<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

“நான்கு மீனவர்கள் சாவு கொலையா? விபத்தா? ” - ஐயா பெ.மணியரசன் அவர்களின் நேர்காணல்!.

Thursday, January 28, 2021


“நான்கு மீனவர்கள் சாவு 

கொலையா? விபத்தா? ”


ஐயா பெ.மணியரசன் அவர்களின் நேர்காணல்!. 



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

குடியரசு நாள் உழவர் பேரணி : சிறைபிடித்தோரை விடுதலை செய்ய வேண்டும்! வழக்குகளைக் கைவிட வேண்டும்! ஐயா பெ. மணியரசன் கண்டன அறிக்கை!



குடியரசு நாள் உழவர் பேரணி : சிறைபிடித்தோரை விடுதலை செய்ய வேண்டும்! வழக்குகளைக் கைவிட வேண்டும்! 

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கண்டன அறிக்கை!

 
உழவர் ஒழிப்புச் சட்டங்கள் மூன்றையும் முற்றாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, 26.01.2021 குடியரசு நாள் அன்று தமிழ்நாட்டில் உழுவை எந்திர (டிராக்டர்) ஊர்வலம் நடத்த அனைத்திந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முன்வந்தது. அந்தப் பேரணிகளுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது சனநாயக மறுப்பாகும்! 

உழவர்களின் வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்கள் இம்மூன்றும்! நெல், கோதுமை, கரும்பு போன்றவற்றுக்கு அரசு ஆதரவு விலையும் இருக்காது; அரசு கொள்முதலும் இருக்காது. அதன்பின் நியாய விலைக் கடையும் இருக்காது. மனித உயிர் வாழ்வுக்குத் தேவையான இன்றியமையாப் பண்டங்கள் என இந்திய அரசால் பட்டியல் இடப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை அப்பட்டியலில் இருந்து நீக்கி, பெருங்குழுமங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவற்றைப் பதுக்கிக் கொள்ளலாம், செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று மோடி அரசு திறந்துவிட்டுள்ளது, 

எனவே, இம்மூன்று சட்டங்களையும் அனைத்து மக்களும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்தச் சட்டங்களைத் தமிழ்நாடு அரசு ஆதரிப்பது மிகமிகப் பாதகமான செயல். அதேவேளை இச்சட்டங்களை எதிர்த்து அடையாள ஊர்திப் பேரணி நடத்திட அனைவருக்கும் உரிமை வழங்குகிறது அரசமைப்புச் சட்டம்! 

குடியரசு நாளான 26.01.2021 அன்று அனைத்திந்தியப் போராட்டக் குழுவினரின் பேரணிகளைக் காவல்துறையினரை வைத்து அயல்நாட்டு இராணுவத்தை எதிர்ப்பது போல் தமிழ்நாடு அரசு முரட்டுத்தனமாக எதிர்த்தது கண்டனத்திற்குரிய செயல்! அத்துடன் அப்பேரணிகளில் கலந்து கொண்ட சிலரைக் கொலை முயற்சிப் பிரிவு உள்ளிட்ட தண்டனைக் சட்டப் பிரிவுகளில் தளைப்படுத்தி, சிறையில் அடைத்திருப்புது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உழவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்றும, சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com


 

Labels: , ,

செங்கல்பட்டு கலெக்டர் பிள்ளையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்த வேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை!

Tuesday, January 26, 2021


செங்கல்பட்டு கலெக்டர் பிள்ளையார் கோயில்
குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் கோரிக்கை!


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள சக்தி விநாயகர் கோயில்  “கலெக்டர் பிள்ளையார் கோயில்” என்று மக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் குடமுழுக்கு 27.01.2021 அன்று நடைபெறுகின்றது. 

இக்குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

கலெக்டர் பிள்ளையார் கோயில் குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்துவதற்கு உரிய ஏற்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஏற்கெனவே தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு, கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு ஆகியவற்றில் தமிழ் மந்திரங்களை ஓதி அர்ச்சனையும், குடமுழுக்கும் செய்வதற்கும், தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் இதுபோல் நடக்க வேண்டுமென்றும், தமிழ் ஓதுவார்கள் பெயர்களை குடமுழுக்கு அழைப்பிதழில் அச்சிட வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனைக் கடைபிடிக்கும் வகையில், தமிழ் மந்திரங்களை ஓதி செங்கல்பட்டு கலெக்டர் பிள்ளையார் கோயில் குடமுழுக்கை நிகழ்த்துமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.  


