<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மக்கள் போராட்டமா? அரசியல் அதிகாரமா? எது வெல்லும்?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Wednesday, April 28, 2021

"மக்கள் போராட்டமா? அரசியல்

 அதிகாரமா? எது வெல்லும்?"



'ழகரம்' ஊடகத்துக்கு.. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

உச்ச நீதிமன்றத்தின் உயரம் குறைகிறதா? - ஐயா பெ. மணியரசன்,

Sunday, April 25, 2021



உச்ச நீதிமன்றத்தின் உயரம் குறைகிறதா?

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக ஆந்திரத்தைச் சேர்ந்த என்.வி. இரமணா 24.04.2021 அன்று பதவி ஏற்றுள்ளார். 47ஆவது தலைமை நீதிபதியாக இருந்த சரத் ஏ. பொப்டே கடந்த 23.04.2021 அன்று பணி ஓய்வு பெற்றார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26இல் செயலுக்கு வந்த போதே அது முழுமையான ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பையோ, முழுமையான மதச்சார்பின்மையையோ கொண்டிருக்கவில்லை. முழுக்க முழுக்க மக்கள் உரிமை, சமத்துவப் பொருளியல் சார்ந்ததோ இல்லை. ஆனால் அதற்குள் நின்று கொண்டு அதனை மேம்படுத்தியவர்கள் வழக்கறிஞர்கள் சிலரும் நீதிபதிகள் சிலரும் ஆவர். அவர்கள் மக்களுக்குப் பெரும் கடமை ஆற்றியுள்ளார்கள்.

அரசமைப்புச் சட்டத்திற்கு முற்போக்கான விளக்கவுரைகள் வழங்கி அதை வளர்த்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பாராட்டிற்குரியவர்கள். 1970களிலும் அதற்குப் பின்னரும் இருந்த நீதிபதிகளில் சிலர் பெயர் என் நினைவில் நிற்கிறது. தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி, நீதிபதி வி.ஆர். கிருஷ்ணயர், நீதிபதி எச்.ஆர். கண்ணா, நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி இப்படி இன்னும் சிலர்.

வழக்கறிஞர்களில் நானி பால்கிவாலா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியவர். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமைக்கும் நான்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கின்றன. இந்த நான்கு தூண்களில் தான் அரசமைப்புச் சட்டம் நிற்கிறது. இவற்றை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற வாதத்தை ஒரு வழக்கில் நானி பால்கிவாலா முன்வைத்தார். இதனாலேயே இவ்வழக்கு புகழ் பெற்றது. கேசவானந்த பாரதி ஸ்ரீபாதகல்வாரு எதிர் கேரள அரசு (1973) என்ற வழக்கே அவ்வழக்கு! 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி தலைமையில் மொத்தம் 13 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அரசமைப்பு ஆயம் அவ்வழக்கை விசாரித்தது. கேரளத்தில் ஒரு மடத்தின் தலைவரான கேசவானந்த பாரதிக்காக மூத்த வழக்கறிஞர் நானி பால்கிவாலா வாதாடினார்.

தீர்ப்பு வெளிவந்தது; பதின்மூன்று நீதிபதிகளில் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி உட்பட ஏழு நீதிபதிகள் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கினர். ஆறு நீதிபதிகள் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தனர். அந்த ஏழு நீதிபதிகளும் நானி பால்கிவாலா முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளாக உள்ள நான்கு கூறுகளை மாற்றிட, திருத்திட நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கினர். அந்த நீதிபதிகள் பால்கி வாலாவைப் பாராட்டினர். ஆட்சியாளர்கள் தங்களுக்குள்ள நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பறித்து, புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டுவராமல் தடுக்கும் நோக்கம் கொண்டது பால்கி வாலாவும் ஏழு நீதிபதிகளும் கொண்டு வந்த அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானக் கோட்பாடு!

உச்ச நீதிமன்றத்தின் அக்காலத் தரத்திற்கு இப்போதுள்ள நிலையை ஒப்பிட முடியுமா? பணி ஓய்வு பெறும் நீதிபதி பொப்டேயையும் பதவி ஏற்கும் என்.வி. இரமணாவையும் ஒப்பிட முடியுமா?

சம்மு காசுமீருக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 வழங்கிய சிறப்புரிமையை 2019இல் நீக்கி, அதன் மாநிலத் தகுதியையும் அழித்து, இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது மோடி ஆட்சி. இந்த அநீதியை எதிர்த்தும் மேற்படி திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  தலைவர்களையும் தொண்டர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் 100 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதையத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் அப்படியே காலவரம்பின்றிக் கிடப்பில் போட்டார். அதேவேளை, இரபேல் போர் வானூர்தி ஊழல் வழக்கிலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் பா.ச.க. ஆட்சியினர்க்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கினார். பணி ஓய்வு பெற்ற உடனேயே பா.ச.க.வினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார் ரஞ்சன் கோகோய்!

அடுத்துத் தலைமை நீதிபதியான சரத் ஏ.பொப்டே சம்மு காசுமீர் கலைப்புத் தொடர்பான 100 மனுக்களையும் அவர் பதவிக்காலமான 18 மாதமும் விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, ஓய்வு பெற்றுள்ளார். அதேபோல் மிக மோசமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டுப் பணி ஓய்வு பெற்றுள்ளார் பொப்டே!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எவ்வளவு பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடந்தன! தில்லியில் ஆரியத்துவா பயங்கரவாதிகளால் பலர் கொலை செய்யப்பட்டனர். தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முதலியவற்றில் காவல்துறையின் கண் முன்னே பா.ச.க.வின் வன்முறைப் பிரிவினர் உள்ளே புகுந்து மாணவர்களையும் பேராசிரியர்களையும் தாக்கினர். இந்தியாவே மாதக்கணக்கில் கொந்தளிப்பில் போராடிக் கொண்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதி பொப்டே, CAA தொடர்பான மனுக்களைக் கடைசி வரை விசாரணைக்கு எடுக்கவே இல்லை!

மியான்மரில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு, புத்த மதவெறியர்களால் ரோகிங்கியா முசுலிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உயிர் காக்க எல்லையோர நாடான இந்தியாவுக்குள் ஓடி வந்தார்கள் ரோகிங்கியா மக்கள். அவர்களை அனுமதிக்க மறுத்து - திருப்பி விரட்டியது பா.ச.க ஆட்சி! அந்த மனிதநேயமற்றச் செயலை தடுக்கக் கோரி பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி பொப்டே கடைசி வரை விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டார்.

ரோகிங்கியா ஏதிலியரைச் சிறைப் பிடிக்க தடுக்கக் கோரிய அவசர மனுவைத் தள்ளுபடி செய்தார் பொப்டே!

பெருங்குழும நிறுவனங்கள் தேர்தல் காலத்தில் கட்சிகளுக்குக் கொடுக்கும் நிதிப் பத்திரங்கள் (Electoral Bonds) மற்றும் நிதியளிப்புப் பற்றி வெளியே தெரிவிக்க வேண்டியதில்லை, கணக்கும் காட்டவேண்டியதில்லை என்று பா.ச.க ஆட்சி கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் – பெரியோர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அம்மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் காலம் கடத்தி பின்னர், அம்மனுக்களைத் தள்ளுபடி செய்தது பொப்டே தலைமையிலான உச்ச நீதிமன்றம்.

பொப்டே போய்விட்டார்; புதிய தலைமை நீதிபதியாக என்.வி. இரமணா வந்துள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து கொண்டு அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆந்திர உயர் நீதிமன்றத்தை ஆந்திர முதலமைச்சர் செகன் மோகன் ரெட்டிக்கு எதிராகச் செயல்பட வைத்துள்ளார்.

ஆந்திரத்தின் முதலமைச்சராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கான புதிய தலைநகரமாக அமராவதியை உருவாக்குகிறார். அதில் ஏராளமான ஊழல்கள் என்று பின்னர் வந்த முதல்வர் செகன்மோகன் கூறுகிறார். அரசின் சிறப்புக் காவல் படை சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்கிறது. அவ்வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தின் மூலம் முடக்குகிறார் என்.வி. இரமணா. இவர் மாணவப் பருவத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேசுவரி 2019 செப்டம்பர் 15 அன்று  அவசரம் அவசரமாக இரவில் உயர் நீதிமன்றத்தைக் கூட்டி சந்திரபாபு நாயுடு மேல் சிறப்புக் காவல்படை பதிவு செய்த வழக்கைப் பற்றிய தகவலை எந்த ஊடகமும் சமூக வலைத்தளங்களும் வெளியிடக்கூடாது என்று ஆணை இடுகிறார்.

அடுத்து சந்திரபாபு நாயுடு மீது பதியப்பட்ட ஊழல் வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையையும், அவ்வழக்கிற்குப் பரிந்துரைத்த அமைச்சரவைத் துணைக்குழுவின் அறிக்கையையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இருவர் வழக்குத் தொடுக்கின்றனர். அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சோமயாசுலு, சந்திரபாபு நாயுடு மீதான சிறப்புக் காவல் படையின் முதல் தகவல் அறிக்கைக்கும் (FIR) அமைச்சரவைத் துணைக்குழுவின் பரிந்துரை அறிக்கைக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறார்.

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்தத் தடையை எதிர்த்து, ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. நான்கு வாரங்களைக் கடந்தும் உச்ச நீதிமன்றம் இந்த மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2020 அக்டோபர் 1ஆம் நாள் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு “ஆந்திரத்தில் அரசமைப்புச் சட்டம் சீர்குலைந்து இருக்கிறது; இது தொடர்பாக ஆணை இடப்படும், எனவே அடுத்த விசாரணைக்கு ஆந்திர அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இந்நீதிமன்றம் வரவேண்டும்” என்று ஆணை இட்டது.

