ளது. (அதிலும் அக்கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் உறுப்பினர் பதவியைப் பறிக்கக் கூடாது என்கிறது இச்சட்டம்).

இந்த இரண்டுவகைச் செயலிலும் தினகரன் தரப்பு உறுப்பினர்கள் ஈடுபடவில்லை. ஆளுநருக்கு ஒரு கோரிக்கையைதான் வைத்திருக்கிறார்கள். 

ஏற்கெனவே ஆந்திர முதல்வர் என்.டி. இராமாராவ், உத்தரகாண்ட் ஹரிஷ் ராவத், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் பதவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், ஓர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை மெய்பிக்கும் இடம் – சட்டப்பேரவைதான் என்று உறுதி செய்துள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எடப்பாடி பழனிச்சாமி – தனபால் கூட்டணியின் குறுக்கு வழி! 

செயலலிதா அம்மையார் இறந்த நாளிலிருந்து தமிழ்நாட்டு அரசியலில் தலைமையிடம் பிடிப்பதற்காக, அன்றாடம் புதுப்புது சட்ட விரோதச் செயல்களில் இந்திய பா.ச.க. ஆட்சி இறங்கி வருகிறது. 18 உறுப்பினர் தகுதி நீக்கமும் பா.ச.க. தலைமையிலான சதித்திட்டம்தான்! பதவிக்காகவும், பணத்திற்காகவும் நாட்டையே விற்றுவிடத் தயங்காத அ.தி.மு.க.வினர், பா.ச.க.வின் அதிகாரத்திற்குக் கையாளாக மாறி - தன்னலச் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

“பா.ச.க. தலைமைக்கு ஆன்மிக ஒழுக்கமும் கிடையாது – அரசியல் ஒழுக்கமும் கிடையாது” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி வருகிறது. பதினெட்டு உறுப்பினர் தகுதி நீக்கமும் பா.ச.க.வின் திரைமறைவு வேலைகளால்தான் அரங்கேறி உள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் குழுவினர் சண்டையிட்டுக் கொள்வது – எந்தப் பொதுநலத்துக்காகவும் அல்ல! சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பலவகையான செல்வங்களைப் பாதுகாக்க வேண்டுமானால், தங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் - புதுதில்லியின் அரவணைப்பு இருக்க வேண்டும் என்ற தன்னலத் தந்திரம் காரணமாகவே அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். 

இம்மூன்று பேருமே பா.ச.க. தலைமையிடம் சரணடைகிறார்கள்! இம்மூவரில் இப்போதைக்கு எடப்பாடியையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் தங்கள் காலடியில் விழ பா.ச.க. ஒப்புதல் வழங்கியுள்ளது. கூப்பிட்டால் போவதற்கு கும்பிட்ட கையோடு காத்திருக்கிறார் தினகரன்!

தன்னல நோக்கங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி கட்சி மாறுவது – ஆட்சி நிர்வாகத்தில் நிலையற்ற தன்மை உருவாவதைத் தடுக்க வேண்டுமென்றே கட்சித் தாவல் தடை சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் ஆட்சியில் உள்ளவர்களின் தவறுகளையோ, மக்கள் விரோத நடவடிக்கைகளையோ எதிர்க்காமல், கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மந்தையாக இருந்துதான் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலையை கட்சித் தாவல் தடைச் சட்டம் உருவாக்கியுள்ளது. 