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: ,

"ஆரியத்துவா ஆதிக்கத்தை எதிர்க்க வள்ளலார் ஓர் பேராயுதம்..!" சிதம்பரம் வள்ளலார் பெருவிழாவில் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

Sunday, January 24, 2021


"ஆரியத்துவா ஆதிக்கத்தை எதிர்க்க 

வள்ளலார் ஓர் பேராயுதம்..!"


சிதம்பரம் வள்ளலார் பெருவிழாவில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின்
முழுமையான உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

தமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது! அனுமதித்தால் நாங்களே தடுப்போம்! ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

Friday, January 22, 2021



தமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் 
“ஒற்றுமை மாநாடு” நடத்த
தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது!
அனுமதித்தால் நாங்களே தடுப்போம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

கிருட்டிணகிரி மாவட்டம் – ஓசூர் உட்கோட்டம் சிப்காட் காவல் சரகம் பகுதியிலுள்ள அத்திப்பள்ளியில் 26.01.2021 அன்று, “தேசபிரேமிகளா சேனை” என்ற கன்னட அமைப்பும், கர்நாடகத்திலே உள்ள தமிழ் அமைப்பு ஒன்றும் இணைந்து “கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு” நடத்த இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. 

கர்நாடகத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்தும், தாக்கியும், தமிழர்களின் பேருந்து களையும் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் எரித்தும் இனவெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் கன்னட வெறியர்களின் மறைமுகத் தமிழர் தாயக ஆக்கிரமிப்பு மாநாடுதான் இந்த மாநாடு! 

அண்மையில்தான் தாளவாடிப் பகுதியில் தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாடு அரசு வைத்திருந்த வரவேற்புப் பெயர்ப் பலகையை கன்னடவெறி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராசன் தலைமையில் கன்னட வெறியர்கள் பிடுங்கி எறிந்து, அந்தப் பெயர்ப் பலகையிலுள்ள தமிழை அழித்து, தமிழ் எழுத்துகளைக் காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் நடத்திவிட்டு, எந்த சிக்கலும் இல்லாமல் திரும்பினார்கள். இந்த வன்முறையை காணொளியாக  அவர்களே வெளியிட்டார்கள். 

தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுந்து தமிழ் இன அடையாளப் பெயர்ப் பலகையைத் தகர்த்துச் சென்ற வாட்டாள் நாகராசன் மற்றுமுள்ள கன்னட இனவெறிக் கயவர்கள் மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிந்து அவர்களைக் கைது செய்து தமிழ்நாட்டுச் சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காமல் கன்னட இனவெறியர்கள் தமிழ்நாட்டிற்குள் நடத்திய வன்முறைகளை கண்டுகொள்ளாததுபோல் இருந்து, கன்னட இனவெறியர்களின் வன்முறைக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது. 

அந்தத் துணிச்சலில் கன்னட இனவெறி அமைப்பொன்று அங்குள்ள தமிழ் இனத்துரோக அமைப்பு ஒன்றுடன் இணைந்து, தமிழ்நாட்டிற்குள் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்துவது – புதிய வடிவில் கன்னடர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். 

ஏற்கெனவே தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், ஒகேனக்கல், தாளவாடி பகுதி முதலியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டுமென்று கன்னட அரசியல் கட்சிகளும், கன்னட இனவெறி அமைப்புகளும் ஆக்கிரமிப்புக் குரல் கொடுத்து வருகின்றன. இன்றைய கர்நாடகத்தின் பா.ச.க. முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அத்துமீறி காவிரியின் குறுக்கே படகில் வந்து ஒகேனக்கலில் கன்னடக்கொடியேற்றி, ஒகேனக்கல்லை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டுமென முழக்கமிட்டுத் திரும்பினார் என்பது நினைவு கூரத்தக்கது. 