அப்போது விழித்துகொண்ட செகன் மோகன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொப்டே அவர்களுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். ஊடகங்களிலும் அதை வரச் செய்தார்.

இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 356 ஐப் பயன்படுத்தி, செகன்மோகன் ஆட்சியைக் கலைக்க ஆணையிடும் அளவிற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் செல்வதற்கு – அதனை இயக்கியவர் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. இரமணா என்பது செகன்மோகன் கடிதம் மூலம் வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகு உச்ச நீதிமன்றமும் என்.வி. இரமணா முயற்சிகளைக் கட்டுப்படுத்தியதாக நம்பலாம்.

இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த காலங்களில் அடைந்திருந்த உயரம் அதிகம். ஆனால் அண்மைக் காலமாக அதற்கேற்பட்ட சரிவுகள் – அதன் மதிப்பைக் குறைந்தன என்று பார்க்கக் கூடாது; மக்களின் சனநாயக உரிமைகள், மாநில உரிமைகள் முதலியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றே பார்க்க வேண்டும்.

நீதிபதிகள் தேர்வில் சமூக நீதி
---------------------------------------- 
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சாதிப் பன்மையும் மதப் பன்மையும் சமூகச் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவில் அடிப்படை அரசு ஊழியரிலிருந்து அதிகாரி வரை இட ஒதுக்கீடு செயல்படுகிறது. அது தேவை! மாவட்ட நீதிபதி வரை இட ஒதுக்கீடு செயல்படுகிறது. ஆனால் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் தேர்வுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது முரண்பாடான விதியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34. இதில் இப்பொழுது 27 பேர் பணியில் இருக்கிறார்கள். ஏழு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த 27 நீதிபதிகளில் சற்றொப்ப 18 பேர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், கிறித்துவர் இசுலாமியர் ஒருவர் நீதிபதியாக இருக்கிறார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்; அவரும் பிராமணர்!

தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்விற்கு இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டிருந்தால் ஒடுக்கப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இன்னும் கூடுதல் நீதிபதிகள் கிடைத்திருப்பர். பெரும்பாலும் ஒருவர் சமூகத்தில் வசிக்கும் படிநிலை அவர் கருத்துகளில் வெளிப்படும். முழுமையாக இல்லை என்றாலும் ஓரளவாவது வெளிப்படும். வழக்குகளை அணுகும்போது சமூக அமைப்புத் தேவைகள் – நீதிகள் அவர்கள் உளவியலில் செயல்பட வாய்ப்பளிக்கும். எனவே, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு  அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

பணி ஓய்விற்குப் பிறகு அரசு, தனியார்
வேலைக்கு போகத் தடை வேண்டும்!
-----------------------------------------------------
இந்தியாவில் நீதித்துறை தற்சார்பானது. நீதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. மாவட்ட நீதிபதி வரை உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீது அந்தந்த மாநில உயர் நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க முடியாது.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி – அதன் வழியாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

அவ்வாறான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அவையில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதில் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு நடவடிக்கை எடுப்பது மிக மிக அரிது.

ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் கட்டுப்படாமல் தற்சார்பாக, தன்னாட்சி உரிமையுடன் நீதித்துறை செயல்படவேண்டியது. மிக மிகத் தேவை. அதற்காகவே நீதித்துறைக்கு இவ்வாறான தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதிலும் ஆளுங்கட்சியின் அடியொற்றிச் செல்லும் போக்குகள் இருந்ததை இக்கட்டுரையின் முற்பகுதியில் பார்த்தோம்.

நீதிபதிகள் நீதி தவறும் போது, நீதி காக்கும் தனி நபரின் சட்ட வழிப்பட்ட தலையீடுகள், மக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி முதலியவையே நீதித்துறையை சரியான தடத்தில் செல்ல வைக்கும்.

நீதித்துறை தற்சார்புடன் – நீதியின் பக்கம் நின்று செயல்படுவதற்கு மேலும் ஒரு நிபந்தனையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறது.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப்பின் வேறு எந்தத் தனியார் பணிக்கும் அரசுப் பணிக்கும் போகத் தடை விதிக்க வேண்டும். அவர்களை எந்த விசாரணை ஆணையத்திற்கும் தலைவராகப் போடத் தடைவிதிக்க வேண்டும். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிடத் தடை விதிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் ஈடுகட்டும் வகையில் அவர்களின் ஓய்வு அகவையைச் சற்றுக் கூடுதலாக்கலாம். சம்பளம், ஓய்வுதியம் ஆகியவற்றைத் தனிவகைப் படுத்திக் கூடுதலாக்கலாம். இவ்வாறான திறனாய்வுகளையும் மாற்றுத் திட்டங்களையும் இத்தருணத்தில் சிந்திப்போம்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 



 

Labels: , ,

"உயிரே போனாலும் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டேன்" 'ராவணா' ஊடகத்துக்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Thursday, April 22, 2021

"உயிரே போனாலும் 

ஒரு அடி கூட பின்வாங்க மாட்டேன்"


'ராவணா' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"தமிழன்னு சொன்ன தேசவிரோதியா?" ”ழகரம்'' இணைய ஊடகத்துக்கு ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Thursday, April 15, 2021

"தமிழன்னு சொன்ன தேசவிரோதியா?"


”ழகரம்'' இணைய ஊடகத்துக்கு

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

தமிழ்த்தேசிய முன்னோடி தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ - ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

Sunday, April 11, 2021




தமிழ்த்தேசிய முன்னோடி
தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ அவர்களை இளந் தமிழ்த்தேசியர்கள் அறிந்து கொள்வது மிகமிகத் தேவை. தமிழ்த்தேசியத்தின் முன்னோடிச் சான்றோர்களில் அண்ணல்தங்கோ அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.

நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் சரியான சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தோன்றினும் அவர்கள் மக்கள் தலைவர்களாக வளர்ச்சியடையாமற் போனது அவர்களுக்கான இழப்பன்று. தமிழினத்தின் இழப்பு!

பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அண்ணல் தங்கோ! தமிழ்நாடு விடுதலை அடையவேண்டும் என்று முழங்கியவர்.

இன்று (12.04.2020) அண்ணல்தங்கோ அவர்களின் பிறந்தநாள். அவர் 1904-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சனவரி 4-ஆம் நாள் இறந்த போது, அவர் பெருமையை அறிஞர் பெருமக்களும் தமிழுணர்வுப் பெரியோர்களும் தெரிவித்த இரங்கல் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் அப்போது (04.01.1974) எழுதிய இரங்கல் பா:

அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ
சேயவன் வழுத்தொடு செந்தமிழ் பேணித்
தூய தமிழ்க்கா வலனெனத் தோன்றித்
தேயப் பிரிவைத் தீர்க்கத் துணிந்த
அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ
தன்முயற் சியினால் தன்னை உயர்த்தி
மன்னியல் விடுதலை மாண்ட மறவ
உள்ளுவ தெல்லாம் உயர்வே யுள்ளித்
தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்
நீயெமை மறப்பினும் நினைமற வேமே
சேயரும் கேளிரும் நேயரும் ஆயேம்
மாயிரு ஞாலம் மன்னிய காலே!

“தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்” என்று பாவாணர் பாராட்டினார். மிகச்சரியான தெளிவான கொள்கைகள் கொண்ட அண்ணல்தங்கோ, கொள்கையை விட்டு விலகாத இலட்சியத் தமிழர் என்று பாவாணர் பாராட்டுகிறார்.

அண்ணல்தங்கோவின் தெளிவான, சரியான கொள்கைகள் யாவை? தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, எண்ணு வதெல்லாம் உயர்வாய் எண்ணும் பண்பு போன்றவை!

“தூய தமிழ்க் காவலன்”, தேயப் பிரிவைத் (தேசப் பிரிவை) தீர்க்கத் துணிந்த – மன்னியல் விடுதலை மறவன்” என்றெல்லாம் பாவாணர் போற்றுகிறார்.

1974-இல் அண்ணல்தங்கோ காலாமான போது, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்  டி.ஆர்.சுந்தரம் பிள்ளை அவர்கள் அண்ணல் தங்கோ இல்லத்திற்கு எழுதிய இரங்கல் கடிதம் மிகவும் குறிப்பிடத் தக்கது.

“ அருமைச் சகோதரர் அண்ணல்தங்கோ அவர்கள் இறந்து விட்டார் என்ற தபாலை பார்த்ததும் திடீர் அதிர்ச்சியடைந்தேன். கண்ணீர் வடித்தேன். உடம்பு சிலிர்த்தது. நடுக்கம் கொண்டேன். இந்தக் கடிதம் எழுத்து எழுத்தாகக் கூட்டி எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார் டி.ஆர்.சுந்தரம் அவர்கள்.

அண்ணல்தங்கோ அவர்கள், டி.ஆர்.சுந்தரம், ஜி.டி.நாயுடு உள்ளிட்ட முகாமையானவர்களிடம் கலந்து பேசிய ஒரு செய்தியை டி.ஆர்.சுந்தரம் மறை பொருளாகத் தமது இரங்கல் கடிதத்தில் குறிப்பிடுகிறார்:

“இங்கு வந்து தன் இயக்கத்தைப் பற்றிக் கோவையில் பேச வேண்டும், பொதுக்கூட்டம் நடத்த வேண்டும், மேன்மையுற்ற ஜி.டி.நாயுடு அவர்களைக் கண்டு எல்லாம் நடத்த வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன் எழுதியிருந்தார்.”