தன்னல அரசியல் கொள்ளையர்கள், அநீதிக்காரர்கள் எந்தச் சட்டத்தையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்துப் போடுவார்கள் என்பதற்கான, இன்னுமொரு சான்றாகத்தான் கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறையில் பயன்படுத்தப்படுகறது. உண்மையில் பார்க்கப்போனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பது அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 வழங்கும் கருத்துரிமைக்கு நேர் எதிரானது! இந்தச் சட்டம் சரியாகப் பயன்படவுமில்லை! எனவே, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் கடந்த ஆண்டு(2016) திசம்பரிலிருந்து அரங்கேற்றி வரும் பதவி வெறியாட்டம் - பணப்பதுக்கல் சார்ந்த அராஜகங்கள், அரசியல் என்ற பெயரில் அவை நடத்தும் ஆள் கடத்தல்கள், கோடி கோடியாகப் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கொடுத்து அவை செய்து வரும் ஊழல் நடவடிக்கைகள் – ஒழுக்கக் கேடுகள் – இவை அனைத்தையும் பார்த்து தமிழ் மக்கள் அருவருக்க வேண்டும்! இவற்றில் ஒரு குழுவை ஆதரிப்பது இன்னொன்றை எதிர்ப்பது என்பதோ, இவ்“விளையாட்டு”களில் கொஞ்சமும் சளைக்காத தி.மு.க.வை ஆதரிப்பது என்பதோ – தமிழர் நாகரிகத்துக்கும் சனநாயகத்துக்கும் புறம்பான செயல்கள்!

உண்மையான மக்கள் நேயம், அரசியல் ஒழுக்கம், மனத்தூய்மை ஆகியவற்றைக் கொண்ட அறம் சார்ந்த புதிய அரசியல் நோக்கு – தமிழரிடம் எழ வேண்டும்; புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க சிந்தனை அளவிலாவது துணிய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தமிழ் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

"தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? " -- தோழர் பெ. மணியரசன் கேள்வி!

Sunday, September 17, 2017

==========================================

தமிழ்த்தேசியர்கள் பெரியாரை
விபெ. மணியரசன் கேள்வி!மர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? 
==========================================
வழக்கறிஞர் அருள்மொழிக்கு 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
==========================================

அண்மையில் மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த கூட்டத்தில் இயக்குநர் அமீர், வடநாட்டு ஊடகங்கள் அனிதாவை “தலித்” என்று உள்நோக்கத்தோடு பிரித்துப் பேசுகின்றன, அவர் தமிழ்ப்பெண், அவருடைய மரணம் – தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று குறிப்பிட்டார். அப்போது கூட்டத்திலிருந்து பாய்ந்து மேடைக்கு வந்த இயக்குநர் ரஞ்சித், அமீரிடமிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கொண்டு, “தமிழ், தமிழன் என்று சொல்லாதீர்கள், தமிழன் என்று சொல்லிக் கொண்டு சாதிக் கொடுமைகள் நடக்கின்றன, நாங்கள் தலித்துகள்” என்று ஆத்திரத்தோடு பேசினார். திரும்பத் திரும்ப மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, அமீரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டார். இதற்கு எதிர்வினையாக, தமிழ்த்தேசியர்கள் இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்து ஆங்கில நாளேடு இதுபற்றி இன்று (17.09.2017), ஒரு செய்தித் தொகுப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், கருத்துக் கூறிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், “மேல்சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது, இன்றைக்கு நடப்பதைப்போல் 1990களில் நடக்கவில்லை. இப்பொழுது படுகொலைகள் நடப்பதற்கானக் காரணம், தலித்தியர்களும், தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததுதான்! இதன் விளைவுதான் தருமபுரி நாயக்கன்கொட்டாய் தீ வைப்புச் சம்பவம் (2012)” என்று கூறியுள்ளார். 

திராவிடர் கழகத்தில் பன்முகப் பார்வையும், பண்பான விவாதமும் செய்யக்கூடியவர் வழக்கறிஞர் அருள்மொழி. ஆனால், மேற்கண்ட அவரது விமர்சனம் தன்நோக்குவாதம் (Subjectivism) சார்ந்ததாக உள்ளது. அவருக்கு சில கேள்விகள்!

1968இல் (25.12.1968), அண்ணா முதல்வராக இருக்கும்போது - பெரியார் தெம்பாகப் பரப்புரை செய்து கொண்டிருந்த காலத்தில், கீழவெண்மணியில் குழந்தைகள் உட்பட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 44 பேர் – ஒரு குடிசையில் வைத்து, மேல்சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டார்களே! 

திராவிட ஆட்சியில் - பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரை நடந்த காலத்தில் இது நடந்தது ஏன்? வெண்மணிப் படுகொலைக்கு உரியவாறு உடனடியாக ஒரு கண்டன அறிக்கைகூட பெரியார் அப்போது தரவில்லை என்பதும், அந்த கொடுமை நடந்த இடத்தை பெரியார் போய் பார்த்து – மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்பதும் கூடுதல் செய்தி! 

