<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"சாந்தனுக்கு வீரவணக்கம் ! தமிழ்த்தாயே கண்ணீரைத் துடைத்துக் கொள்!"

Wednesday, February 28, 2024

==============================================

சாந்தனுக்கு வீரவணக்கம் !

தமிழ்த்தாயே கண்ணீரைத் துடைத்துக் கொள்!
==============================================

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சாந்தனையும் மற்றவர்களையும் உச்சநீதிமன்றம் விசாரித்து விடுதலை செய்தது. அவர்களை விடுதலை செய்ய இந்தியமும் திராவிடமும் மறுத்து, சிறையை விடக் கொடிய திருச்சி சிறப்புத் தடுப்புக்குள் அடைத்து வைத்தன.

கடுமையான நோய்வாய்ப்பட்டுத் துன்புற்று வந்த சாந்தன் இன்று ( 28. 2.2024) காலை சென்னை தலைமை (ராசீவ் காந்தி) மருத்துவமனையில் காலமானார்.

ராசீவ் காந்தி கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் வேறொரு சாந்தன் ! தன்னைத் தேடிக்காவல்துறையினர் வருகிறார்கள் என்பதை அறிந்த அந்த சாந்தன் திருச்சியில் சயனைட் குப்பி கடித்துத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
ஆனால் கணக்குக் காட்டுவதற்காக இந்தப் சாந்தனை பிடித்து வழக்கில் சேர்த்துத் தண்டனை வாங்கி கொடுத்தனர்.

சட்டம் தந்த சலுகை கூட தமிழர்களுக்கு இல்லை என்று முடிவு செய்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர்களை இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் கடுங்காவல் தடுப்புக்குள் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களில் சாந்தனை இயற்கை "விடுதலை" செய்து விட்டது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை காவு கொண்டவர்களுக்கு இது எம்மாத்திரம் !

பாரதமாதாவின் பவித்திர புத்திரர் மோடிஜிக்கு ஜே ! திராவிடத் தாயின் செல்ல மகன் மு.க ஸ்டாலின் வாழ்க!

தமிழ்த் தாயே கண்ணீரை துடைத்துக் கொள்! காலம் மாறும் !
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
 

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்