<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"திருப்பனந்தாள் காசிமடம் ஆக்கிரமித்துள்ள பொய்கைக் குளத்தை அரசு மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, November 3, 2023


திருப்பனந்தாள் காசிமடம் ஆக்கிரமித்துள்ள

பொய்கைக் குளத்தை அரசு மீட்டு
மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
===================================


தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் உள்ள காசி மடாதிபதி அதிபர் முத்துக்குமார சாமி அவர்களின் நிர்வாகம், அவ்வூர்ப் பொய்கைக் குளம் என்ற பொதுக் குளத்தை ஆக்கிரமித்து, அக்குளத்தைச் சுற்றிலும் மதில் சுவர் எழுப்பி பொது மக்கள் பயன்பாட்டைத் தடுத்துள்ளது. இந்த மதில் சுவரை இடித்து, வழக்கம் போல் மக்கள் பயன்பாட்டிற்குக் குளத்தைத் திறந்துவிட வேண்டும் என்று ஊர் மக்கள் கோரி வருகின்றனர். அவ்வூரைச் சேர்ந்தவரும் தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன் அவர்கள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், திருவிடைமருதூர் வட்டாட்சியர், திருப்பனந்தாள் பேரூராட்சித் தலைவர் எனப் பலருக்கும் இக்கோரிக்கையை வலியுறுத்திக் கடிதம் அனுப்பி இருக்கிறார்; அதிகாரிகளிடம் நேரிலும் பேசியுள்ளார்.

ஆனால், திருப்பனந்தாள் காசி மடாதிபதி அவர்கள் அப் பொய்கைக் குளம் தங்களின் மடத்திற்குச் சொந்தமானது என பிடிவாதமாகக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அக்குளத்தைச் சுற்றி மதில் எழுப்பி ஊர் மக்கள் பயன்படுத்தாமல் தடுத்துவிட்டார்.

இதுபற்றி 12.09.2023 அன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் முன்னிலையில் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன் தரப்பினர் மற்றும் திருப்பனந்தாள் காசி மட மேலாளர் நாதன், திருப்பனந்தாள் பேரூராட்சித் தலைவர் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோரிடையே நடந்த அமைதிப் பேச்சின்போது, மேற்படி பொய்கைக் குளம் மற்றும் அதையொட்டிச் செல்லும் இடும்பன் சாலை ஆகியவை வருவாய்த்துறை ஆவணங்களில் அரசு புறம்போக்கு என்று குறிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அன்றிலிருந்து ஒரு மாதத்திற்குள் திருப்பனந்தாள் பேரூராட்சியினர் மேற்படி குளத்தை கைப்பற்றி, அதைப் பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவானது. இம்முடிவினை எழுத்து வடிவில் அறிவித்து, அதில் வட்டாட்சியர் கையொப்பமிட்டுள்ளார்.

ஆனால், ஒரு மாதம் (12.10.2023) கடந்தும் நவம்பர் மாதம் பிறக்கும் வரை பொய்கைக் குளம் மற்றும் இடும்பன் சாலை ஆக்கிரமிப்பை காசி மட நிர்வாகம் காலி செய்யவில்லை. அரசு அதிகாரிகளும், பேரூராட்சியும் தலையிட்டு மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

இந்நிலையில், மேற்படி ஆக்கிரமிப்பு மதில் சுவர்களை யாரோ சிலர் இடித்துள்ளார்கள். ஒருவரைக் காவல்துறைக் கைது செய்யதுள்ளது. வருவாய்த்துறையும், பேரூராட்சியும் ஒப்புக் கொண்டு, கையெழுத்துப் போட்ட 12.09.2023 முடிவுப்படி ஆக்கிரமிப்புச் சுவர்களை ஏன் அகற்றவில்லை? இது அரசுத் தரப்பின் குறைபாடு! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்படுகிறது.

பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய குளத்தையும் சாலையையும் திருப்பனந்தாள் காசிமடம் ஆக்கிரமித்திருப்பதும், அரசுத் தரப்பினர் அதைக் காலி செய்துத் தர கூறியும் ஆக்கிரமிப்பைத் தொடர்வதும் எல்லா வகையிலும் அநீதி! சிவநெறிக்கும் புறம்பானது.

சிவநெறிச் சான்றோர்கள் “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்று சேக்கிழார். பெரிய புராணத்தில் கூறுகிறார். அப்பர் பெருமான் அப்படித்தான் வாழ்ந்தார். ஆனால் திருப்பனந்தாள் காசிமடம் ஆணவம் பிடித்த ஜமீன்தார் போல் நடந்த கொள்வது சிவநெறிக்கு முற்றிலும் முரணானது.

தமிழ்நாடு அரசு தலையிட்டு, மேற்படி திருப்பனந்தாள் பொய்கைக் குள ஆக்கிரமிப்பை நீக்கி, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்