அதேகாலத்தில் 1968 நவம்பர் 17 அன்று, நாகப்பட்டினம் சிக்கல் கடைத்தெருவில், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற கம்யூனிஸ்ட் தோழர் பட்டப்பகலில் ஆதிக்கசக்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பலர் அக்காலத்திலும் – அதாவது பெரியார் வாழ்ந்த காலத்திலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

பெரியார் ஆதரித்த காமராசர் ஆட்சி நடந்த காலத்தில், 1950களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியபோது, அதை எதிர்த்த இமானுவேல் சேகரனார் 11.09.1957 அன்று கொலை செய்யப்பட்டதும், பெரும் கலவரம் மூண்டதும் – ஏன் நடந்தது? 

பெரியார் காங்கிரசு ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்த போதும், பிறகு தி.மு.க. ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேநீர் கடைகளில் தனிக்குவளையில் தேநீர் கொடுத்த முறை – தமிழ்நாடெங்கும் பரவலாக - மிக அதிகமாக இருந்தது. அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய வகுப்பிலுள்ள சனநாயக ஆற்றல்களின் பரப்புரையாலும் போராட்டத்தாலும் இரட்டைக் குவளை முறை பெருமளவு குறைந்துவிட்டது. இதுபற்றி வழக்கறிஞர் அருள்மொழி என்ன விடை சொல்கிறார்? 

அண்மைக்காலங்களில் தலித் ஆண்கள் மேல்சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டதால், சில இடங்களில் அந்த ஆண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பெரும் கொடுமை! தமிழினத்திற்கே அவமானம்! ஆனால், வழக்கறிஞர் அருள்மொழி கூறுகின்ற 1990கள் – அல்லது அதற்கு முந்தைய காலத்தைவிட, ஒடுக்கப்பட்ட வகுப்பு ஆண்கள் மேல்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தக்கூடிய நிகழ்வுகள் இப்பொழுது அதிகரித்துள்ளன என்ற உண்மையை மறுக்கிறாரா? 

1980களுக்குப் பிறகு, தலித்திய – தமிழ்த்தேசியப் பரப்புரைகள் இல்லாத காலத்தில், தி.மு.க.வினர் தங்களுடைய குடும்பத் திருமண அழைப்புகளில் சாதிப் பட்டம் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். சாதிச் சங்கங்களில் பொறுப்பேற்றார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்?

திராவிட முன்னேற்றக் கழகம், தனது கட்சியின் ஒன்றியச் செயலாளர் – மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய்ப்புகளையும் சாதி பார்த்துதான் ஒவ்வொரு பகுதியிலும் வழங்கியது. இப்போக்கு 1970களிலிருந்து மிகவும் தீவிரமடைந்தது. பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை வேட்பாளராக தி.மு.க. நிறுத்துவதில்லை. ஆசிரியர் வீரமணியால் “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்ட செயலலிதாவின் அ.தி.மு.க.வும் இதையேதான் செய்தது. திராவிடக் கட்சிகளின் இந்த சாதியப் போக்கு தமிழ்த்தேசியம் தோன்றி பெரியாரை விமர்சிப்பதற்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது. இதற்கு யார் காரணம்?

வழக்கறிஞர் அருள்மொழி, தலித்தியர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததால்தான் சாதிக் கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்று கூறுவது, பெரியாரிய சிந்தனையை ஏற்றுக் கொண்ட திராவிடக் கட்சிகளைவிட தலித்திய அமைப்புகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் சமூகச் செல்வாக்கோடு பெரும் அமைப்புகளாக வளர்ந்துள்ளனவா? அல்லது வழக்கறிஞர் கூறுவதுபோல், தலித்திய – தமிழ்த்தேசிய அமைப்புகள் பெரியாருக்கு எதிராக செய்யும் விமர்சனத்தை பின்னுக்குத் தள்ளக்கூடிய ஆற்றல் திராவிட இயக்கங்களுக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. 

