<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழ்த் தேசியப் போராளி தோழர் கோவேந்தன் குடும்ப நிதி வரவு"--- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்

Tuesday, October 19, 2021


தமிழ்த் தேசியப் போராளி தோழர் கோவேந்தன் குடும்ப நிதி வரவு
=============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்
====================================================


நாள்:19.10.2021
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி.கோவேந்தன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு கடந்த 25.8.2021 அன்று காலமானார். அவருக்கு அகவை 34. அவர் இளம் மனைவி செந்தாமரையையும் ஒரே அன்பு மகள் இளம் பிறையையும் பாதுகாப்பதற்காகத் தோழர் கோவேந்தன் குடும்ப உதவி நிதி கோரி 15.9.2021 அன்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். 15.10.2021க்குள் நிதி அனுப்புமாறு கோரியிருந்தோம்.

18.10.2021 உடன் இவ்வரவு நன்கொடைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்.

கனரா வங்கியின் தஞ்சாவூர் தெற்கு வீதிக் கிளையில் திரு.பெ.மணியரசன் பெயரில் உள்ள சேமிப்புக் கணக்கிற்கு நிதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம்.

தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள இதரமாநிலங்கள், வெளிநாடுகள் ஆகியவற்றில் வாழும் தமிழ் இன உணர்வு, மொழி உணர்வு மிக்கவர்களும், சமூக அக்கறை மிகுந்தவர்களும் தொடர்ந்து நிதியளித்துப் பேராதரவு காட்டியுள்ளீர்கள்.

18.10.2021 வரை மேற்படி கணக்கில் தாங்கள் அளித்த மொத்த நன்கொடை ரூ.9,60,885-09. நன்கொடை அளித்தோர் பெயர்ப் பட்டியல் அவர்கள் அளித்த தொகை ஆகியவை நாளை வெளியிடப்படும்.

வங்கிக் கணக்கு விவரம்
கனரா வங்கி (Canara Bank)
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்: பெ.மணியரசன் (Maniyarasan P)
கணக்கு எண்: 63402200006500
கிளைக் குறியீட்டு எண் (IFSC Code) CNRB0001221
இக்கணக்கில் மேற்படி நன்கொடை
வரவுக்கு முன் இருந்த இருப்பு: - ரூ.290 – 00

18.10.2021 இல் இருக்கும் மொத்தத் தொகை: - ரூ.9,61,175 – 09
___________________________
கோவேந்தன் குடும்ப நிதி வரவு - ரூ.9,60,885-09
___________________________

பேரன்புடையீர்,
பேரன்புடனும், பொதுநல அக்கறையுடனும் தோழர் கோவேந்தன் குடும்ப உதவிநிதி அளித்த உங்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் செந்தாமரை, இளம்பிறை சார்பிலும் நெஞ்சு நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை பெயர்ப் பட்டியலுடன் – நிதி வரவு வெளியிடப்படும்.

விரைவில் இத்தொகையில் ஒரு பகுதி இளம்பிறை எதிர் காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதியாக இளம்பிறையின் 19-ஆம் அகவையில் அவர் எடுக்கும் வகையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். செந்தாமரைக்கு உரிய நிதி – அவரிடம் நேரில் வழங்கப்படும். அந்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

அனைவர்க்கும் நன்றி!

===================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================== 

 

Labels: ,

"இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை!"---- தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!

Friday, October 8, 2021


 =====================================

இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில்

தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை!
======================================
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ.மணியரசன் அறிக்கை!
======================================

இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் கூடுதலாக உள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னை அருள்மிகு கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரி இன்று (8.10.2021) செய்தி ஏடுகளில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பி.காம்.(B.Com.), பி.சி.ஏ.(B.C.A.), பி.பி.ஏ.(B.B.A.), பி.எஸ்.சி.(B.Sc.) கணிப்பொறிப் படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்படுள்ளது.