டி.ஆர்.எஸ், ஜி.டி.நாயுடு போன்றவர்களிடம் அண்ணல்தங்கோ நேரடியாகவும் கடிதம் வாயிலாகவும் பேசிய முகாமையான செய்தி, தமிழ்நாடு விடுதலைக்கான இயக்கம் தொடங்க வேண்டும் என்பதுதான். இதனை இத்தனை உறுதியாக நான் கூறுவதற்குக் காரணம் ஜி.டி.நாயுடு  அவர்கட்கும் அண்ணல்தங்கோ அவர்கட்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அண்ணல் தங்கோ பெயரன் அருட்செல்வன் வழியாக அறிந்ததுதான்! அண்ணல் தங்கோ அவர்கட்கு ஜி.டி.நாயுடு அர்கள் எழுதிய நீண்ட கடிதத்தைப் பார்த்தேன். அதில் தனித்தமிழ்நாடுக் கோரிக்கையை இருவரும் ஒத்த கருத்துடன் பகிர்ந்து கொண்ட செய்தி உள்ளது.

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஜி.டி.நாயுடு அவர்களின் உதவியை நாடியதும், ஜி.டி.நாயுடு அவர்கள் உதவி செய்ய ஒப்புக் கொண்டதும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் எழுத்துகள் வழி ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான்.

அண்ணல்தங்கோ அவர்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் காலமான அதே 04.01.1974 அன்று தான் கோவையில் ஜி.டி.நாயுடு அவர்களும் காலமானார்! என்னே துயரம்!

அண்ணல்தங்கோ அவர்கள் பெயரை நான் முதல் முதலாக அறிந்து கொண்டது பாவாணர் அவர்கள் வழியாகத் தான். பாவாணர் – பாவலரேறு ஆகியோர் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்க் கழகத்தில் நான் செயல்பட்ட போது, திருச்சி அசோகா விடுதியில் பாவாணர் தலைமையில் உ.த.க.வின் செயல்பாட்டாளர் பேரவை நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அண்ணல்தங்கோ அவர்களின் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு இலட்சியம், அவர் பட்டாள மிடுக்குடன் வணக்கம் சொல்லும் முறை முதலியவற்றைப் பாராட்டிப் பேசினார் பாவாணர்.

தனித்தமிழ் ஆர்வம்

அண்ணல்தங்கோவுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன், தந்தையார் பெயர் முருகப்பனார். தாயார் பெயர் மாணிக்கம் அம்மாள். அவர் ஊர் குடியாத்தம். சுவாமிநாதன் என்ற பெயரை அண்ணல் தங்கோ என்று தனித்தமிழில் மாற்றிக் கொண்டார். தம் பெயரை மாற்றியது மட்டுமின்றி மற்றும் பலர்க்கும் தமிழில் பெயர் மாற்றினார். அவர்களில் சிலர்:

தி.மு.க. தலைர்களில் ஒருவரான அரங்கசாமிக்கு அரங்கண்ணல்; தி.க. தலைவராகப் பின்னால் வந்த காந்திமதிக்கு - மணியம்மை; தி.மு.க தலைவர்களில் ஒருவரான சி.பி.சின்ராஜ் – சி.பி.சிற்றரசு; திருச்சி குளித்தலை தனபாக்கியம் – பொற்செல்வி (தி.மு.க.)…. இவ்வாறு பல பேருக்கு அண்ணல் தங்கோ மாற்றிய தமிழ்ப் பெயர்கள் நிலைத்துவிட்டன.

நிலைக்காமல் போன பல பெயர்கள் உண்டு. மு.கருணாநிதிக்கு - அருட்செல்வன், சி.பா.ஆதித்தனார்க்கு – சி.பா.பகலவனார், கிருபானந்த வாரியார்க்கு – அருளின்பக்கடலார்.

ஆரிய எதிர்ப்பு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரசுப் போராளியாக அரசியலில் நுழைந்தவர் அண்ணல் தங்கோ. பல கட்டங்களில் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு மொத்தம் 5½ ஆண்டுகள் சிறையில் இருந்தார். காங்கிரசுக்காரராக இருந்தபோதிலும் 1927-இல் தமது திருமணத்தில் பிராமணப் புரோகிதரையும் சமற்கிருதத்தையும் விலக்கி, தாமே தலைமை தாங்கி சிவமணி அம்மையாரை மணம் முடித்தார்.
தமது கடித அட்டைத் தலைப்பில் “உள்ளுவம் வள்ளுவம் தள்ளுவம் ஆரியம்” என்று அச்சிட்டுக் கொண்டார்
.
பெரியார், அண்ணா ஆகியோரோடு சேர்ந்து தன்மதிப்பு இயக்கத்திலும் செயல்பட்டிருக்கிறார். பெரியாரின் “திராவிட” இனவாதத்தை மறுத்து அவரிடமிருந்து வெளியேறிவிட்டார்.

“தமிழ்நிலம்” என்ற திங்கள் இதழை இலக்கிய ஏடாக, இனவிடுதலைத் தாளிகையாகத் தொடங்கினார். பின்னர் அவ்விதழைக் கிழமை(வார) ஏடாக மாற்றினார்.
பராசக்தி, பெற்ற மனம், பசியின் கொடுமை, கோமதியின் காதலன் ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள நூல்களில் சில:

1. அறிவுப் பா 
2. தமிழ் மகள் தந்த செய்தி அல்லது சிறையில் நான் கண்ட கனவு 
3. அண்ணல் முத்தம்மாள் பாட்டு 
4. மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா? 

தமிழர் திருநாள்

தைப் பொங்கல் நாளைத் தமிழர் திருநாள் என்ற பெயரில் இலக்கிய அரங்குகள் நடத்திக் கொண்டாடினார். வேலூரில் அண்ணல்தங்கோ நடத்திய தமிழர் திருநாள் விழாக்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவாணர், மு.வ, க.அப்பாத்துரையார், கலைஞர் மு.கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், சதாசிவப் பண்டாரத்தார், திருக்குறளார் முனுசாமி முதலிய அறிஞர்கள் உரையாற்றினர்.

தமிழ்த்தேசியத்தின் மூலவர்கள்

முறையான கல்வி நிலையங்களில் கற்காமல் தன் முயற்சியில் கற்றறிந்த தமிழ்ச் சான்றோராக விளங்கினார் குடியாத்தம் முருகப்பனார் அண்ணல்தங்கோ! தமிழறிஞர்களுடனும் நல்ல உறவு; தமிழ், தமிழ்நாட்டுத் தனிஉரிமையில் அக்கறையுள்ள ஜி.டி.நாயுடு, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர் சுந்தரம் போன்றவர்களுடனும் கொள்கை வழிப்பட்டு நல்ல நட்பு! துல்லியமான தமிழ்த் தேசிய வரையறுப்பு!

இப்படிப்பட்ட அண்ணல்தங்கோ அவர்களை இன்றையத் தலைமுறைத் தமிழர்கள் எத்தனை பேர் அறிந்து வைத்திருப்பார்கள்? 1916-இல் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கி, தன் குடும்பத்தினரை சிறைக்கனுப்பி, தமிழ்நாடு தமிழர்க்கே தீர்மானத்தை முன் மொழிந்த தமிழ்த்தேசியர் மறைமலை அடிகளாரை எவ்வளவு பேர் அறிவர்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமின்றி, சரியான மொழிக் கொள்கை உள்ள தமிழ்த்தேசியராக விளங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுநாதம், 1965 இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் பாதுகாப்பு சட்டத்தில் சிறை சென்ற வரும், தமிழினக் கொள்கையில் ஊன்றி நின்றவருமான பேராசிரியர் சி.இலக்குவனார்  போன்றோரை எத்தனை பேர் அறிவர்? 

இவர்களையும் இவர்களைப் போன்றவர்களையும் இளந்தலைமுறைத் தமிழர்கள் அறிய வேண்டும். இவர்கள் தங்களின் இலட்சியம் நிறைவேறாமல் மனக் காயத்துடன் மாண்டார்கள்! இவர்களின் இந்த மனக் காயத்தை ஒவ்வொரு இளந்தமிழனும் தமிழச்சியும் தங்கள் நெஞ்சில் பட்ட காயமாக ஏந்த வேண்டும்! காயம் பட்ட புலிக்கு ஏற்படும் சினமும் சீற்றமும் உங்களுக்கு உருவாக வேண்டும்!

நம் முன்னோர்களின் இலட்சியத்தை நாம் நம் காலத்தில் நிறைவேற்றுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்கவேண்டும். இவ்வுறுதியேற்பே அண்ணல்தங்கோ போன்ற தமிழ்த்தேசிய முன்னோடிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்!
 

கண்ணோட்டம் இணைய இதழ்


 



 

Labels: , ,

மூத்த தலைவர் ஆனைமுத்து ஐயா மறைவு பேரிழப்பாகும்! - பெ. மணியரசன் இரங்கல்!

Tuesday, April 6, 2021



மூத்த தலைவர் ஆனைமுத்து 
ஐயா  மறைவு பேரிழப்பாகும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், பெரியாரிய சிந்தனை அறிஞருமான ஐயா வே. ஆனைமுத்து அவர்கள், புதுவை மருத்துவமனையில் இன்று (06.04.2021) முற்பகல் 11.45 மணியளவில் காலமான செய்தி, பெரும் துயரம் அளிக்கிறது! 

ஐயா அவர்கள் உடல் நலிவுற்று சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின்னர் தாம்பரத்தில் தமது தலைமகன் இல்லத்தில் ஓய்வுபெற்று வந்த காலத்தில், அவரைப் போய் பார்த்து உடல்நலம் விசாரித்து வந்தேன். நலிவுற்றுப் படுக்கையில் இருந்த நிலையிலும், அடையாளம் கண்டு என்னுடன் பேசினார்கள். 

ஆனைமுத்து ஐயா அவர்கள், எடுத்துக்காட்டான இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர். சமூகப் பணியில் பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் தொண்டாற்றுவது என்பதே மிகவும் அரிதான செயலாகிவிட்ட இக்காலத்தில், ஐயா அவர்கள் இம்மூன்றுக்கும் இச்சைப் படாமல் செம்மாந்து இலட்சிய வாழ்வு வாழ்ந்து பணியாற்றியவர். இளையோருக்கு அவரது அர்ப்பணிப்பு வாழ்வு முன்னோடிச் செயலாகும்! 