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி 1991 நவம்பர் மாதம், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லி, அன்றைய காங்கிரசு முதலமைச்சர் பங்காரப்பா துணையோடு கன்னட கட்சிகள் மற்றும் கன்னட வெறி அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் வன்முறை வேட்டையாடி நூற்றுக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. 2 இலட்சம் தமிழர்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாகத் தமிழ்நாடு ஓடி வந்தனர். அன்றைய முதலமைச்சர் செயலலிதா, இவர்களுக்காகத் தமிழ்நாட்டில் 2 இடங்களில் அகதி முகாம்கள் திறந்தார். 

கடந்த 2016 செப்டம்பர் 12ஆம் நாள், காவிரிச் சிக்கலை சாக்கு வைத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். மற்றும் பல நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளையும், சரக்குந்து களையும் கன்னட வெறியர்கள் பெங்களூரில் ஒரே நேரத்தில் எரித்துச் சாம்பலாக்கினார்கள். எரிந்து முடியும் வரை கர்நாடகக் காவல்துறையினர் தலையிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர், சரக்குந்து ஓட்டுநர்களையெல்லாம் ஆடைகளைக் களைந்துத் தாக்கி படமெடுத்து விளம்பரம் செய்தார்கள். தமிழ்நாட்டு நடிகர்கள் நடித்த படங்கள் கர்நாடகத் திரையரங்குகளில் வெளியானால் கூட, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளைக் கிழித்து வெறியாட்டம் போடுகின்றனர். நடிகர் விசயின் “மெர்சல்” திரைப்படப் பதாகையை அவ்வாறு கிழித்தெறிந்தனர். கன்னட மொழியுடன் தமிழிலும் பெயர்ப் பலகை இருந்தால் அந்தப் பெயர்ப் பலகைகளை உடைக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து கன்னட இனவெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தும், தமிழர்களைத் தாக்கியும், தமிழ்நாட்டு எல்லையில் ஆக்கிரமிப்பு வேலைகள் செய்தும் தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் நடத்தியபோதிலும் தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னடர்களைத் தமிழர்கள் துன்புறுத்தியதில்லை. எனவே, கன்னட இனவெறியர்கள் ஒருவேளை திருந்தியிருந்தால் அவர்கள்தான் கர்நாடகத்தில் இன ஒற்றுமை மாநாடு நடத்த வேண்டுமே தவிர, தமிழ்நாட்டில் நடத்த வேண்டிய தேவையில்லை! 

ஓசூர் பகுதியில் கன்னட இனவெறி அமைப்பு நடத்தத் திட்டமிட்டுள்ள கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு என்பது கன்னட இனவெறியர்களின் இன்னொரு வடிவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். இந்த மாநாட்டிற்கு அனுமதி மறுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். மீறுகின்றவர்களை எல்லையிலேயே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, தமிழர்களின் தற்காப்புக்கான இந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை யெனில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைத்து இம் மாநாட்டை நடத்த விடாமல் மறியல் செய்துத் தடுப்போம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அருள்கூர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி, இம்மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , , ,

வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர்! நீதிக்கு முரண்பாடு - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

Wednesday, January 13, 2021




வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே
உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர்!
நீதிக்கு முரண்பாடு

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 
வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் என்ற பெயரில் மோடி அரசு இயற்றியுள்ள மூன்று சட்டங்களும் உழவர் ஒழிப்புச் சட்டங்கள் என்பதை உணர்ந்து கொண்ட உழவர்கள், இந்தியா முழுவதும் அவற்றை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். 

வடமாநிலங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 50 நாட்களுக்கு மேலாக புதுதில்லியை முற்றுகையிட்டு உழவர் பெருமக்கள் வெற்றிகரமாகப் போராடி வருகிறார்கள். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சில வாக்குறுதிகள் கொடுத்து, போராட்டத்தை முடக்கி விடலாம் என்று முனைந்த மோடி அரசின் முயற்சியை உழவர் போராட்டம் முறியடித்துவிட்டது. 

உழவர் போராட்டத்தை முறியடிக்கும் அடுத்த உத்தியாக, உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு பயன்படுத்த முயல்வது வேதனைக்குரியது. 