சாதிய சங்கங்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன்கொடுமைகளும் அதிகரித்ததற்கான காரணங்கள் என்று நாங்கள் பின் வருபவற்றை கருதுகிறோம். 

1960களில் தி.மு.க. குடும்பத்தினரின் திருமண அழைப்புகளில் மணமக்கள் பெற்றோர் பெயர்களில் பெரும்பாலும் சாதிப்பட்டம் இருக்காது. இப்பொழுது, தி.மு.க.வினர் சிறுவர்களாக உள்ள பேரக் குழந்தைகளின் பெயர்களில் கூட சாதிப்பட்டம் போட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கிறார்கள். இதுபோல் அவர்கள் எல்லா நிலைகளிலும் சாதியை முன்னிறுத்தும் போக்கு வளர்ந்திருக்கிறது. 

அதைப்போலவே, திருமண அழைப்பிதழ்களில் கம்யூனிஸ்ட்டு கட்சியினரும் சாதி போடும் பழக்கம் இப்போது உருவாகியிருக்கிறது. இதற்கான காரணங்கள் :

1. 1960களில் தி.மு.க, இன விடுதலை – நாட்டு விடுதலை என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கியது. நாட்டு விடுதலையைக் கைவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் அதிகாரம் – ஊழல் என்ற நிலையில், தி.மு.க. சீரழிந்தது. இலட்சியமில்லாத அமைப்பின் பொறுப்பிலும், உறுப்பிலும் இருப்பவர்களிடையே சமூகச் சீரழிவுகள் தோன்றுவதும், அது தொற்றுநோய் போல் சமூகம் முழுவதும் பரவுவதும் இயல்பே! 

அதைப்போல், இரசியப்புரட்சி – சீனப்புரட்சி போல் இங்கேயும் புரட்சி நடக்கப் போகிறது என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கிய கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், அந்த இலட்சியத்தைக் கைவிட்டபிறகு, அதற்கு மாற்றாக வேறொரு புதிய இலட்சியத்தை முன்வைக்காத நிலையில் - அதன் உறுப்பினர்களிடையே சீரழிவு ஏற்பட்டது. 

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, எல்லா ஆளும் கட்சியையும் ஆதரித்து வந்திருக்கிறது. அரசியல் முடிவுகளில் மிகவும் பிற்போக்காக, சீரழிவு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தனிப்பட்ட பரப்புரையில் மட்டும் கடவுள் மறுப்பு – பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று பேசுவதென்பது ஒரு தன் முரண்பாடு! அந்த தன் முரண்பாட்டுப் பரப்புரை, பெரிய பயன் தராது. 

அத்துடன், பெரியார் காலத்திலும் சரி, அவருக்குப் பிந்தைய காலத்திலும் சரி, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையே முதன்மைப்படுத்தி – பார்ப்பனரல்லாதோரிடம் உள்ள சாதி ஒடுக்குமுறையை – பார்ப்பன எதிர்ப்பு அளவுக்கு இல்லாவிட்டாலும் உரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திராவிடர் கழகம் பரப்புரை செய்யவில்லை! 

இவையும், இன்னும் சிலவும் தமிழ்நாட்டுக்குள் உள்ள காரணங்கள்! 

2. இதற்கு மேல், இந்தியத்தேசியம் என்பது ஆரியவாதம் மற்றும் பார்ப்பனிய வாதம்தான்! காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் இந்த ஆரியப் பார்ப்பனியவாதம்தான், அரசு அதிகாரத்தோடு செயல்படுகிறது. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வர்ணசாதி வலியுறுத்தப்படுகின்றன!

இந்த இந்திய ஆரியக் கட்டமைப்புக்குள் இருந்து வெளியேறுவதற்கு, திராவிடர் கழகம் எதுவும் செய்யவில்லை! பெரியார் காலத்திலும், அதற்குப் பிறகும் இந்தியத்தேசியவாதிகளை தொடர்ந்து ஆதரித்தே வந்திருக்கிறது. இன்றும், காங்கிரசோடு கூட்டணி போல் தி.க. செயல்படுகிறது. 