பெரியார் அவர்களின் சிந்தனைகளை முதன் முதலில் தொகுத்து, மூன்று தொகுதிகளாக வழங்கி அவற்றை நிரந்தரமாகப் பதிவு செய்த பெருமை, ஐயா ஆனைமுத்து அவர்களையே சேரும். பெரியார் வழியில் நின்று, வர்ணாசிரமம் – ஆரியத்துவா ஆதிக்கம் ஆகியவற்றை விடாப்பிடியாக எதிர்த்து வந்தார். 

இந்தியா முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நடுவண் அரசுப் பணிகளில் மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று பெரும்பாடுபட்டவர் ஐயா ஆனைமுத்து அவர்கள். வடமாநிலங்களில் பல கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பரப்புரை செய்தவர். அம்மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் உரிமைச் சிந்தனையாளர்கள், ஐயா அவர்களை அழைத்து இப்பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, மண்டல் குழு அமைத்திட ஐயா ஆனைமுத்து அவர்களும், அவர்களுடைய வடநாட்டுத் தோழர்களும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. பின்னர், மண்டல் குழுவின் பரிந்துரைகள் இந்திய ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அவற்றை செயல்படுத்துவதற்கு ஆனைமுத்து ஐயா அவர்கள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். 

மார்க்சிய லெனினியம் நன்கு கற்றவர். சமூக வளர்ச்சியின் இயங்கியல் விதிகளை அறிந்தவர். தமிழ்த்தேசிய இனம் குறித்த சரியான புரிதல் உள்ளவர். தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, போராட்டங்கள் நடத்தியவர். ஐயா அவர்களோடு, நாங்களும் இணைந்து தமிழ்வழிக் கல்விக்கானப் போராட்டங்களில் தளைப்பட்டுள்ளோம். தமிழ்த்தேசிய இனத்திற்கு இறை யாண்மை வேண்டும் என்பதில், உறுதியானவர். இவ்வாறான தமிழ்த்தேசியக் கொள்கைகளை “சிந்தனையாளன்” இதழிலும், பொது வெளியிலும் வலியுறுத்தி வந்தார்கள். 

மொழி – இன – பகுத்தறிவு உணர்வோடு செயல்பட்டு வந்த மூத்த தலைவர் ஐயா ஆனைமுத்து அவர்கள் மறைவு என்பது, தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்! ஐயா அவர்களுடைய சிந்தனைகளும், கொள்கைகளும் இளம் தலைமுறைக்கு என்றும் வழிகாட்டும்! ஆனைமுத்து ஐயா அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும், அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,

தீவினை இரட்டையர்! காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை! - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Monday, April 5, 2021



தீவினை இரட்டையர்!

காலாவதி ஆகிப்போன
நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


எலுமிச்சை மரம் எட்டிக் காய்களைக் காய்த்தால் என்ன செய்வது? தேனீக்களின் தேனடையில் தேள் கூட்டம் குடியிருந்தால் என்ன செய்வது? நாடாளுமன்ற, சட்டமன்ற சனநாயகம் தலைவர்களின் சர்வாதிகாரமாய், கொள்ளையர்களின் கூடாரமாய் மாறிப் போனால் என்ன செய்வது?

சனநாயகம் என்பதை “வாக்களிப்பது - ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது” என்று சுருக்கிவிட்டார்கள். விவரம் தெரியாமல் இப்படிச் சுருக்கவில்லை; வேண்டுமென்றே தன்னலவாதிகள் இப்படிச் சுருக்கிவிட்டார்கள்.

இப்போதுள்ள தலைவர்கள் கெட்டுப்போய் விட்டார்கள்; தன்னலமற்ற மாற்றுத் தலைவர்கள் உருவானால் நிலைமை சரியாகிவிடும் என்று சிலர் சிந்திக்கிறார்கள். தன்னலமற்ற மாற்றுத் தலைவர்கள் வளர்ச்சியடையத் தன்னலத் தலைவர்கள் வழி விடுவார்களா? மாட்டார்கள்.

தன்னலத் தலைவர்கள் மட்டுமா தடையாய் இருப்பார்கள்? அவர்கள் கட்சிகளின் அடிநிலைத் தொண்டர்கள் வரை தடையாய் இருப்பார்கள்! வெகு மக்களில் கணிசமானோர் ஊழல் தலைவர்களையே சார்ந்திருப்பார்கள்!

ஊழல் தலைவர்கள், கை தேர்ந்த உளவியல் விற்பன்னர்கள்! மக்களை ஊழல் பேர்வழிகளாக மாற்றினால்தான் தங்களின் ஊழல் பேரரசு நிலைக்கும் என்ற உத்தியைக் கண்டறிந்தவர்கள்.

பெருங்கட்சிகள் ஊழல் பேரரசுகள்; அதேவேளை அவை ஊழல் கூட்டரசுகள்! ஒவ்வொரு கட்சியும் ஓர் ஊழல் கூட்டாட்சி நடத்துகிறது. கிளைச் செயலாளர் வரைக்கும் ஊழல் வருமானம் ஈட்ட வழி வகுத்துள்ளார்கள். ஓர் ஊரில் ஒப்பந்தக்காரர் ஒரு பொது வேலை செய்கிறார் என்றால், ஆட்சியில் உள்ள தலைவர் மற்றும் அமைச்சர்கள், மாவட்டங்கள், ஒன்றியங்கள், கிளைப் பொறுப்பாளர்கள் வரை உள்ளோருக்கு அந்த ஒப்பந்தக்காரர் விகித அடிப்படையில் தொகை வெட்டியாக வேண்டும். கறாராக வரையறுக்கப்பட்ட விகிதம் இருக்கிறது.

எதிர்க்கட்சியினரும் அந்த ஒப்பந்தக்காரரிடம் தொகை வெட்டி விடுகிறார்கள். தராவிட்டால் வேலை சரியில்லை என்று போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சியினர் மிரட்டுவர்! ஒப்பந்த வேலையை ஊழலாகச் செய்யும் ஒப்பந்தக்காரர் அஞ்சுவார். எதிர்க்கட்சிக்கும் பணம் வெட்டுவார்.

கட்சிப் பொறுப்புகளில் இல்லாத - கட்சிகளில் உறுப்பினர் ஆகாத பல பேர் ஊழல் கட்சிகளை - ஊழல் தலைவர்களைச் சார்ந்திருக்கக் காரணம் என்ன? இலவச ஆடு, மாடு, வீடு, கோழி, வேளாண் கருவிகள், மானி யங்கள், வங்கிக்கடன்கள் என்று எத்தனையோ ஆதாயங்களை எதிர்பார்த்து, எத்தனையோ சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவு தேடி அவர்கள் கட்சிகளை அண்டி வாழ்கிறார்கள்.

“மக்களின் உரிமைகளைக் காப்பதற்காகவும் மீட்பதற்காகவும்” மேற்படிக் கட்சிகள் நடத்தும் கண்டனப் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கட்டணம் வாங்காமல் கலந்து கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

அரசுத் துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் கையூட்டு வாங்குவது சட்டப்படியான வசூல் போன்ற “தார்மீக” ஏற்பைப் பெற்றுள்ளது.

அரசு வேலையில் சேர்க்க அமைச்சர்களுக்குக் கையூட்டு; இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றிற்குத் தரவாரியாகக் கையூட்டு!

தனக்குக் கீழே பணியாற்ற வருபவரிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு வேலை கொடுக்கிறார்கள், “தலைவர்கள்”! இவர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, உழைப்பாளர்களைச் சுரண்டி, உற்பத்தி செய்த பொருளைக் கொள்ளை இலாபத்திற்கு விற்கும் பெரும் பெரும் தொழில் நிறுவனங்களிடம் எவ்வளவு கையூட்டு வாங்குவார்கள்!

பெருங்குழும நிறுவனங்களோடு, பன்னாட்டு நிறுவனங்ளோடு ஆட்சித் தலைவர்கள் போடும் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்” அடிநாதம் - “தலைவருக்குக் கையூட்டு எவ்வளவு” என்ற புரிந்துணர்வுதான்! அதன்பிறகுதான் பிற புரிந்துணர்வுகள்!

இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் - ஆட்சியாளர்கள் கோலோச்சும் சமூகத்தில் காவல்துறையும் நீதித்துறையும் எப்படி இருக்கும்! இவர்களைப் போல்தான் பெரும்பாலும் இருக்கும்! “மன்னர் எவ்வழி, குடிகள் அவ்வழி” என்று நம் முன்னோர்கள் சொன்னது எவ்வளவு பெரிய கோட்பாடு!

ஊழலைச் சமூக மயமாக்கி விட்டார்கள் அரசியல் தலைவர்கள்.

பெரும் முதலாளிய நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் ஊழல் சமூகக் கட்டமைப்பின் இரட்டைக் கதாநாயகர்கள்! இரட்டைப் பிள்ளைகள்! இவர்களின் படைத் தளபதிகள் அதிகாரவர்க்கத்தினர்!

அரசியல் தலைவர்கள் சமூகவியலில் பெரு முதலாளிகள்; பெருமுதலாளிகளோ பொருளியல் துறையில் அரசியல் தலைவர்கள்! இருவரும் இரட்டையர்கள்!

இவர்கள் இருவரும் ஒற்றை மைய அதிகாரக் குவியலில் உயிர்ப்பை வைத்துள்ளவர்கள்!

இந்த இரட்டையர்கள் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் மட்டுமல்ல, பெரும்பாலான உலக நாடுகளில் இருக்கிறார்கள்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த இரட்டையர்கள் தோன்றிய தொன்மை மண்! இவர்கள் தீவினை இரட்டையர் (Evil Twins).