உச்ச நீதிமன்றம் மூன்று சட்டங்களையும் செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஆணையை வெளியிட்டு, அத்துடன் மூன்று சட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்கான நான்கு பேர் அடங்கிய ஆய்வுக்குழுவையும் அமர்த்தி இருக்கிறது. இந்த நால்வரும் ஏற்கெனவே இம்மூன்று சட்டங்களையும் ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியவர்கள் என்பதை சமூக வலைத்தளங்களும், செய்தி ஏடுகளும் அம்பலப்படுத்தி விட்டன. 

இந்த நால்வரில் ஒருவரான பிரமோத் குமார் ஜோஷி என்பவர், “மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்க வேண்டும் என்பது முரணான கோரிக்கை” என்று நேற்றே (12.01.2021) ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அடுத்த உறுப்பினர் அசோக் குலாத்தி, மூன்று சட்டங்களையும் வரவேற்று, “மிகப்பெரிய துணிச்சலான நடவடிக்கைகள்; சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டங்கள் உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் பயன்படும்” என்று ஏற்கெனவே கூறியுள்ளார். மூன்றாவது உறுப்பினரான புபீந்தர்சிங் மான், “இந்தச் சட்டங்கள் வரவேற்கத் தக்கவை. இந்திய அரசு ஏற்கெனவே முன்மொழிந்துள்ள திருத்தங்களை நிறைவேற்றி விட்டால் முழுமையான பயன் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். 

இவ்வாறு இந்த மூன்று சட்டங்களையும் ஏற்கெனவே ஆதரித்து வரும் நபர்களைக் கொண்ட இந்த நால்வர் குழு நடுநிலையான குழு அல்ல என்பது வெளிப்படையான உண்மை. நடுநிலையற்ற ஒரு குழுவை இந்தியாவின் தலைமை நீதிமன்றம் அமைத்திருப்பது மிகமிக வேதனை அளிக்கிறது; அதிர்ச்சயளிக்கிறது! 

இந்தக் குழுவை முற்றிலுமாகப் புறக்கணிப்போம் என்று உழவர்களின் அனைத்திந்தியப் போராட்டக் குழுத் தலைவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது! மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்கிட போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது! 

தமிழ்நாட்டில் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும், இந்த மூன்று சட்டங்களையும் நீக்கிட வலியுறுத்தி சனநாயகப் போராட்டங்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதே இன்றைய தேவையாகும். உச்ச நீதிமன்றம் தனது முடிவை மறு ஆய்வு செய்து, நீதியைப் பாதுகாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

மூன்று சட்டங்களையும் நீக்கிட வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திவரும் போராட்டங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com


 


 

Labels: , ,

"யாழ் நினைவுத் தூண் எழுச்சி: இளையோரால் எதிர்காலம்!" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!


"யாழ் நினைவுத் தூண் எழுச்சி: 

இளையோரால் எதிர்காலம்!"


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை! 



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழ் பெண்ணைப் பாலியல் துன்பறுத்தல் செய்து தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய இந்திக்காரர்களைக் கைது செய்க! - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Tuesday, January 5, 2021


நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழ் பெண்ணைப் பாலியல் துன்பறுத்தல் செய்து தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய இந்திக்காரர்களைக் கைது செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!


நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டியில் உள்ள கே.கே.பி நூற்பாலையில் வேலை பார்க்கும் இந்திக்காரர்கள் அங்கு பணியாற்றும் இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததுடன், தட்டிக் கேட்ட தமிழ்த் தொழிலாளிகளையும் தாக்கியுள்ளனர். காவல் துறையில் புகார் கொடுத்தும் குற்றம் புரிந்த இந்திக்காரர்களைத் தங்கள் மாநிலம் செல்ல அனுமதித்துள்ளனர். காவல் துறையின் இச்செயல் கண்டனத்திற்குரியது.