வர்ணசாதிப் பிளவுகளிலும், அவை தொடர்வதிலும், சாதி ஒடுக்குமுறைகளிலும் இந்தியத்தேசிய ஆளும் வர்க்க சக்திகள் மூலகாரணமாக விளங்குகின்றன. இவற்றின்பால், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை என்ன? 

தமிழ்த்தேசியம் – இந்தியத்தேசியத்தை மறுக்கிறது. தமிழ்த்தேசியம் முன்வைக்கும் தமிழர் அறம், “மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம்” என்கிறது. சாதி மதம் கடந்த சமத்துவம் மட்டுமல்ல, ஆண் – பெண் சமத்துவமும் தமிழர் அறத்தில் உள்ளது என்பதை தமிழ்த்தேசியவாதிகளாகிய நாங்கள் பரப்புரை செய்கிறோம். மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். 

ஒடுக்கப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - முன்னேறிய வகுப்புகளின் தமிழர்கள் அனைவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக வரலாற்றில் வாழ்ந்து வருகிறோம். நம் முன்னோர்கள் அனைவரும் ஓர் இனத்தின் மூலவர்கள்! தமிழ்ச் சாதி அனைத்திற்கும் – தாய்மொழி தமிழ்! திருவள்ளுவப்பேராசான், கணியன் பூங்குன்றன், கரிகால்சோழன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர், இன்று ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொதுவானவர்கள்; நம்முடைய மூலவர்கள்!

ஆரியத்தின் வர்ணாசிரமம் கற்பித்த – பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற சாதிக் கொடுமைகள் பிற்காலத்தில் புகுந்து, நம்மைச் சீரழித்துவிட்டன. நம் இனம் தோன்றி வளர்ந்திருந்த அந்த காலத்து சமத்துவத்தை மீட்போம் என்ற இனவழிப்பட்ட இயற்கையான உறவு உணர்ச்சியை நாங்கள் தமிழர்களிடம் எடுத்துக் கூறி, ஒற்றுமைக்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம். அதேவேளையில், சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக பரப்புரை மட்டுமின்றி, அங்கங்கே போராட்டங்களும் செய்து வருகிறோம். 

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைப் படிக்காதே ஆங்கிலத்தையே படி என்றும் கூறியதோடு, தமிழினம் என்று சொல்வது குறைபாடுடையது – திராவிட இனம் என்பதே சரி என்று இல்லாத திராவிட இனத்தை – தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது திணித்தது போன்ற பெரியாரின் பிழைகளை தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிப்பது குற்றமா? பெரியாரின் கருத்துகளைத்தான் பெரும்பாலான தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிக்கின்றனர். அவர் தமிழர் அல்லாதவர் என்பதை முதன்மைப்படுத்துவதில்லை! தமிழ் இனத்தில் பிறக்கவில்லை என்பதை அவருக்கான தகுதிக் குறைவாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் கருதவில்லை. 

எங்களுடைய தமிழ்த்தேசியம் வளர்ச்சி பெற்று, முழு வீச்சில் மக்களிடையே செல்வாக்கு பெறும்போது, சாதி அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழர்களிடையே ஒற்றுமை பெருமளவு ஏற்படும் என்பதை உறுதியாக நம்பலாம்! 

இதற்கான முன்னோட்டம்தான், ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தில் சாதி கடந்து குமரி முனை முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழர் என்ற உணர்ச்சியில் ஒன்று திரண்டது. இப்பொழுது, அனிதா உயிரிழப்புக்கு தமிழ்நாடு முழுக்க இரங்கல் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், நீட் தேர்வை எதிர்த்துப் போராடுவதும் தமிழ் இன உணர்ச்சியோடுதான் நடைபெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும். 

Labels: ,

"சாதி ஒழிப்புக்கான பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது" -- தோழர் பெ.மணியரசன்

Thursday, September 14, 2017


======================
இயக்குநர் ரஞ்சித்துக்கு..
======================

''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் 'தலித்' என்று சொல்லுங்கள் என காங்கிரஸாரிடமோ அல்லது பி.ஜே.பி-யினரிடமோ ரஞ்சித் கேட்பாரா? 

