"சைதையார் அவர்களே, ஆறாத் துயருடன் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்!" --- பெ. மணியரசன் தலைவர் , தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Tuesday, February 13, 2024
சைதையார் அவர்களே,ஆறாத் துயருடன் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்!
பெ. மணியரசன்
தலைவர் , தமிழ்த்தேசியப் பேரியக்கம் தஞ்சாவூர்
13.02.2024
==========≠======================================================
ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு ஆட்சித் துறையில் அனைத்து வகைப் பணிகளும் பதவிகளும் கிடைப்பதற்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சியளித்து அவர்களை உயர்வடையச் செய்த ஐயா சைதை துரைசாமி அவர்களின் ஒரே பிள்ளையான வெற்றியின் உயிரை சட்லெஜ் ஆறு பறித்துக் கொண்டது பேரதிர்ச்சி; பெரும் துயரம்!
சைதையார் தமது மன வலிமையைக் கொண்டு, தமது சிந்தனைத் திறனைக் கொண்டு, தன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.
சைதையார் அவர்களே,நீங்கள் தனி நபர் அல்லர் ! உங்கள் உதவியால், பயிற்சியால் வாழ்வில் உயர்வைடைந்த பிள்ளைகளும் ,உங்களின் பண்பால் கிடைத்த நண்பர்களும் சைதையார் என்ற ஆலமரத்தின் விழுதுகள்!
இப்போது ஏற்பட்டுள்ள மகன் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்! ஆனால் இவ்வாறான இழப்புகள் உலகெங்கும் மனிதர்களுக்கு அன்றாட நிகழ்வுதான்!
வெற்றியின் அம்மாவான உங்கள் வாழ்க்கை இணையர் மற்றும் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரையும் தேற்றுவது உங்கள் பொறுப்புதான்!
ஆறாத் துயரத்துடன் உங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், இரங்கல், இரங்கல்!
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்