<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" *தோழர் வைகை மு.கருப்பையா அவர்கட்கு வீரவணக்கம்!*" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் *பெ.மணியரசன்*

Wednesday, November 22, 2023


 *தோழர் வைகை மு.கருப்பையா அவர்கட்கு வீரவணக்கம்!*

=============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் *பெ.மணியரசன்*
=============================================


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மூத்த தோழர் வைகை மு.கருப்பையா அவர்கள் இன்று (22.11.2023) காலை காலமான செய்தி பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் தருகிறது. பல்லாண்டு சிறை வாழ்க்கையில், மார்க்சிய – லெனினிய அரசியல் பயின்று, புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டாக தோழர் தியாகு, தோழர் லெனின் போன்ற தோழர்களுடன் சி.பி.எம் கட்சியில் இணைந்து சிறையிலிருந்து வெளியில் வந்தவர் தோழர் கருப்பையா! தமிழ்த்தேசியத் திசைவழியை ஏற்ற தோழரானார். பின்னர் அவரும் அவருடைய நெருங்கிய தோழர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் இணைந்தனர்.
உறுதிமிக்கத் தமிழ்த்தேசியராக சமூக நிகரமைச் சமநிலையாளராக – இளந்தோழர்களுக்கு நல்வழிகாட்டியாக விளங்கினார். திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கையில் வரும் கூடுதல் சுமைகளைச் சுமந்தார். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தோழர்களுடன் உற்சாகமாகப் பழகுவார்; தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஊக்குவிப்பார்.
அன்புத் தோழர் மு.க.அவர்களின் மறைவு தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தோழர் வைகை மு. கருப்பையா அவர்களுக்கு வீரவணக்கம்! அவரின் சக தோழர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்