'திராவிடன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வெண்மணிப்படுகொலை நடக்கிறது, தெருவுக்கு நடுவே சுவர் கட்டப்படுகிறது... அப்போதெல்லாம், 'எங்களைப் பார்த்து திராவிடன் என்று சொல்லாதீர்கள்' என்று தி.மு.க-வினரைப் பார்த்துக் கேட்டிருக்கிறாரா?

தமிழன் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்?

ரஞ்சித்தினுடைய தாய்மொழியும் என்னுடைய தாய்மொழியும் தமிழ்தான்! சாதி என்பது தமிழர்களிடையே பிற்காலத்தில் வந்த ஒரு சீர்குலைவு. ஆரிய உபநிடதங்களும் வேதங்களும்தான் இந்த வர்ணாசிரம பாகுபாபாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் இப்போது 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லில் ஒருசேரச் சொல்லி ஏமாற்றிவருகிறார்கள். அது இந்துத்துவா அல்ல... ஆரியத்துவா என்று நாங்கள்தான் மக்களிடையே எடுத்துச் சொல்லிவருகிறோம்.

பெரியார் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் கட்சி வளர்த்தவர்கள்தான் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் என்று எல்லா பதவிகளையும் சாதி பார்த்தே கொடுக்கிறார்கள்.

நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். உனக்கும் எனக்கும் மூல பேராசான் திருவள்ளுவர்தான். நமது தாய் மண் தமிழகம் என்பதையெல்லாம் நாங்கள்தான் எடுத்துச்சொல்லி வருகிறோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நாமெல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன. 

மனதில் அழுக்கில்லாமல் இருத்தல், மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற மூன்று தமிழர் அறத்தைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதில், ஆண் - பெண்ணும் சமம் என்ற அர்த்தம் உள்ளடங்கியிருக்கிறது. அதனால்தான் சங்க இலக்கியத்திலேயே தலைவன் - தலைவி என்று வர்ணித்தார்கள். குடும்ப நலத்தைக்கூட 'இல்லறம்' என்று அறத்தோடு சேர்த்து வலியுறுத்திய இலக்கியம் தமிழைத் தவிர வேறு உலக மொழிகள் எவற்றிலாவது உண்டா?

ஆக, இப்படியெல்லாம் சமமாக உரிமையோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்தான் நாம் எல்லோரும். அந்த சமநிலையை மறுபடியும் மீட்டெடுக்கவேண்டுமானால், இடையில் ஏற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற வேறுபாட்டையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாமெல்லோரும் "தமிழராய்" ஒன்றுபட வேண்டியது அவசியம் என்பதைத்தான் நாங்கள் தெளிவாக வலியுறுத்திவருகிறோம். எத்தனை சாதிக் கிளைகளாக இன்று நாம் பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அடிமரத்து வேர் என்பது நமக்கு தமிழ்தான். இதுதான் நம்மை உளவியல் ரீதியாக ஒன்றிணைக்கும். 

தொழிற்சாலைகளை எல்லாம் அரசுடைமையாக்கிவிட்டால், முதலாளித்துவத்தை ஒழித்துவிடலாம். நிலத்தையெல்லாம் கையகப்படுத்தி கூட்டுப் பண்ணைகளை உருவாக்கிவிட்டால், நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துவிடலாம்.

ஆனால், "எதை எடுத்து சாதியை ஒழிப்பீர்கள்?"

அதற்கு மனதளவில் அல்லவா மெள்ள மெள்ள மாற்றம் வரவேண்டும்; வாழ்வுரிமையில் சமத்துவம் வரவேண்டும். இப்படி ஒவ்வொன்றாக உதிர்ந்துபோகக்கூடியதுதான் சாதி என்றக் கட்டமைப்பு. மற்றபடி உடனடியாக, நம்மிடையே இருக்கும் சாதி அழுக்கை ஒரே நாளில், தேதி குறித்து களைந்துவிட முடியாது. எனவே, சாதி ஒழிப்புக்கான பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது'' என்றார் உறுதியான குரலில்.

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்