அதில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் படிப்புகளுக்கான வகுப்புகள் இல்லை. ஒரு வேளை இவ்விரு தலைப்புகளில் பட்டப் படிப்பு படிக்க மாணவர்கள் சேர மாட்டார்கள் என்று அரசு கருதி இப்படிப்புகள் சேர்க்கப்படவில்லையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

அவ்வாறு மாணவர்களிடையே இவ்விரு பட்டங்களுக்கான ஆர்வம் இல்லை என்றாலும், அவர்களை ஆர்வப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. கூடுதல் உதவித் தொகை – பணி அமர்த்தத்தில் இப்படிப்புப் படித்தோர்க்கு சிறப்பு முன்னுரிமைகள் போன்ற ஊக்கங்களை அளித்து – அவற்றை அறிவித்துதான் விண்ணப்பங்கள் கோர வேண்டும்.

அடுத்து இப்பொழுது விண்ணப்பங்கள் கோரப்படுள்ள பட்டப் படிப்புகளில் தமிழ்ப் பயிற்று மொழி உண்டா என்ற விவரமும் விளம்பரத்தில் இல்லை. தமிழ்ப் பயிற்று மொழிப் பாடப் படிப்புகள் கட்டாயத் தேவை. தமிழ்ப் பயிற்று மொழிவழி படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் தமிழ்நாடு அரசு 20 விழுக்காடு ஒதுக்கியுள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்து அறநிலையத் துறையின் சார்பில் இயங்குகின்ற மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்களும், தமிழ்ப் பயிற்று மொழி ஏற்பாடும் வேண்டும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
===================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================

Labels: , ,

இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை! பெ.மணியரசன் அறிக்கை!

 



இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில்
தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை!

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ.மணியரசன் அறிக்கை!

இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் கூடுதலாக உள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னை அருள்மிகு கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரி இன்று (8.10.2021) செய்தி ஏடுகளில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பி.காம்.(B.Com.), பி.சி.ஏ.(B.C.A.), பி.பி.ஏ.(B.B.A.), பி.எஸ்.சி.(B.Sc.) கணிப்பொறிப் படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்படுள்ளது. 

அதில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் படிப்புகளுக்கான வகுப்புகள் இல்லை.  ஒரு வேளை இவ்விரு தலைப்புகளில் பட்டப் படிப்பு படிக்க மாணவர்கள் சேர மாட்டார்கள் என்று அரசு கருதி இப்படிப்புகள் சேர்க்கப்படவில்லையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. 

அவ்வாறு மாணவர்களிடையே இவ்விரு பட்டங்களுக்கான ஆர்வம் இல்லை என்றாலும், அவர்களை ஆர்வப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. கூடுதல் உதவித் தொகை – பணி அமர்த்தத்தில் இப்படிப்புப் படித்தோர்க்கு சிறப்பு முன்னுரிமைகள் போன்ற ஊக்கங்களை அளித்து – அவற்றை அறிவித்துதான் விண்ணப்பங்கள் கோர வேண்டும்.

அடுத்து இப்பொழுது விண்ணப்பங்கள் கோரப்படுள்ள பட்டப் படிப்புகளில் தமிழ்ப் பயிற்று மொழி உண்டா என்ற விவரமும் விளம்பரத்தில் இல்லை. தமிழ்ப் பயிற்று மொழிப் பாடப் படிப்புகள் கட்டாயத் தேவை. தமிழ்ப் பயிற்று மொழிவழி படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் தமிழ்நாடு அரசு 20 விழுக்காடு ஒதுக்கியுள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்து அறநிலையத் துறையின் சார்பில் இயங்குகின்ற மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்களும், தமிழ்ப் பயிற்று மொழி ஏற்பாடும் வேண்டும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Labels: , ,

"தமிழ் இந்து யார்?" 'எம்தமிழ்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Thursday, October 7, 2021

"தமிழ் இந்து யார்?" 


'எம்தமிழ்' ஊடகத்துக்கு.. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"தமிழ் இந்து வேறு - ஆரிய இந்து வேறு!" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Tuesday, October 5, 2021

"தமிழ் இந்து வேறு - ஆரிய இந்து வேறு!"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

வெளியாரை வெளியேற்றும் திரிபுரா! ஐயா பெ. மணியரசன் வாழ்த்துரை!

வெளியாரை வெளியேற்றும் திரிபுரா!


தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் வாழ்த்துரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

வள்ளலாரின் “தன்னை அறிதல்!” ஐயா பெ. மணியரசன் உரை!

Friday, October 1, 2021

வள்ளலாரின் “தன்னை அறிதல்!” 


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்