இவர்களுக்கு முந்தையத் தலைமுறையினர் ஓரள வாவது உருவாக்கிய சமூக சமத்துவச் சிந்தனைகள், சமூக அறம், மனித உரிமைகள் அனைத்தையும் இந்த இரட்டையர் தகர்த்துத் தவிடு பொடி ஆக்கினர்.

மனித சமூக மாண்புகளை, மன அமைதியை, குடும்ப இணக்கத்தை, மனித நேயத்தை, சமத்துவப் போக்கை, அறத்தை சிதைத்துச் சின்னாபின்னமாக்கினர் தீவினை இரட்டையர்கள். அதைவிட அதிகமாக இயற்கை வளங்களை - சுற்றுச்சூழலை இவர்கள் படுகொலை செய்கிறார்கள்; சூறையாடுகிறார்கள். மனித உயிர்கள் வாழத் தகுதியற்றதாக இந்த நிலக்கோளத்தை சீரழித்து வருகிறார்கள்.

வணிகக் கொள்ளைக்காக வரம்பற்ற நுகர்வை - நலக்கேடான நுகர்வு வெறியை மக்களிடம் ஊக்கப்படுத்தி வளர்க்கின்றன பெருங்குழுமங்கள்!

அரசியல் தலைவர்கள் - பெருமுதலாளிகள் என்ற இந்த இரட்டையர் தங்களின் தன்னலத்திற்காகத் தங்கள் தாயகத்தை அயல்நாட்டு ஆதிக்கவாதிகளிடம் அடமானம் வைக்கவும் துணிந்தவர்கள்! இவர்கள் முறையே தங்களின் அரசியல் ஆதிக்கத்தையும் - பொருளியல் ஆதிக்கத்தையும் வளர்த்துக் கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் சீரழிவின் எந்த எல்லைக்கும் போவார்கள்! சமூகத்தில் தாங்கள் வளர்க்கும் நுகர்வு வெறியும் பண்பாட்டுச் சீரழிவும் தங்கள் குடும்பத்தினரையும், தங்களது அடுத்த தலைமுறையினரையும் பாதிக்குமே என்றெல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் எந்நேரமும் பதவி வேட்டை, பணவேட்டைச் சிந்தனையிலேயே மூழ்கி - இந்த வகையில் மன நோயாளி ஆகி விடுறார்கள்!

இப்பொழுது நிலவுகின்ற நாடாளுமன்ற - சட்டமன்ற சனநாயக அரசியல் இந்தத் தீவினை இரட்டையர்களுக்கு ஏகபோக வாய்ப்பைத் திறந்து விட்டுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவரும் வணிக நிறுவனம் சந்தையில் வெற்றி பெறுகிறது. வாக்காளர்களைக் கவரும் அரசியல் நிறுவனம் தேர்தலில் வெற்றி பெறுகிறது. இரண்டிற்கும் போலிக் கவர்ச்சியும் இலவசங்களும் பொது உத்தியாய் உள்ளன.

அரசியல் கட்சியும் - பெருங்குழுமமும்
-------------------------------------------------------------
இப்போது பெரும்பாலும் மக்களுக்காகப் போராடி வளர்ந்த தலைவர்கள் இல்லை. மக்களைக் குத்தகைக்கு எடுத்தவர்களே அரசியல் தலைவர்கள் - ஆட்சியாளர்கள்! மக்களுக்கும் நாட்டிற்கும் தேவையான உயரிய இலட்சியங்களைத் தந்திரமாக முன்வைத்து, மக்களைப் பயன்படுத்தி, அவர்களை மந்தையாய்த் திரட்டிக் கொள்வோரே இப்போது தலைவர்கள்.

கட்சிகள் பெரும்பாலும் பெருங்குழுமங்களாக - அதாவது கார்ப்பரேட் கம்பெனிகளாகச் செயல்படுகின்றன. பெரிய கட்சி - பெரிய கம்பெனி; சிறிய கட்சி - சிறிய கம்பெனி! இவை தங்களுக்குள் தனித்தனி கூட்டணி அமைத்துக் கொள்கின்றன.

ஆட்சியைப் பிடிக்கும் பருமன் உள்ள கட்சிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்கின்றன. மக்களை மயக்கிக் கவரும் உத்திகளைச் செயல்படுத்து வதற்குத் தனியே நிறுவனங்கள் செயல்படுகின்றன. இப்பொழுது தி.மு.க.விற்கு - 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பிரசாந்த் கிசோர் என்பவரின் ஐபேக் (I-PAC) வடநாட்டு நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. இதற்குக் குத்தகைத் தொகை ரூபாய் 380 கோடி என்கிறார்கள்.

இந்த உத்தி வடஅமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பா.ச.க. - காங்கிரசுக் கட்சிகளால் இறக்குமதி செய்யப் பட்டது. இதே பிரசாந்த் கிசோர் நிறுவனம், இதற்கு முன் வடநாட்டுக் கட்சிகளான பா.ச.க., ஐக்கிய சனதாதளம் போன்றவற்றிற்கு விளம்பர முகவராக செயல்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வோ, ஏற்கெனவே தி.மு.க. முகாமில் இருந்த சுனில் என்பவரின் விளம்பர நிறுவனத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வதற்காக வாடகை ஏற்பாடுகள் இருக்கின்றன. எதிர்த்தரப்பை இழிவுபடுத்தி கருத்துப் போடுவதற்கு ஒரு பதிவுக்கு, ஒரு வதந்திக்கு இவ்வளவு தொகை என்று பணம் கொடுக்கின்றன கட்சிகள். அதேபோல் தன் தரப்பை ஆதரித்துக் கட்டுக்கதைகள் எழுதுவோர்க்கும் பணம் கொடுக்கின்றன.

தனியார் தொழில் - வணிக நிறுவனங்களுக்கு சந்தை முகவர்கள் இருப்பதைப் போல கட்சிகளுக்கும் சந்தை முகவர்கள் இருக்கிறார்கள்! “நீதி கோரி” இக்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு இவர்கள் “நிதி கொடுத்து” வாடகைக்கு ஆள் பிடித்து வருவார்கள்!

எல்லா நிலைகளிலும் அரசியல் கட்சிகள் தொழில் - வணிக நிறுவனங்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம், மேற்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை.

வாக்காளர்களுக்குக் கொடுக்கும் கையூட்டுத் தொகை தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆட்சி சார்பில் இக்கட்சிகள் மக்களுக்குக் கொடுக்கும் “இலவசப் பொருட்கள்” அனைத்தும் மக்கள் வரிப்பணத் திலிருந்து, வாக்காளர்களுக்குக் கொடுக்கும் கையூட்டுகளே!

வணிக நிறுவனங்கள், தேங்கிபோன தங்கள் சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்கின்றன. விழா நாட்களில் கூடுதலாக சிறப்புத் தள்ளுபடி விலை அறிவிக்கின்றன; ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று தருகின்றன. அப்படித்தான் இந்தக் கட்சிகள் மக்களின் வரிப் பணத்திலிருந்து இலவசங்கள் கொடுக்கின்றன.

அனைத்து மக்களுக்கும் அவரவர்க்குரிய வேலை வாய்ப்பு கிடைக்கவும், வருமானம் கிடைக்கவும், மக்கள் செய்து வரும் சிறிய - நடுத்தர தொழில்கள் வளரவும், கைத்தொழில்களை வளர்க்கவும், உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு மற்ற பொருட்களின் சந்தை விலைக்குச் சமமாக விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்ய மாட்டா இக்கட்சிகள்!

மக்கள் இதே நிலையில் வளர்ச்சியடையாமல் இருந்தால்தான் மலிவான செலவில் அவர்களை மடக்கிக் கொள்ளலாம் என்பது இக்கட்சிகளின் அந்தரங்கத் திட்டம்!

வாய்ப்பளிக்கும் தேர்தல் முறை
--------------------------------------------------
உலகெங்கும் இப்பொழுதுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முறை பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. (நாடாளுமன்றத் தேர்தல் முறை என்று சொல்வதில் சட்டமன்ற - உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும் அடக்கம்.)

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும்தான் இப்பொழுதுள்ள தேர்தல் முறை முதலில் செயல்படுத்தப் பட்டது. (அனைவருக்கும் வாக்குரிமை, தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சிகளே அதிகாரம் படைத்தவை, நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் என்பன போன்றவை படிப்படியாய் வளர்ந்தன. அவை இங்கு வரிசைப்படுத்தப்படவில்லை.)

புதிதாய்ப் புரட்சியாய்த் தோன்றியவை காலப் போக்கில் பழைமை அடைந்து காலாவதி ஆகிப்போவது உலக வழக்கம்! அவ்வாறே இப்போதுள்ள தேர்தல் முறையும் அருதப் பழசாகிக் காலாவதி ஆகிவிட்டது.

மன்னராட்சியை நீக்கிய நாடாளுமன்றத் தேர்தல், கட்சி மன்னர்களை உருவாக்கி விட்டது. மன்னர் பரம்பரைக்கு மாற்றாக கட்சித் தலைவர் பரம்பரை யையும் உருவாக்கி விட்டது.

பரம்பரை மன்னர்களைவிடக் கொடியவர்களாக சனநாயக மன்னர்கள் செயல்படுகிறார்கள். இட்லர், முசோலினி, மோடி போன்ற எதேச்சாதிகார மன்னர்களை நாடாளுமன்ற சனநாயகமே உருவாக்கியது. தி.மு.க. போன்ற பல கட்சிகளில் குடும்பப் பரம்பரைத் தலைமை இந்த நாடாளுமன்ற வழிமுறையிலேயே உருவானது.

மன்னராட்சி கால மத ஆதிக்கம், சனநாயக ஆட்சிக் காலத்தில் இசுலாமிய நாடுகளிலும், சில பௌத்த நாடுகளிலும், இந்தியாவிலும் மீண்டுள்ளன. மன்னராட்சிக் கால சாதித் தீவிரம் இந்தியாவில் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல்கள் வழி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

கவியரசர் கண்ணதாசன் நகைச்சுவையாகக் கூறிய கருத்துதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது. “சர்வாதிகாரத்தில் மக்கள் ஒரே ஒரு அயோக்கியனைச் சுமக்க வேண்டியுள்ளது; சனநாயகத்திலோ, மக்கள் பல அயோக்கியர்களைச் சுமக்க வேண்டியுள்ளது” என்றார்!

