<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்புக்கு விசுவாச ஊழியம் செய்கிறாரா மோடி...?" ---- விகடன் இணையதள முடக்கத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

Monday, February 17, 2025



அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்புக்கு
விசுவாச ஊழியம் செய்கிறாரா மோடி?
===============================
விகடன் இணையதள முடக்கத்திற்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
===============================


இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்புடன் அமர்ந்து வாசிங்கடனில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்ருந்த அதேநேரத்தில், வடஅமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறி வேலை பார்த்து வந்த இந்தியர்களை கைவிலங்கு மாட்டி விமானத்தில் அனுப்பி வெளியேற்றியது வடஅமெரிக்க அரசு. இந்த நிகழ்வைக் கண்டிக்கும் வகையில் ஒரு கேலிச் சித்திரமாக வெளியிட்டது விகடன் இணையதளம்!

முறையான குடியுரிமை இல்லாமல் வடஅமெரிக்காவில் தங்கி வேலைகள் பார்த்த இந்திய நாட்டினரை இழிவுபடுத்தும் வகையில், வானூர்திக்குள் இருப்போர்க்கு விலங்கு மாட்டிக் கொண்டு வந்து பஞ்சாபில் இறக்கிவிட்ட அமெரிக்காவின் அநாகரிகத்தை – இந்தியாவிற்கு அமெரிக்கா இழைத்த இழிவை சுட்டிக் காட்டும் வகையில், டிரம்புடன் பேசிக் கொண்டிருக்கும் மோடியின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பது போல், அந்தக் கார்ட்டூனில் படம் போட்டுள்ளார்கள். இந்திய நாட்டு மக்களுக்கேற்பட்ட மன வலியைச் சுட்டிக்காட்டுவதே இக்கருத்துப் படத்தின் நோக்கம்! இது குற்றமா? குற்றம் இல்லை!

மோடி – டிரம்ப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும், இரண்டாவது முறையாக அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களுக்கும் கைவிலங்கு போட்டுதான் அழைத்து வந்துள்ளார்கள்.

ஆனால், நரேந்திர மோடி அரசு டொனால்டு டிரம்புக்கு விசுவாச ஊழியம் செய்யத் தயார் என்று உறுதி செய்வதுபோல், மோடி அரசு விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளது. இந்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது! இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரானது!

உடனடியாக விகடன் இணையதளம் மீதான தடையை நீக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

 

Labels: , , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்