<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தமிழ் இந்து? ஆரிய இந்து? - ஐயா பெ. மணியரசன் உரை!

Tuesday, June 29, 2021

தமிழ் இந்து? ஆரிய இந்து?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"மேதகு பார்த்தீர்களா" - பெ. மணியரசன் உரை!

Saturday, June 26, 2021

"மேதகு பார்த்தீர்களா"



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , , ,

தமிழர்களுக்குப் பீதியூட்டும் துக்ளக்கின் பொய்கள் - ஐயா பெ.மணியரசன் உரை!

Friday, June 25, 2021

தமிழர்களுக்குப் பீதியூட்டும் 

துக்ளக்கின் பொய்கள்



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க! - பெ. மணியரசன் வேண்டுகோள்!


திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு
சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் வேண்டுகோள்! 


திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில் ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப் பிறந்த “குற்றத்திற்காக”!

ஆம்! அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்த 78 பேரும் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்த குற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோ தளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவர்கள். இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் ஏதிலியராக (அகதிகளாக) ஏற்கப்பட்டவர்கள். 

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கலாம். 

ஒருவர் இறந்துவிட்டார்

மேற்கண்ட வகைகளில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்து முழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று இறந்து விட்டார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு அரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறிக் கொண்டு போராடுகிறார்கள் 

அதுபோன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிட வேண்டும் என முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: ,

தேசம் படும்பாடு! - ஐயா பெ. மணியரசன் உரை!

Monday, June 21, 2021

தேசம் படும்பாடு!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

நீட் தேர்வு சேவல் சண்டை! - ஐயா பெ. மணியரசன் உரை!

நீட் தேர்வு சேவல் சண்டை!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"துரைமுருகன் கைது ஏன்?" 'எமது தேசம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Saturday, June 12, 2021

"துரைமுருகன் கைது ஏன்?"


'எமது தேசம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது! - பெ. மணியரசன் அறிக்கை!

 



பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


“சாட்டை” வலையொளி ஊடகவியலாளர் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருச்சி காவல்துறையினர் நேற்று (11.06.2021) இரவு சிறையில் அடைத்திருப்பது முற்றிலும் சனநாயக மறுப்புச் செயலாகும்; வன்மையான கண்டனத்திற்குரியது! 

திருச்சியில் “சமர் கார் ஸ்பா” நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தமிழீழத் தேசியத் தலைவர் – தமிழர்களின் பெருமைக்குரிய மேதகு வே. பிரபாகரன் அவர்களைக்  கொச்சைப்படுத்தி, சுட்டுரை(Twitter)யில் கருத்து வெளியிட்டார். 

பிரபாகரன் அவர்களை மேற்படி வினோத் கொச்சைப்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? பிரபாகரன் அவர்களோ, விடுதலைப் புலிகளோ தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு கருத்துகள் கூறியதில்லை. அவர்கள் தமிழ்நாட்டு தலைவர்களை இழிவுபடுத்தியும் கருத்துகள் வெளியிட்டதில்லை.  

அண்மைக் காலமாகக் கலைஞர் கருணாநிதி அவர்களை கடுமையாக விமர்சித்து சிலர் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு எதிர்வினையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி சிலர் கருத்துகள் வெளியிடுகிறார்கள். 

கலைஞர் மீது எழுப்பப்படும் திறனாய்வுகள் அல்லது கொச்சைப்படுத்தல்கள் ஆகியவற்றிற்கு கலைஞர் அன்பர்கள் எதிர்வினையாற்றும்போது, யார் அவ்வாறு கலைஞரை பேசினார்களோ அவர்களை அல்லது அவர்களுடைய அமைப்பை விமர்சனம் செய்வது இயல்பானது. அதற்காக, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் உயர்மதிப்பிற்குரிய – தமிழினத்தின் பெருமைக்குரிய சின்னமாக விளங்கக்கூடிய மேதகு பிரபாகரன் அவர்களை கொச்சைப்படுத்துவது முற்றிலும் முரணானது! கண்டனத்திற்குரியது!

பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி சுட்டுரை வெளியிட்ட வினோத் என்பவரை “சாட்டை” துரைமுருகன் உள்ளிட்ட நால்வரும் காவல்துறையினரின் முன்னிலையில் சந்தித்து, நடந்த விவரங்களை எடுத்துச் சொல்லி மேற்படி வினோத் தமது தவறை உணரும்படிச் செய்துள்ளார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் காவல்துறையினர் முன்னிலையில் பதிவான வினோத்தின் வருத்தம் தெரிவிக்கும் கருத்து உள்ளது. 
இந்நிலையில், சட்டவிரோதமாகக் கூடியது, சட்டவிரோமதாக நுழைந்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தாக்கியது போன்ற பிணை மறுப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் இரவோடு இரவாக மேற்படி துரைமுருகன் உள்ளிட்ட நால்வரையும் தளைப்படுத்தி சிறையில் அடைத்திருப்பது, அதிகாரத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்திய அத்துமீறலாகும்! இதில், ஆளுங்கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்களின் அழுத்தம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். 

இந்தத் தவறான போக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு திருத்த வேண்டும். பழிவாங்கும் நோக்கில் துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதும் போட்ட வழக்கைக் கைவிட்டு அவர்கள் நால்வரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: , ,

முதல்வர் மு.க. ஸ்டாலின் மடலில் ஒன்றியமும் தேசமும் - பெ. மணியரசன்

Wednesday, June 9, 2021



முதல்வர் மு.க. ஸ்டாலின் 
மடலில் ஒன்றியமும் தேசமும்

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பெருந்தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், சிறு – குறு – நடுத்தரத் தொழில் முனைவோரும், சிறு கடனாளர்களும் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு வாங்கிய ஐந்து கோடி ரூபாய் வரை பாக்கியுள்ள கடன் தவணைகளில் நடப்பு நிதியாண்டில் (2021 – 2022) முதல் இரு காலாண்டுகளில் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்தாமல் தள்ளி வைக்க இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். 

இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசுக்கு அனுப்புமாறு கேட்டு, ஆந்திரப்பிரதேசம், பீகார், சத்தீசுகட், டெல்லி, ஜார்கண்ட், கேரளம், மகாராட்டிரம், ஒடிசா, பஞ்சாப், இராசஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் மடல் எழுதியுள்ளார். 

இம்மடலில் மு.க. ஸ்டாலின் இந்திய அரசு, ஒன்றிய அரசு என்ற சரியான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். நடுவண் அரசு (மத்திய அரசு) என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை!

ஆனால், இச்செய்தியை 09.06.2021 அன்று வெளியிட்ட ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகள் மத்திய அரசு என்ற சொல்லையே பெரும்பாலும் பயன்படுத்தின. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி ஒன்றிய அரசு என்றோ, அல்லது இந்திய அரசு என்றோ பயன்படுத்துவது சட்டப்படியான வடிவமாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, ஒற்றையாட்சிக்குரிய “மத்திய அரசு” என்ற சொல்லைப் பயன்படுத்தியது  சரியன்று.  

காட்சி ஊடகங்களும், ஏடுகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்திய ஒன்றிய அரசு, இந்திய அரசு என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது இதழியல் அறமாகாது! 

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கட்கு ஓரு வேண்டுகோள்

நீங்கள் 12 முதலமைச்சர்களுக்கு எழுதிய மடலில் ஒன்றிய அரசு – இந்திய அரசு என்று பயன்படுத்திய சிறப்பிற்குப் பாராட்டுகள். அதேவேளை, அதே மடலில் “அனைத்திந்திய முடக்கம்” (All India Lockdown) என்று சொல்ல வந்த இடத்தில் “தேசம் தழுவிய முடக்கம்” (Nationwide Lockdown) என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நீண்டகாலப் பழக்கத்தின் காரணமாக இக்குறைபாடு வந்திருக்கலாம். 

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் (Nation) என்று குறிப்பிடவில்லை. இதுபோன்ற “தேசந்தழுவிய” (Nationwide) என்ற சொற்களைப் பயன்படுத்தாமலும் தவிர்க்க வேண்டுமாய்க் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து, தங்களின் இம்மடலை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்புத் துறையினர் ஆங்கிலத்தில் தங்கள் கடிதத்தை அப்படியே போட்டுள்ளனர். ஆனால் தமிழில், கடித விவரங்களைச் சுருக்கமாக அவர்கள் நடையில் எழுதி வெளியிட்டுள்ளனர். தமிழிலும் அசல் மடலை அப்படியே வெளியிடுவதே, தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்ட அரசின் கட்டாயக் கடமை என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,

"தமிழ்நாட்டுக்கு மூன்றாகப் பிரிக்க சதி!" - "ழகரம்" ஊடகத்துக்கு ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Tuesday, June 8, 2021

"தமிழ்நாட்டுக்கு மூன்றாகப் பிரிக்க  சதி!"


"ழகரம்" ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன்  நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"ஓளரங்க சீப் - ராபர்ட் கிளைவ் தான் இந்தியாவின் தந்தைகள்" "அரண் செய்" ஊடகத்துக்கு ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"ஓளரங்க சீப் - ராபர்ட் கிளைவ் தான் இந்தியாவின் தந்தைகள்"

"அரண் செய்" ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன்  நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

இன்று இலட்சத் தீவு! நாளை தமிழ் நாடா? - ஐயா பெ. மணியரசன் உரை!

Saturday, June 5, 2021

இன்று இலட்சத் தீவு!
நாளை தமிழ் நாடா?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"சு.சாமி - ஜக்கிக்கு அஞ்சி பி.டி.ஆரை அடக்குகிறாரா ஸ்டாலின்?" - "ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Friday, June 4, 2021

"சு.சாமி - ஜக்கிக்கு அஞ்சி பி.டி.ஆரை அடக்குகிறாரா ஸ்டாலின்?"


"ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , , ,

கல்விக் கட்டண பாக்கிக்காகத் தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும்! பெ. மணியரசன் வேண்டுகோள்!

Thursday, June 3, 2021



கல்விக் கட்டண பாக்கிக்காகத் தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 பெ. மணியரசன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளன. அதே வேளை கட்டணம் செலுத்திய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளன. அத்துடன் உங்கள் பெற்றோர்களிடம் சொல்லி உடனே கட்டணம் செலுத்துங்கள் என்று அக்கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளன.

தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இவ்வாறு  கல்விக் கட்டண பாக்கிக்காக தேர்வு முடிவுகளை தெரிவிக்காமல் நிறுத்திவைத்தது, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி குழு (AICTE)-வின் வழிகாட்டலுக்கு எதிரான செயல் ஆகும். கொரோனா பெருந்தொற்று முடக்கக் காலத்தில் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், கட்டணம் செலுத்த வில்லை என்பதற்காக அவர்களைப் பழிவாங்கக் கூடாது என்றும் அனைதிந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஏற்கெனவே எச்சரித்துள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து புகார் அனுப்பி தங்கள் பிள்ளைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்படு செய்யுமாறு கோரியுள்ளனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அம்முடிவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். கிராமப்புற மற்றும் நகர்புறங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சொத்து, வருமானம் போன்ற எவ்வகை நிபந்தனையும் இல்லாமல் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வங்கிகள் மூலம் கல்விக் கடன் கிடைக்க முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்தால், அதைக்கொண்டு மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்.  மேலும் வழக்கமான கல்விக் கட்டணத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கும் ஏற்பாட்டையும் முதலமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்