இக்கருத்தை ஏற்கெனவே இங்கிலாந்தில் பெர்னாட்சா கூறிவிட்டார். நாடாளுமன்ற அரிசயலின் ஒழுங்கீனங்களை - மோசடிகளை - பாசாங்குகளைப் பார்த்து வெறுத்துப்போன பெர்னாட்சா, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்” என்றார்.

ஹென்றி டேவிட் தோரோ வட அமெரிக்காவில் (USA) 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் (1817 - 1866). நாடாளுமன்ற சனநாயகம் தோற்று விட்டது என்று அப்போதே எழுதிய முன்னோடிச் சிந்தனையாளர். டால்ஸ்டாய், காந்தியடிகள் போன்றோர் தோரோவின் அறச்சிந்தனைகளை - மனித உரிமைச் சிந்தனைகளை ஏற்றுப் போற்றினர். மக்கள் பகை ஆற்றலாக மாறிவிட்ட “சனநாயக அரசுக்கு” எதிராக வன்முறையற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்மொழிந்தவர் தோரோ! அவர் வட அமெரிக்காவின் அனுபவத்தில், “தேர்தல் என்பது சூதாட்டமாக மாறிவிட்டது” என்றார்.

“வாக்களிப்பது என்பது ஒரு சதுரங்க விளையாட்டுப் போல், அதற்கொரு நியாயச் சாயல் உண்டு; அவ்வளவே. சரியா, தவறா என்ற அறக்கேள்வி அதனுடன் இணைந்துள்ளது. வாக்களிப்போருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. நான் நல்லதற்காக வாக்களிக்கலாம். ஆனால் அதற்காக நல்லது நடக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அது பெரும்பான்மையினரின் பொறுப்பு என்று விட்டு விடுகிறேன். கடமை என்பது எதிர் பார்ப்பை விஞ்சியதாக இல்லை. மக்கள் வாக்களிப்பதுடன் சரி, நல்லதை நிலை நாட்டப் பொறுப்பேற்பது இல்லை; போராடுவதும் இல்லை”

... ...

“சனநாயகம் தான் அரசு முறையின் இறுதிக்கட்ட வளர்ச்சியா? இதனை மிஞ்சிய, மனித உரிமைகளை மதிக்கும் அரசு முறை இனி இல்லையா? தனி மனிதனே உயர்ந்த சுதந்திரமான உன்னத சக்தி! அவனிலிருந்தே அனைத்து அரசு அதிகாரங்களும் பிறக்கின்றன என்பதையும் உணர்ந்து, அந்த மரியாதையுடன் அவனை நடத்தும் நாடே உண்மையில் முழுமை பெற்ற ஒளிரும் நாடாகும்”.

- “ஒத்துழையாமை” - ஹென்றி டேவிட் தோரோ - தமிழாக்கம் டாக்டர் ஜீவா - சர்வோதய இலக்கியப் பண்ணை - மதுரை.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தோரோ நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற சனநாயகத்திற்கு மாற்றாக மற்றொரு சனநாயகம் - அறம், ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ள மாற்று சனநாயகம் தேவை என்றார்.

மாற்று சனநாயகம்
-------------------------------
தோரோ சொல்கிறார் :

“அமெரிக்க அரசு என்பது என்ன? இது ஒரு மரபே! நாட்டில் கேடு நேராமல் அடுத்தத் தலைமுறைக்குக் காத்து ஒப்படைக்கும் கடமை கொண்ட ஒன்றே அரசு. ஆனால் ஒவ்வொரு முறையும் அது தனது நேர்மையை இழந்து கொண்டே இருக்கிறது. இந்த அரசுக்கு ஒரு தனி மனிதனுக்குள்ள வலிமையும் ஆற்றலும் இல்லை. அதனால் தனி மனிதன் அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துக் கொள் கிறான். மக்களைப் பொறுத்தவரை அது பயனற்ற மரத் துப்பாக்கியே! அது மக்களின் தேவைக்குக் குறைவானதே!”

தோரோ, மாற்று சனநாயகத் தேவைக்குத் தமது வட அமெரிக்க நாட்டை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டார். நாம் நமது தமிழ்நாட்டை மாற்று சனநாயகத்திற்கான எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தனது கொள்கை அறிக்கையில் மாற்று சனநாயகத்தைப் பற்றி ஓரளவு கூறியிருக்கிறது.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசமாகத் தமிழ்நாடு உருவானால் அதில் சனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முன்மொழிவுகளை வைத்துள்ளோம். அதை மேலும் விரிவுபடுத்தவும் விளக்கப்படுத்தவும் வேண்டும். அந்த அடிப்படையில் இங்கு சில கருது கோள்கள் முன்வைக்கப்படுகின்றன.

சனநாயகம் - தனிநபர்களின் அதிகாரக் குவியலுக்கான செங்குத்து அமைப்பைக் கொண்டிராமல் கிடைநிலை (Horizontal) வடிவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே மாற்று சனநாயகத்திற்கு முதல் தேவை. இயன்ற வரை அனைவருக்குமான அதிகாரமாகச் செயல்படு வதற்குரிய கட்டமைப்பு மாற்றமே இதற்கு முதல் தேவை.

அரசியலில் இவ்வாறு சமூகக் கிடைநிலை மாற்றம் நடைபெற வேண்டுமானால் - அதற்கு பொருள் உற்பத்தியும் - வழங்கலும் செங்குத்துக் குவியல்களாக இல்லாமல் - ஏகபோகங்களாக இல்லாமல் - கிடைநிலைப் பன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

மின்சாரம், மோட்டார் எந்திரங்கள், ஆடைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உட்பட பெரும் பாலான பொருட்களின் உற்பத்தியும் வழங்கலும் இவ்வாறு கிடைநிலையில் அந்தந்த வட்டாரத்திலும், மண்டலத்திலும் உருவாக வேண்டும்.

அரிதான சில பொருட்கள் மட்டுமே - விதிவிலக்காக மொத்த உற்பத்தியில் இருக்க வேண்டும். ஏராளமான சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்கள் பெருக வேண்டும்.

இயற்கை வேளாண்மை, சித்த மருத்துவம், கைத் தொழில்கள், சூழலியலை அழிக்காத சிறுசிறு தொழிற்சாலைகள் என்ற அளவில் பொருள் உற்பத்தியும் வழங்கலும் இருக்க வேண்டும்.

அரசுக் கட்டமைப்பும் கிடைநிலை அதிகாரங்களைக் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இறையாண்மையுள்ள தமிழ்நாட்டில் அதன் அதிகாரங்கள் தலைநகரிலும் தலைமைச் செயலகத்திலும் குவிக்கப்படுவதை மாற்றி கிடைநிலைப் பரவலாக்க வேண்டும்.

முதல் வேலையாக, மாவட்ட அமைப்புகளைக் கலைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பதவிகள் நீக்கப்பட வேண்டும். அதைப்போல சட்டப்பேரவை உறுப்பினர் (MLA), நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவிகள் - இப்போது இருப்பது போல் கூடாது. இந்தத் தொகுதி வடிவங்களும் கூடாது.

ஊராட்சி - ஒன்றிய ஆட்சி - நகராட்சி - மாநகராட்சி - தமிழ்நாடு ஆட்சி என்ற வரிசை நிலை வேண்டும்.

ஊராட்சி - ஒன்றிய ஆட்சி - நகராட்சி - மாநகராட்சி ஆகியவற்றுக்கு உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மக்களிடம் நேரடித் தேர்தல் நடத்த வேண்டும். பெரும்பான்மை வாக்குகளுக்கு மட்டும் மதிப்பளிக்கும் இப்போதுள்ள தேர்தல்களைப் போல் அல்லாமல், அனைவரது வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் விகிதாச்சார முறையில் இத்தேர்தல்கள் நடக்க வேண்டும்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழ்நாட்டு ஆட்சிக்குரிய பேரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு நேரடித் தேர்தல் கூடாது.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு பேரவை உறுப்பினர்கள் - தமிழ்நாட்டிற்கான அமைச்சர், தலைமை அமைச்சர் போன்ற பொறுப்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

முதலமைச்சர், அமைச்சர், ஒன்றியத் தலைவர் போன்ற பதவிகள் முழுநேரப் பணி உள்ளவையாக, மாதச் சம்பளம் பெறக் கூடியவையாக இருக்க வேண்டும். மற்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர் ஆகியோர்க்கு முழுநேரப்பணி இல்லை. கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு படித்தொகை பெறும் நிலை மட்டும் இருக்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுநேரச் சம்பளக்காரர்கள் அல்லர். சட்டம் அனுமதிக்கும் தொழில்களை அவர்கள் செய்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டங்களுக்குப் போகும்போது படிப்பணம் உண்டு.

முழுநேர அரசியல்வாதிகள் - இப்போது ஏராளமாக இருக்கிறார்கள். முழுநேர அரசியல் - கொள்ளை இலாபம் தேடும் தொழிலாகவே பலருக்கு இருக்கிறது. மேற்படிக் கட்டமைப்பு மாற்றத்தால் சமூகத்திற்குத் தேவைப்படாத முழுநேர அரசியலார் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போகும்.

இந்திய ஆட்சிப்பணி இருக்காது. தமிழ்நாட்டிற்குரிய ஆட்சிப்பணி இருக்கும். ஒன்றியப் பேரவை முடிவுகளை - தமிழ்நாட்டுப் பேரவை முடிவுகளை நிறைவேற்று பவர்களாக - அதிகாரிகள் இருப்பார்கள்.