கடந்த 1.1.2021 இரவுப் பணி நேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திக்கார இளைஞன் அப்போது தொழிற் சாலைப் பணியில் இருந்த தமிழ்நாட்டு இளம் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளான். அதைத் தடுத்துத் தட்டிக்கேட்ட மேற்பார்வையாளர் சரவணன், மேற்பார்வையாளர் வடிவேல் ஆகியோரையும் மற்ற தமிழ்த் தொழிலாளிகளையும் ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளிகள் அடித்துள்ளனர். இதில் மேற்பார்வையாளர் சரவணனுக்கு இலேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அந்தப் பணி நேரத்தில் ஜார்கண்ட் தொழிலாளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளார்கள். 

இது பற்றி கே.கே.பி. நூற்பாலை நிர்வாகத்திடம் தொழிலாளர்களும் மேற்பார்வையாளர்களும் புகார் கொடுத்தும் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழ்ப் பெண்ணை இழிவுபடுத்தி, தமிழர்களைத் தாக்கிய இந்திக்கார வன்முறையாளர்களுக்கு ஆதரவாகவே நிர்வாகம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த – அந்த நூற்பாலையில் வேலை செய்யும் தொட்டியம்  பகுதி தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் 2.1.2021 அன்று தொழிலாளிகளை வேலைக்கு ஏற்றிச் செல்ல வந்த ஆலையின் ஊர்திகளைத் தொட்டியத்தில் முற்றுகையிட்டுப் போராடியிருக்கிறார்கள். அதன் பிறகு காவல்துறையினர் தலையிட்டு வேன்களை விடுவித்து அனுப்பியிருக்கிறார்கள்.

தமிழ்ப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, தமிழ்த் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய ஜார்கண்ட் தொழிலாளிகள் மீது நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களை அவர்கள் மாநிலத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

இன்னும் மேற்படித் தொழிற் சாலையில் அசாம், ஒரிசா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். தொழிற் சாலை நிர்வாகம் தமிழர்களைத் தாக்கிய இந்திக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டிக்கத் தக்கது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்த் தொழிலாளிகளைத் தாக்கிய – தமிழ்ப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த ஜார்கண்ட் தொழிலாளிகள் எங்கிருந்தாலும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கு நடத்த வேண்டும் என்றும், மேற்படி கே.கே.பி நூற்பாலையில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளிகள் அனைவரையும் வெளியேற்ற ஆணையிட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்படி நூற்பாலைக்குத் தேவையான தொழிலாளிகளை அந்தப் பகுதியில் உள்ள ஊர்களிலிருந்து தமிழர்களைச் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தேவையான தொழிலாளிகளை – அப்பகுதியில் இருந்து பட்டியல் எடுத்துத் தர நாங்கள் கட்டணமின்றிப் பணியாற்றவும் உறுதி அளிக்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: , ,

தமிழ்த்தேசியம் - ஐயா பெ.மணியரசன் அவர்களின் கட்டுரை ஒலி வடிவில்!.


தமிழ்த்தேசியம் 



தமிழ்த்தேசக் குடியரசு எனும் நூலில் தமிழ்த்தேசியம் என்ற
 தலைப்பிலான கட்டுரையின் ஒலி வடிவம்.

ஐயா பெ.மணியரசன் அவர்களின் கட்டுரை ஒலி வடிவில்!.  




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

வேளாண் சட்டங்கள் அல்ல உழவர் ஒழிப்புச் சட்டங்கள்! பகுதி-4 - ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!

Monday, January 4, 2021


வேளாண் சட்டங்கள் அல்ல 

உழவர் ஒழிப்புச் சட்டங்கள்! பகுதி-4 



30.12.2020 அன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், மன்னார்குடியில் இயற்கை வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் ஐயா பெ.மணியரசன் அவர்களின் சிறப்புரையில் இருந்து நிறைவுப் பகுதி. 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

வர்ணாசிரம தர்மப்படி இந்தியாவின் முகத்தை மாற்றுகிறார் மோடி! பகுதி-3 - ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!

Saturday, January 2, 2021


வர்ணாசிரம தர்மப்படி இந்தியாவின் 

முகத்தை மாற்றுகிறார் மோடி! பகுதி-3 



30.12.2020 அன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், மன்னார்குடியில் இயற்கை வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஏழாம்      ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் ஐயா பெ.மணியரசன் அவர்களின் சிறப்புரையில் இருந்து மூன்றாம் பகுதி. 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்