நீதித்துறை, காவல்துறை போன்றவை தன்னாட்சி பெற்றவையாக இருக்கும்.

மேற்கண்ட மாற்றங்களுக்கேற்ப அரசமைப்புச் சட்டம், மற்ற சட்டங்கள் முதலியவை இருக்கும்.

மேலே கூறப்பட்டவை மாற்று சனநாயகத்திற்கான முதல்நிலைக் கருதுகோள்கள்; இவற்றை மேலும் செறிவுபடுத்த, இவற்றில் குறைகள் இருந்தால் திருத்திட, அனைத்துக் கூறுகளும் கொண்டதாக இதனை முழுமைப்படுத்திட - உரியவாறு கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள் நடத்தலாம்; மாற்றங்கள் செய்து முழுமையாக்கலாம்.

என்ன செய்யப் போகிறோம்?
-----------------------------------------------
அரசியல் தலைவர்களின் - அவர்களது பரிவாரங்களின் ஊழல்கள், அவர்கள் அதிகாரத்தைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்துதல், அவர்களின் அத்துமீறல்கள் ஆகியவற்றைக் கண்டு பொருமுகின்றவர்கள் - சீற்றம் கொள்வோர் இருக்கின்றார்கள்.

பெருமுதலாளிகளின் பெருங்குழுமங்கள் அரசு எந்திரத்தைத் தங்களுக்கானதாக வளைத்துக் கொள்வதையும், மக்களைச் சூறையாடுவதையும், அவற்றின் நேர்மையற்ற வணிகத்தையும் கண்டு ஆத்திரம் கொள்வோர் இந்த மாற்றுச் செயல் திட்டத்தைச் சிந்திக்க வேண்டும்.

அரசியல் அதிகாரக் குவியலையும் பெருங் குழுமங்களின் பொருளியல் குவியலையும் செங்குத்தாக வைத்துக் கொண்டு இந்த சமூக அமைப்பை மாற்ற முடியாது.

நாம் கூறியுள்ள மேற்படி மாற்றுத் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் தமிழ்நாட்டு மக்களால் - தமிழ்நாட்டு அமைப்புகளால் கொண்டு சேர்க்க முடியாது. இந்தியா முழுவதிலும் மாற்றம் வர வேண்டுமானால் அந்தந்த மாநிலத்திலும் அந்தந்த மக்கள் இவ்வாறு மாற்றுத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதுபோன்ற மாற்று சனநாயக சிந்தனை முன்வைக்கப்படுமா, வளருமா என்பதற்கெல்லாம் நாம் சோதிடம் கூற முடியாது. தமிழ்நாட்டிற்குத் தேவையான மாற்றங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

காந்தியடிகள் முன்வைத்த கிராம ஆட்சி (கிராம ராஜ்யம்), மாநிலத் தன்னாட்சி, ஏகபோகமற்ற கிடை நிலைப் பொருள் உற்பத்தி, மரபுவழிக் கைத் தொழில், இயற்கை வேளாண் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டதே தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்துள்ள மேற்படித் திட்டம்! மற்ற மாநிலங்களில் இம்மாற்றம் வர வேண்டும் என்று காத்திருந்தால் தமிழ்நாடும் தமிழினமும் அழிவை நோக்கிச் செல்லும்.

தமிழ்நாட்டில் இந்த மாற்று சனநாயகத்தையும், மாற்றுப் பொருளியலையும் செயல்படுத்துவதற்குரிய தத்துவம்தான் தமிழ்த்தேசியம்!

முதலில் இதுபற்றி சிந்தியுங்கள்; மற்றவற்றை பிறகு சிந்திக்கலாம்.

நிலவுகின்ற அவலங்களையும் அநீதிகளையும் உரிமைப் பறிப்புகளையும் கண்டு உள்ளுக்குள் பொருமிப் பொங்கிக் கொண்டிருக்கும் இளையோரும் பெரியோரும் கருத்தளவில் ஒரு முடிவுக்கு வாருங்கள்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடஅமெரிக்காவில் ஹென்றி டேவிட் தோரோ சொன்னவை, இன்று நமக்காகச் சொன்னவை போல் உள்ளன.

“நேர்மையான மனிதனின் நிலை என்ன? மனு போடுகிறார்கள்: மற்றவர்கள் தீர்வு காணட்டும் என்று காத்திக்கிறார்கள். தங்க ளுடைய வாக்கை மலிவாகத் தருவது, தயக்கத் துடன் எதிர்ப்பைத் தெரிவிப்பது, கடவுளை வேண்டிக் கொள்வது ஆகியவையே அவர்களின் பங்களிப்பு!”

... ...

“அரசுக்கு ஓத்துழைக்க மக்கள் மறுத்தால், வேலையை விட்டு அதிகாரிகள் விலகினால், புரட்சி வந்து விட்டது என்று பொருள். இதில் இரத்தம் சிந்த நேர்ந்தால் என்ன? மனச் சான்றுக்காக உண்மையுடன் போராடியவர்கள் இரத்தம் சிந்தவில்லையா? இந்தக் காயம் ஆண்மை ஏற்கும் காயம்! விழுப்புண்! இதில் கசிவது மரணமற்ற தன்மானக் குருதி! மரணத்தை வெல்லும் மரணத்திற்கான காயம் இது!”.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 ஆகத்து மாத இதழில் வெளியான கட்டுரை இது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,

தமிழ்த்தேசியர்கள் தேர்தலில் பங்கு கொள்ளக் கூடாதா? - ஐயா பெ. மணியரசன் சிறப்பு நேர்காணல்!

Sunday, April 4, 2021

தமிழ்த்தேசியர்கள் தேர்தலில் 

பங்கு கொள்ளக்  கூடாதா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் சிறப்பு நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , , ,

தமிழ்நாட்டுக் கோயில்களைக் கைப்பற்ற சக்கி வாசுதேவ் சதி! - பெ. மணியரசன் கண்டனம்!



தமிழ்நாட்டுக் கோயில்களைக் 
கைப்பற்ற சக்கி வாசுதேவ் சதி!

தெய்வத் தமிழ்ப் பேரவை
ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கண்டனம்!


ஆன்மிகப் பெருங்குழும அதிபரான சக்கி வாசுதேவ், அண்மைக் காலமாகத் தமிழர்களின் ஆன்மிக மரபுகளிலும், தமிழ்நாட்டு உரிமைகளிலும் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராகச் செயல்டுவது அதிகரித்து விட்டது. 

கடந்த 2019ஆம் ஆண்டு முதல், “காவிரி அழைக்கிறது” என்ற பெயரில், கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைத் தமிழர்கள் எதிர்பார்க்கத் தேவை இல்லை; கரையோரங்களில் மரங்கள் வளர்த்தால் மழை பொழிந்து, காவிரியில் வெள்ளம் பெருகும் என்று கூறி, தமிழ்நாட்டு மக்களின் மனத்தை மடைமாற்றும் திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறார். தமிழர்கள் தங்களின் சட்டப்படியான, வரலாற்று உரிமையான காவிரி நீரைக் கர்நாடகத்திடம் எதிர்பார்க்க வேண்டாம்; அதற்கு ஈடாக மழையை வரவழைத்துக் கொள்ளுங்கள் என்று மடைமாற்றும் சூழ்ச்சித் திட்டம் இது! 

கர்நாடகத்தின் தலைக்காவிரியிலிருந்து தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் வரையிலான இத்திட்டத்தில் பெரும் ஊழல் நடந்துவிட்டது என்று கர்நாடகத்தில் ஊடகங்களும், தன்னார்வலர்களும் அம்பலப்படுத்தி – இப்போது இந்த ஊழல் பற்றிக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் சக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனத்துடன் கர்நாடக அரசும் இணைந்துள்ளது என்பதுபோல், பொய்த் தோற்றத்தை உருவாக்கி, 10,626 கோடி ரூபாயை சக்கி வசூலித்து விட்டார்; இது சட்டவிரோத வழிகளில் செய்யப்பட்ட வசூல் என்பதுதான் வழக்கின் சாரம். கர்நாடக உயர் நீதிமன்றம் தானே முன்வந்து இவ்வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது (The Wire, 24.02.2021),

ஆனால், தமிழ்நாட்டில் தாங்கள் பால்குடித்த தாயின் மார்பை அறுப்பதுபோல், காவிரியில் கர்நாடகத்திடமிருநது பெற வேண்டிய தண்ணீர் உரிமையை நம்மையே கைவிடச் செய்யும் சக்கியின் சூழ்ச்சித் திட்டத்தை அறியாமல் நம் மக்களே “காவிரி அழைக்கிறது” திட்டத்தில் கன்றுகள் நட்டார்கள். அமைச்சர்கள் பல இடங்களில் அதில் கலந்து கொண்டார்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக சென்னையில் சக்கியின் “காவிரி அழைக்கிறது” குழுவை வரவேற்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வானளாவப் புகழ்ந்தார்கள் (ஈஷா யோகா இணையதளம் – 15.09.2019). 

இப்போது சக்கி வாசுதேவ் தமிழர்களின் கோயில்களின் கைவைத்துள்ளார். தமிழ்நாட்டு சிவநெறி, திருமால் நெறி, திருமுருகன் நெறி, குலதெய்வக் கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களின் உரிமைகளைப் பறித்துத் தமிழ்நாடு அரசு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்று சக்கி வாசுதேவ் கூறுகிறார். 

தமிழ்நாடு அரசின் அடிமைத் தளைகளை அறுத்தெறிந்து, அவற்றை விடுதலை செய்வதற்காக, “இந்துக் கோயில்கள் அடிமை நிறுத்து” என்ற தலைப்பில் போராட்டம் தொடங்கி உள்ளார். கடந்த 27.03.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மிக முக்கியமான கோயில்களின் முன் சக்கி வாசுதேவ் அமைப்பினர் ஆண்கள், பெண்களைத் திரட்டி “அடிமை நிறுத்து” முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சக்கி வாசுதேவ் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து அல்லர். அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். கர்நாடகமோ, அல்லது வேறு மாநிலமோ – எதுவாக இருந்தாலும் அவர் தமிழர் மரபைச் சேர்ந்த சிவநெறியாளரோ அல்லது திருமால் நெறியாளரோ அல்லர். தமிழர் ஆன்மிகத்தில் தலையிட அவர்க்கு உரிமை இல்லை! 

மேலும், சக்கி வாசுதேவ் நமது தமிழர் ஆன்மிக மரபின் ஒழுக்கங்களைக் கடைபிடிப்பவர் அல்லர். எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன், தமிழ்க் கடவுளான சிவபெருமான் சிலையை நம் தமிழர் மரபுக்கு முரணாக வடிவமைத்து சிவபெருமானுக்குரிய தமிழ்ப்பெயர் எதையும் சூட்டாமல் “ஆதியோகி” என்று அச்சிலைக்குப் பெயர் சூட்டி, ஒரு கட்டடத் திறப்பு விழா போல், தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைத் திறக்க செய்தார். “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று மாணிக்கவாசகர் போற்றிய மந்திரம் நமக்கு இருக்கிறது! 

ஏற்கெனவே இவர் மீது, தமிழ்நாட்டு மலைக்காடுகளை அழித்தவர், சட்டத்திற்குப் புறம்பாக அவற்றை ஆக்கிரமித்தவர் என்று குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவர் இப்போது நம் மரபுமிக்கத் தமிழ்நாட்டுப் பெருங்கோயில்களைக் கைப்பற்றுவதற்காக, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிடச் சொல்கிறார். இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எழுதியுள்ள கடிதம் ஏடுகளில் வந்துள்ளது. 

நாளேடுகளில் 03.04.2021 அன்று வந்துள்ள அக்கடிதத்தில், “இந்து சமுதாயத்தினர், தங்களது புனிதமான வழிபாட்டுத் தலத்தைத் தாங்களே பேணிப் பராமரித்து நிர்வகிக்க அவர்களுக்குள்ள சனநாயக உரிமையை அரசு வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த குரல் எழுப்பி இருக்கிறார்கள்”.. … “… கோயில்கள் விடுவிக்கப்பட்டு பக்தர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு, முழு ஆற்றலுடன் இயங்கச் செய்ய வேண்டும்” என்றெல்லாம் கூறி இருக்கிறார். .

கிறித்துவம், இசுலாம் இரண்டிலும் வெகுசில உட்பிரிவுகள் இருப்பினும் அவற்றில் உலகளாவியத் தலைமைகளும், கட்டுக் கோப்பான வட்டாரத் தலைமைகளும் இருக்கின்றன. அவற்றிற்கான சமய நிர்வாகக் கட்டமைப்புகளை அவர்களும் வைத்திருக்கிறார்கள். இந்து சமயத்தில் அப்படிப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புகள் – அனைத்திந்திய அளவிலும் இல்லை, வட்டார அளவிலும் இல்லை! காரணம் என்ன? அம்மதங்களில் ஒற்றைக் கடவுள் – ஒற்றை புனித நூல் – ஒற்றை வழிபாட்டு முறை என்பன உலகு தழுவிய அளவில் இருக்கின்றன. அவர்களில் வர்ணாசிரம – சாதிப் பிரிவுகள் பிறப்பு அடிப்படையில் இல்லை எனவே அம்மதங்கள் பல நாடுகளில் இருக்கின்றன. 

தமிழர் சமயங்களில் சாதிப் பிறப்பை ஞாயப்படுத்தி கூறவில்லை என்றாலும், ஆரிய ஆன்மிக ஆக்கிரமிப்புக்குள்ளாகியதால், தமிழ் இந்துக்களிடையேயும் சாதிகள் வேரூன்றிவிட்டன. (இந்து மதம் என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர்; ஆரியர் வைத்த பெயரன்று).

உலகு தழுவிய – நாடு தழுவிய – வட்டாரம் அல்லது ஊர் தழுவிய ஒற்றை நிர்வாகக் கட்டமைப்பு கிறித்துவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் இருக்கிறது. அவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பு இந்து மதத்தில் இல்லை. புதிதாக உருவாக்கவும் முடியாது. தெய்வப் பன்மை – வழிபாட்டுப் பன்மை – ஆன்மிகப் பன்மை முதலியவைதாம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு! இப்பின்னணியில் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களை நிர்வகிக்க சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன்பே மாநில அரசு அறநிலையத்துறையை உருவாக்கியது. 

திருவாவடுதுறை, தருமபுரம் போன்ற பல ஆதினங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றின் நிர்வாகத்தின் கீழ் பல கோயில்கள் இருக்கின்றன. அதுவேறு செய்தி. 

ஒற்றை சமய நிர்வாகக் கட்டமைப்பு இல்லாத இந்து சமயக் கோயில்களை எந்த பக்தர்களிடம் ஒப்படைப்பது – அதற்கான அளவுகோல் என்ன – அதற்கான நிர்வாக வடிவம் என்ன? 

இந்த இடத்தில்தான் சக்கி வாசுதேவின் சூழ்ச்சித் திட்டம் இடம் பிடிக்கிறது. தமிழ்நாடு அரசு, இந்து அறநிலைய ஆட்சித்துறையைக் கலைத்துவிட்டு, கோயில்களைவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அந்த நிலையில் ஏற்கெனவே கோயில்களில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் பிராமணர்கள், மிகப்பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட சக்கி வாசுதேவின் ஈஷா மையம் போன்ற ஆன்மிகப் பெருங்குழுமங்கள் அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம்! 

தமிழ்நாடு பா.ச.க.வினர் கோயில்களைக் கைப்பற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். அவர்களில் எச். இராசா போன்றவர்கள் மிகத் தீவிரமாகக் கோயில்களைக் கைப்பற்றும் கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள். நடப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் (2021) அறிக்கையிலும் பா.ச.க. இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. 

சக்கி வாசுதேவ் வெளிமாநிலத்தவர் என்பதையும் பா.ச.க.வின் வெளி மாநிலத்தவர்க்கும் தமிழ்நாட்டுக் கோயிலைக் கைப்பற்றும் உரிமை உண்டு என்பதையும் நுட்பமாக உணர்த்தும் வகையில், அவர் முதலமைச்சர்க்கும், எதிர்கட்சித் தலைவர்க்கும் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு செய்தியைக் கூறுகிறார். 

“இம்மாநில மக்கள் மட்டுமல்ல, இந்தச் சீர்திருத்தத்திற்காகக் காத்திருக்கும் நம் சமூகத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்களும், இன்னபிறரும் துடிப்பாக ஆதரவு திரட்டி இந்த ஒரு நோக்கத்திற்காக உறுதியுடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்”.

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பா.ச.க. போன்ற பல அனைத்திந்திய அமைப்புகளும் தமிழ்நாட்டுக் கோயில்களைக் கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன என்பதைக் குறிப்பாக உணர்த்திவிட்டார் சக்கி! 

சக்கி வாசுதேவ் கோருவதுபோல், நம் தமிழ்நாட்டுக் கோயில்கள் அவர்கள் கைக்குப் போய்விட்டால் என்னவாகும்? தில்லை நடராசர் கோயில் தீட்சிதர்களிடம் சிக்கி என்ன பாடுபடுகிறதோ, அக்கொடுமைகள்தாம் அனைத்துக் கோயில்களிலும் அரங்கேறும்! 

சிதம்பரத்தில் கருவறைக்கு வெளியே சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடிய பெரியவர் ஆறுமுகசாமியைத் தீட்சிதர்கள், அடித்துக் காயப்படுத்தி, இங்கு தேவாரம் பாடாதே என்று விரட்டினார்கள்; தில்லை நடராசர் கோயில் நிதி வரவு செலவு எதற்கும் அரசுத் தணிக்கை இல்லை. தீட்சிதர்களின் அராசகம்தான் அங்கு “விதிமுறைகள்”! இந்த அராசகங்கள் மற்ற கோயில்களுக்கும் விரிவடைய வேண்டுமா? கூடாது! 

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் கவனிப்பாரின்றி, மிகமிக அவலநிலையில் இருப்பதாக – மிகைப்படுத்திக் கூறுகிறார் சக்கி வாசுதேவ்! இந்து அறநிலையத் துறையில் இருந்தாலும் அக்கோயில்களில் மரபுரிமைப்படி நிகழும் பூசைக்கு உரியவர்கள் அக்கோயில் நிர்வாகத்தில் பங்களிப்பு செய்கிறார்கள். பல கோயில்கள் சிறப்பாக செழிப்பாக உள்ளன. வழிபாட்டிற்கு வரும் மக்கள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. 

சில கோயில்கள் அரசின் கவனிப்பின்றி போதிய வருவாயின்றி இருந்தால், அவற்றைச் சரி செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். அதற்காக கவன ஈர்ப்பு இயக்கங்கள் நடத்தலாம். அதேபோல் கோயில் நிர்வாகங்கள் சிலவற்றில் ஊழல் நடந்தால் அவற்றின் மீது நடவடிக்கை கோரி மக்கள் போராடலாம். 

அவ்வாறான அறவழிப்பாதைகளைக் கைவிட்டு, சில அவலங்களைச் சுட்டிக்காட்டி “நம் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் சக்கி வாசுதேவ் மற்றும் ஆரியத்துவாவாதிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி நம் இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் அவர்களின் திட்டத்தைத் தமிழ்நாடு அரசோ, அரசியல் கட்சிகளோ ஏற்கக் கூடாது என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  


தெய்வத் தமிழ்ப் பேரவை

முகநூல் : www.fb.com/theivathamizh
சுட்டுரை : www.twitter.com/TheivigaThamizh
பேச : 9841949462, 9443918095


 



 

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்